மௌனமான நேரம்

 

Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Thursday, 7 October 2010

நண்பனின் மனைவி

Posted by மௌனமான நேரம் | Thursday, 7 October 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்

சாயங்காலம் சரியா 4 மணி இருக்கும்... 

"டேய் கணேஷ், அவன் என்னை திட்டிட்டு போயிட்டான்டா மச்சான்"

பக்கத்துக்கு வீட்டு  செல்லதுரை அலறி அடிச்சி, கணேஷ் வீட்டை நோக்கி ஓட,

"எவன்டா மச்சான்"

- இன்னு கணேஷ் மாடி படி குதிச்சு ஓட, தெருவே அமர்களமாகி போச்சு...

கணேஷ், செல்லதுரை இரண்டு பேரும் சின்ன வயசு நண்பர்கள்.....மில்டரி- ல இருந்து செல்லதுரை வந்து கிட்ட தட்ட ரெண்டு வருஷம் ஆச்சு.....

அன்று,

"ஒரே தட்டுல சாப்படுற நாய்களா, இப்படி நான்டுகிட்டு  நிக்குதுங்க..!"

- பெருசு ஒன்னு புலம்பிட்டு  போறது கேட்டு...

"யோவ் பெருசு, என்ன புலம்பிட்டு?"

பக்கத்துக்கு வீட்டு ராமசாமி பொண்டாட்டி கேட்க...

"இல்லம்மா.....இந்த மாடி வீடு செல்லதுரை இல்ல......"

"...நல்லத்தான இருந்தான், என்ன ஆச்சு அவனுக்கு ...."

"அவனுக்கு ஒன்னும் இல்ல புள்ள ....."

"அப்பறம் என்னவாம்?"

"எப்பவும் ரெண்டு நாயும் சேந்து, எவன்கிட்டையாவது  மல்லுக்கு நிக்கும்...இன்னக்கு ஒன்னுக்கு ஒன்னு வேட்டிய மடிச்சுகிட்டு......"

"...."

"புள்ள, என்ன அப்படி பாக்குத....நிசம் புள்ள..."
"சொல்லுத கேளு....."


 "டேய் கணேஷா!!.....கணேஷா!!...."  -   செல்லதுரை கூப்பிட,

"என்னடா மாப்பிள்ளை!..." இன்னு கணேஷ்....

"மச்சான்,  கொஞ்சம் கட்டிங்-டா மச்சான்..வா டவுன் போலாம்....."

"இதோ வாரேண்டா மாப்பிள்ளை!..."

சொன்ன கணேஷ், பட பட இன்னு மாடி படி ஏற,

"என்னெங்க எங்க அவசரமா? ...."

"இதோ டவுன்  வர.."

" என்னெங்க, கொஞ்சம் வீட்டுல இருக்க கூடாதா?"

"இல்லடி  இதோ வந்துடுறேன்..."

" ...ம்ம்"

" நீங்க வீட்லேயே கொஞ்சம் ட்ரிங்க்ஸ் சாப்பிடுங்க ...."

" அப்போ செல்லதுரை ....?"

"...ம்ம், சரி... ஆனா....!!"

"என்னடி ஆனா...?"

"ஆனா....!! லிமிட்டா இருக்கணும்"...

"டேய் கணேஷ் ....இன்னைக்கு நம்ம வீட்டுல பார்ட்டி...."

செல்லதுரை  சொல்ல,கணேஷ்மும் தலைய ஆட்ட ......

பார்ட்டி ஆரம்பம் ....

"......"

"......"

" கொஞ்சம் போதும்டா மச்சான்..."

" இல்லடா மாப்பிள்ளை, இன்னும் ஒரு ரவுண்டு ...."

"... ருக்கு ....ருக்கு .."   கணேஷ் கூப்பிட,

கணேஷ் பொண்டாட்டி,

".. என்னெங்க.."

".. கொஞ்சம் ஊறுகாய் குடு புள்ள ...."

ருக்கு ஊறுகாய் கொண்டு வைக்க, செல்லதுரை ருக்கு கையே பார்த்திட்டு இருந்தான் ...

அடுத்த ரூம்க்கு ருக்கு போயிட்டா...

" என்னடா மச்சான், எப்படி பார்க்கற?"

" இல்லடா , ஒன்னும் இல்ல..."

அடுத்த ரவுண்டுமும் ஓவர் ......


"... ருக்கு ....ருக்கு .." கணேஷ் மறுபடியும் கூப்பிட,

".. என்னெங்க.."
 
".. இன்னும் கொஞ்சம் ஊறுகாய் குடு புள்ள ...."


ருக்கு ஊறுகாய் கொண்டு வைக்க, செல்லதுரை ருக்கு கையே திரும்ப திரும்ப பார்த்திட்டு இருந்தான் .......

திடீருன்னு செல்லதுரை, ருக்கு கையை பிடிச்சு இழுக்க,  அழுதுகிட்டே அடுத்த ரூம்க்கு ருக்கு போயிட்டா...ருக்கு .....

 " வெளிய போடா நாயே!!!" .... கணேஷ் கத்த....

"ஆரம்பிச்ச சண்டை,  ஒன்னுக்கு ஒன்னு வேட்டிய மடிச்சுகிட்டு மல்லுக்கு நிக்குதுக....."  இன்னு பெருசு சொல்லிகிட்டே நடக்க,

"என்ன பொழப்பு .."  இன்னு ராமசாமி பொண்டாட்டி சொன்னது நாம காதுக்கு கேட்டுச்சு....

Tuesday, 17 August 2010

வெளிச்சத்திற்கு வரும் முன்....

Posted by மௌனமான நேரம் | Tuesday, 17 August 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
ஒரே இருட்டாயிருக்கே.... சுத்தி முத்தி ஒண்ணுமே தெரியலியே..

ஏதோ சத்தம் மட்டும் கேக்குது...

குரல் 1: எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.. இனி நீ ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். நல்ல சாப்பிடணும். உடம்ப பாத்துக்கணும். உன்ன பாத்துக்கறது மட்டும் தான் என் வேலை இனி.

குரல் 2: அழுகை...

குரல் 1: எப்போவும் சந்தோஷமா இருக்க சொல்றேன். நீ அழறியா??

குரல் 2: இல்லங்க இது சந்தோசம்.. சரி கொழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்??

குரல் 1: நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்.. பையனா இருந்தா சுந்தர். பொண்ணாயிருந்தா சுந்தரி.

குரல் 2: ம்ம்.. :) சரி.. அம்மா அப்பா ன்னு கூப்பிட சொல்லலாமா இல்லை டாட் மாம் ன்னா?

குரல் 1: அம்மா அப்பாவே சொல்லலாம்.. எனக்கு அதுதான் பிடிக்கும். உனக்கு?

குரல் 2: எனக்கும் தான்.

அம்மா.. அப்பா வா... ம்ம்.. என்னக்கும் பிடிச்சிருக்கு... நீங்க எப்படி இருப்பீங்க? என்னக்கு உங்கள பாக்கணும்னு ஆசையா இருக்கு..

2 மாதங்களுக்கு பின்....

குரல் 1: மெதுவா மெதுவா.. ஸ்கேன் சிம்பிள் ஆ முடிஞ்சிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார். நானும் கூட இருக்கலாமாம். என்னக்கு ஒரே குஷியா இருக்கு.

குரல் 2: என்னாகும் தாங்க. ஆனா கொஞ்சம் பயமாவும் இருக்கு.

குரல் 1: சீ சீ. .. பயப்படாதே.. சும்மா டெஸ்ட் தானே.

நீங்க என்னை பாக்க போறீங்களா..... ம்ம்.. எனக்கு ரொம்ப ரொம்ப குஷியா இருக்கு...

4 மாதங்களுக்கு பின்..

குரல் 1: என்னங்க குழந்தை உதைக்குதுங்க.. ஹ ஹ ஹ ஹி.. ஹி .. ஹி...

குரல் 2: எங்க ... எங்க.... அதுக்குள்ள வா... பையன் தான் போல... இப்போவே குறும்பு பாரேன்...

குரல் 1: உங்கள மாதிரி தானே இருக்கும்..

அம்மா.. அப்பா... நான் தான்... சந்தோசத்துலே குதிச்சிட்டு இருக்கேன்..... ஹ ஹ ஹ ஹ ஹ...

சில நாட்களுக்கு பிறகு..

குரல் 1: என்னங்க ரொம்ப தல சுத்துது... (மயங்கி சாய்கிறாள்.)

குரல் 2: என்னம்மா... என்ன ஆச்சி????

பலவேறு சத்தங்கள்....

குரல் 1: டாக்டர் .. என்னாச்சி டாக்டர்??

குரல் 2: சாரி சார். அபோர்ஷன் ஆயிடிச்சி..

குரல் 1: ரொம்ப பத்திரமா தானே இருந்தோம்... எப்படி. ..?

குரல் 2: சரியான காரணம் தெரியலே... மருந்து எழுதி தரேன் சரியா சாப்பிட சொல்லுங்க. அவங்க கூடவே இருங்க...

(விசும்பலோடு ) அப்பா.... அம்மா..... உங்களை பாக்கணும் உங்க கூட விளையாடனும்னு நினைச்சேனே.... முடியவே முடியாதா.... நான் என்ன பண்ணுவேன்... !!!!!!!!!!!!!!!!!

யார் இது?

Wednesday, 26 August 2009

மனசு ஒத்து பிரிஞ்சிடலாம்!!!!!!

Posted by மௌனமான நேரம் | Wednesday, 26 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
நான் சுகந்தன். ஒரு வக்கீல். தெரிஞ்சோ தெரியாமலோ , விரும்பியோ விரும்பாமலோ நான் ஒரு விவாகரத்து specialist ஆகிட்டேன். இத சொல்றதுக்கு எனக்கு சத்தியமா பெருமை இல்ல. ஆனா இந்த நிமிஷம் வரை வருத்தமாவும் இல்ல. இப்போ திடீர்னு ஏன் வருத்தம்? எல்லாத்துக்கும் காரணம் என உயிர் நண்பன் வினோத் தான். வினோதினியும் தான்.

நான், வினோத், வினோதினி மூவரும் ஒரே ஊரில் பிறந்து, ஒரே தெருவில் உருண்டு புரண்டு, ஒரே பாலர் பள்ளியில் சேர்ந்து, சேர்ந்து படித்து, சேர்ந்து விளையாடி, சேர்ந்து சண்டை போட்டு, ஒரே மாங்காயை காக்கை கடி கடித்து, இப்படி சேர்ந்து சேர்ந்து வளர்ந்தோம். ஆனால் மேற்படிப்பு என்று வரும்போது நான் வக்கீல் ஆனேன். அவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆனார்கள். இதற்கிடையில், அவர்களுக்குள்ளே காதலும் வளர்ந்தது.

எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் அவர்களை பார்த்து ஆச்சரியப்படாத, பொறாமைபடாத ஆளே கிடையாது. பெயரிலிருந்து செயல் வரை எல்லாவற்றிலுமே அப்படி ஒரு பொருத்தம். அவர்கள் இருவருக்கும் பெரிய சண்டை வந்து கூட நாங்கள் பார்த்தது இல்லை. ரெண்டு பெரும் மாறி மாறி வினும்மா என்று கொஞ்சுவதை எல்லோரும் கேலி செய்தாலும் ரொம்ப ரசிப்போம் என்பது தான் உண்மை.

அவர்கள் பெற்றோருக்கும் இவர்கள் காதலில் எதிர்ப்பு ஒன்றும் இருக்கவில்லை. சாதி, மதம், அந்தஸ்து என்று எல்லாவற்றிலுமே ஒரே நிலையில் இருந்தது தான் காரணமோ என்னமோ தெரியவில்லை. எது எப்படியோ, ஆசைப்பட்டு காதலித்து , ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணமும் பண்ணி... ஹ்ம்ம்.. முன்னெல்லாம் ஒரே ஊரில் இருந்ததால் எப்போதும் சேர்ந்தே இருந்தோம். வேலை என்று வந்த பிறகு வெவ்வேறு ஊர்களில் இருக்க வேண்டியது வந்தது. ஆனாலும், கண்டிப்பாக 2 நாளுக்கு ஒரு முறையாவது பேசிவிடுவோம். ஆனால் அவர்கள் கல்யாணத்திற்கு பிறகு அது மாதம் ஒரு முறை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று ஆகி இப்போ இன்னும் குறைந்து விட்டது.

அந்த வினோத் தான் இன்று என்னை பார்க்க வந்திருக்கிறான்.

'டேய்.. ரொம்ப நாள் ஆச்சி பாத்து.. போன் பண்ணனும்னு நினைக்கிறேன்,,, ஆனா பண்ண முடியறதில்லை.. ரொம்ப சந்தோஷம்டா ... '..

நானே பேசிகொண்டிருந்தேன்... இப்போதுதான் கவனித்தேன்.. அவன் முகம் வாடியிருப்பதை..

'ஏன்டா எதாவது பிரச்சனையா? வினு எங்கே? வரலியா? என்ன??' பதட்டம் தொற்றி கொண்டது.

'அவ வரமாட்டா!!'

' அவளுக்கு உடம்புக்கு எதாவது????'

'உடம்பெல்லாம் கொழுப்பு அதிகமானது தவிர நல்லா தான் இருக்கா ...'

'என்னடா இந்த வயசிலேயே cholestrol-எ . டாக்டர் கிட்ட போனீங்களா ?'

'ஏன்டா நீ வேற... கல்லு மாதிரி நல்லா தான் இருக்கா...'

'சண்டையா?

'ஒத்து வராதுடா.. அதான் உன்கிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்'

'என்ன விளையாடரியா? '

'இல்லடா சீரியஸ் தான் பேசறேன். ஒத்து வராதுன்னு ஆயிடிச்சி. அதான் ரெண்டு பெரும் மனசு ஒத்து பிரிஞ்சிடலாம்னு...'

நானும் அவன்கிட்ட எவ்வளவோ பேசி பார்த்தேன். அவன் கொஞ்சம் கூட பிடி தளர்த்தவே இல்ல. நான் நொந்து போனது தான் மிச்சம். எவ்வளவு கேட்டும் 'ஒத்துவராது' ன்னு மட்டும் தான் சொல்றான். ஏன் ன்னு சொல்ல மாட்டேங்கறான்.

'சரி. நீ இப்போ கிளம்பு. நான் நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்'.

'நான் நாளைக்கு லீவ் தான் 10 மணிக்கு வா, அப்போ தான் அவ இருக்க மாட்டா.'

தலையில் அடிச்சிக்கலாம் போல இருந்தது எனக்கு. அவனை அனுப்பிட்டு நேரா கிளம்பி விநோதினியை பாக்க போனேன். ஒரு மணி நேர பயணம். ஆனால் போன் இல் பேசுவதை விட நேரில் பேசுவதுதான் நல்லது என்று தோணியது. எப்போதும் கலகலப்பாக சிரித்த முகத்துடன் வரவேற்கும் வினோதினி வேண்டா வெறுப்பாக பார்த்தாள்.

'எப்படி இருக்கே வினோதினி?'

'இருக்கேன்... '

'நேத்து வினோத் வீட்டுக்கு வந்திருந்தான்.'

'ம்ம்...'

'என்ன பிரச்சனைன்னு கேட்டேன். ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறான். '

விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள். பிரச்சனை இதுதான். வேலைக்கு போகும் வரை இருவருக்கும் நிறைய நேரம் இருந்தது.. பேச, புரிந்து கொள்ள... இப்போது ரெண்டு பேரும் அவரவர் வேலையில் பிஸி ஆகி விட்டதால் பேச கூட நேரமில்லை. சேர்ந்திருக்கும் கொஞ்ச நேரமும் சின்ன சின்ன பிரச்சனை.. அதை தீர்க்க நேரமில்லாமல் இப்போது பூதாகரமாக ஆகிவிட்டிருக்கிறது..அவளை சமாதான படுத்திவிட்டு கிளம்பினேன்..

அடுத்த நாள் நன்றாக யோசித்து வினோத்துக்கு போன் பண்ணினேன். ரொம்ப நேரம் பேசி கஷ்டப்பட்டு அவனை சம்மதிக்க வைத்தேன்.

நான் சொன்னது இதுதான். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது இருவரும் சேர்ந்து இருக்கவேண்டும், அந்நேரம் எதாவது ஒரு காரியம் சேர்ந்தே செய்ய வேண்டும். அந்த நேரத்தில் பள்ளி காலத்தில் எப்படி பேசினார்களோ அதை போல் பேசி கொள்ள வேண்டும். திருமணம் ஆனதை அடியோடு மறந்து விட வேண்டும்.

விநோதினிக்கும் போன் பண்ணி இதையே சொன்னேன். 'இதென்ன சிறுபிள்ளைத்தனம்' என்றாள். கடைசியில் ஒரு வழியாக சம்மதித்தாள். இது நடந்து ஒரு வாரமாக அவர்கள் இருவரும் என்னிடம் பேசவே இல்லை. நான் கூட என் master plan failure ஆகி விட்டதோ என்று நினைத்தேன்.

அவர்களை பிரித்து வைக்க மனம் ஒப்பவில்லை. ஓடி போயிடலாம் போல இருக்கு. சரி எதுக்கும் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன்.

ஆச்சரியம்... ரெண்டு பேருமே வீட்டில் இருக்காங்க ... ஆண்டவனை வேண்டிகிட்டே உள்ளே போனேன். ரெண்டு பேர் முகத்தையும் பாத்து ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலே. சரி அவங்களே ஆரம்பிக்கட்டும் என்று பேசாமல் இருந்தேன்.

'ரொம்ப தேங்க்ஸ் டா...'

ரெண்டு பேரும் சேர்ந்து தான் சொன்னாங்க.

'எங்களுக்குள்ள இருந்தது பிரச்சனை இல்லை ...மனதளவில் தூரம் தான் இருந்தது.. இப்போ ஒரு வாரமா எவ்வளவு வேலை இருந்தாலும் நீ சொன்ன மாதிரி ஒரு மணி நேரம் சேர்ந்து இருக்கிறோம்..சும்மா பேசிட்டு.... சிரிச்சிட்டு. .. இவ்வளவு நாள் எத இழந்திருக்கோமோன்னு இப்போ புரியுது. நாங்க கொஞ்ச நேரம் சேர்ந்து spend பண்ண ஆரம்பிச்ச பிறகு முன்னாடி வந்த பிரச்சனைகள் எதுவுமே வரலே. அப்படியே வந்தாலும் பேசி தீத்துக்கறோம். 2 வாரம் லீவ் எடுத்துட்டு எங்கேயாவது போயிட்டு வரலாம்ன்னு இருக்கோம்.

எல்லாமே உன்னாலே தாண்டா.. '

நான் ஒண்ணுமே சொல்லலே..

இப்போ தான் ஒரு நிம்மதி மனசுலே. காரணமே இல்லாம பிரிய இருந்த ஜோடியை சேர்துட்டோம்னு ஒரு நிம்மதி எனக்கு.

உறவு பலப்பட மனசு விட்டு பேசறது எவ்வளவு முக்கியம்.. இது புரிஞ்சாலே பாதி பிரச்சனை தீந்துடும்.

Tuesday, 4 August 2009

காதல் தீ!

Posted by மௌனமான நேரம் | Tuesday, 4 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
அவள் அவனது தோளில் சாய்ந்து இருந்தாள். அவன் அவளது தோளை மென்மையாக பிடித்து அணைத்து இருந்தான். காற்று சிலுப்பிய அவள் கேசத்தை கொஞ்சி கோதிகொண்டிருந்தான்.

அவர்கள் இருவருக்கும் இப்படி லால் பாகில் , அந்த நீர் தேக்கத்தின் அருகில் உள்ள இருக்கையில் அணைத்தபடி அமர்ந்து , அமைதியாக இயற்கையை ரசிக்க பிடிக்கும்.

அவள் விழி மூடி, முகத்தில் மோதும் தென்றலை ரசித்து கொண்டிருந்தாள். அவன் அவள் முகம் பார்த்து பார்த்து ரசித்து கொண்டிருந்தான்... 'என்னவள்......!!!'

இன்று அவளுக்கு பிறந்த நாள். அவளுக்கு பிடித்த நீல நிறத்தில் , ரோஜா பூக்களை தெளித்து போல் ஒரு சில்க் காட்டன் புடவை பரிசளிதிருந்தான் . அவளுக்கு காட்டன் புடவை தன் ரொம்ப இஷ்டம்.


Bidaroo.com
'சுமீம்மா.... இந்த புடவையில் நீ தேவதை மாதிரி இருக்கே .... தெரியுமா...'

'எந்த ஊர் தேவதைடா நீல கலர் புடவ கட்டும்???' சிரித்து கொண்டே கேட்டாள்.

'என் தேவதை... எங்க ஊர் தேவதை..... ' என்றான் அவளை ஆசையாக பார்த்து கொண்டே...

'பாக்றத பாரு...' ... அப்படியொரு வெட்கம் அவளுக்கு.

'அம்மாடிய்... என்னடி இப்படி வெக்க படறே.... '

'சீ.. போடா... நான் ஒன்னும் வெக்கபடலே....' சொன்னாலும் வெட்கம் கூடியதை கண்கள் காட்டி கொடுத்தது...

'நேரமாச்சி.. போலாமா?....'

'போகவே மனசில்லடா... இப்படியே இங்கயே...உன் கூடவே இருக்கணும் போல இருக்கு. ...'

'ம்ம்... இருக்கலாம்தான்..ஆனா கேட் பூட்டிருவான்களே ... பரவயில்லையா?? ' குறும்பாக சிரித்தாள்.

செல்லமாக தலையில் குட்டி விட்டு... அழகாக கன்னத்தில் முத்தமிட்டான்...

'போகலாம்.'.....

சொல்லிக்கொண்டே அருகிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள் அந்த எழுபது வயது இளஞ்சோடிகள்....

Sunday, 26 July 2009

காதலை ஏற்கிறேன்!

Posted by மௌனமான நேரம் | Sunday, 26 July 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்

ஆறு மணிக்கு நான் கோவிலுக்கு வருவது தெரிந்து நீ ஐந்தரைக்கே ஆண்டவனை பார்க்க ஆஜரானாய். அது பிடித்தது.




என்னிடம் இரண்டு நிமிடங்கள் பேச நீ இரண்டு மைல் பயணபட்டு வந்தாய். அது பிடித்தது.

நான் கொந்தளிக்கும் கோபத்துடன் வந்தாலும், ஒரு பார்வையில் என்னை சிரிக்க வைத்தாய். அது பிடித்தது.


மனதில் பட்டதை உன்னிடம் மறைக்காமல் பேச மறைமுகமாக ஆதரவு தந்தாய். அது பிடித்தது.


என் தோழர்களிடமும் தோழிகளிடமும் அடிக்கடி பேசும்போது, வெளியே சொல்லாமல் உள்ளுக்குள் கொஞ்சம் பொறாமை கொண்டாய். அது பிடித்தது.


உன் மீது நான் கொஞ்சம் பாசமாய் சொன்ன இரண்டு வார்த்தை கேட்டு உன் கண்ணில் பெரிய திருப்தி. அது பிடித்தது.


எனக்கு பிடித்த நிறத்தில் நீ உடை உடுத்தி, அது எனக்கு புரிய வேண்டும் என்று நீ பட்ட பாடு. அது பிடித்தது.


என்னை பேச விட்டு, நான் சொல்லும் ஒவ்வொன்றையும் ரசித்து கேட்டாய். குழந்தைதனமான புலம்பல்களையும் கூட. அது பிடித்தது.


நான் தெரியாமல் செய்யும் சின்ன தவறை கண்டிப்பாக கண்டிப்பாய். அது பிடித்தது.


உன்னிடம் பிடிக்காதது எத்தனை இருந்தாலும் உன்னுடன் இருக்கும்போது அது எல்லாமே மறந்து விடுகிறது. அது பிடித்தது.


ஆயிரம் பேர் கூட்டத்திலும், அனாயாசமாய் என்னை கண்டுபிடிப்பாய். அது பிடித்தது.


என் குடும்பத்துடன் ஜென்ம ஜென்மமாய் பழகியது போல் அழகாக ஐக்கியமானாய். அது பிடித்தது.


250x250



என்னை ஒரு நாள் பார்க்காததால் வாடிய முகத்துடன் அடுத்த நாள் அவசரமாக நீ ஓடி வந்தாய். அது பிடித்தது.

காதலிக்கிறேன் என்று சொல்லாமல் என்னை கல்யாணம் செய்ய வேண்டும் என்று நீ நேற்று சொன்னாய். அது பிடித்தது.

இத்தனை 'பிடித்ததுகளின்' மொத்தமான உன்னை ரொம்ப பிடித்தது.

உன் காதலை ஏற்கிறேன்.

உன்,
ஓவியா....

Sunday, 5 July 2009

தோழியா... காதலியா... அன்பே!!!

Posted by மௌனமான நேரம் | Sunday, 5 July 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்

சரவணன் க்கு 5 மணிக்கி இந்தியா க்கு flight .அம்ஸ்டேர்டம் ஏர்போர்ட் இல் காத்திருக்கிறான். 3 வருடத்திற்கு பிறகு இப்போது தான் இந்தியா போகிறான். மனைவி லட்சுமி யும் , மகன் சரசு வும் முந்தைய வாரம் போய்விட்டார்கள். இன்னும் boarding க்கு 3 மணி நேரம் இருக்கிறது. சரி பொழுது போக்கலாம் என்று பக்கத்தில் ஒரு duty free ஷாப் க்குள் நுழைந்தான். ' barbie dolls half price' 'offer ends today' என்று போட்டிருப்பது பார்த்து அதை நோக்கி போனான். சரசு வுக்கு பார்பீ பொம்மை என்றால் கொள்ளை பிரியம். ஏற்கனவே 4,5 வைத்திருந்தாலும், என்ன வேண்டும் என்று கேட்டால் பார்பி என்று தான் இன்னும் சொல்வாள். அப்படி ஒருமோகம் அதன் மேல. குழந்தையை நினைத்து மெல்லிய புன்னகை அரும்பியது அவன் உதடுகளில்.

அவனது என்ன ஓட்டங்கள் திடீரென்று சடன் பிரேக் போட்டது. 'அது யார்.... ???'..
ஒரு நிமிடன் அவன் உடலெங்கும் ஒரு உஷ்ணம் பரவியது. சந்தேகமே இல்லை அது வினிதா தான். அவன் வினி..

தடைகளை தாண்டி அவன் எண்ண குதிரை பத்து வருடதிற்கு பின்னே ஓடியது. அவனும் வினியும் ஒரே கல்லூரியில் வெவ்வேறு வகுப்பில் இருந்தார்கள். அவள் அப்படி ஒரு அழகு.

'நீ வெயிலில் போகும்போது
உன்னை பார்க்க கண் கூசியதால்
திரும்பி சூரியனை பார்க்கிறேன்...

உன்னை அமாவாசை இருளில் பார்த்தேன்
எனக்கு இப்போது தான் புரிகிறது..
அமாவாசை அன்று ஒரு நிலவு
மீதி இரவில் இரண்டென்று...

பக்கத்து வீட்டு தாய்
நிலாநிலா ஓடி வா என்று கூறி சோறூட்டினாள்
நிலத்தை காட்டி..
அங்கு நோக்கினேன்... நீ...
'

நான்கு வார்த்தை சேர்த்து எழுத தெரியாத சரவணன் எழுதியது தான் இது. இதை விட அழகாக அவன் நண்பர்கள் பலர் அவளுக்காக எழுதியிருப்பது அவனுக்கு தெரியும்.

ஆனால் வேறு யாருக்குமே கிடைக்காத ஒன்று அவனுக்கு கிடைத்தது.. அவளது நட்பு... அவள் காலை எழுந்திருபதிலிருந்து இரவு தூங்குவது வரை முழு நேரமும் அவனுடன் தான் இருப்பாள். ஒரு சின்ன விஷயம் நடந்தாலும் அவனிடம் முதலில் சொல்லா விட்டால் அவளுக்கு தலையெவெடிதுவிடும்.. அவனும் நல்ல நேரம் பார்த்து தான் காதலை சொல்லலாம் என்று காத்திருந்தான்.. அவன் கெட்ட நேரமோ என்னவோ அந்த நல்ல நேரம் வரவே இல்லை. இருவரும் கடைசி வருடம் படிக்கும்போது இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று ஒரு வழியாக சொல்லிவிட்டான்.

அவள் ... 'சரவ்... என்னால் உன்னோட தோழியா தான் இருக்க முடியும். உன்னை வேறு எதுவாவுமே என்னால் பாக்க முடியாது... சாரி.. ' என்றாள். அதன் பிறகு அவன் அவளுடன் பேசவில்லை. அவனால் அவளை தோழியாக பார்க்க முடியவில்லை. இரண்டு தடவை தற்கொலைக்கு கூட முயன்றான்.. எதோ அதிஷ்ட வசமாக தப்பினான். பிறகு... பெற்றோர் ஒரே பையன் நீ இப்படி பண்ணலாமா என்று அழுது... பிறகு அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்... அம்மா உடல் நல குறைவு... பல இண்டேர்விஎவ்கள் ... நல்ல சாப்ட்வேர் கம்பனியில் வேலை... திருமணம்.. குழந்தை... கால ஓட்டத்தில் எல்லாமே மறதுவிட்டிருந்தது... ம்ம்ம்...

பயணிகளை விமானத்தில் நுழைய அறிவிப்பு கேட்டு நினைவுகளில் இருந்து மீண்டு நிகழ்வுக்கு வந்தான். பாஸ்போர்ட் செக் முடிந்து அவனது இருக்கையில் வந்து அமர்ந்தான். ஜன்னல் ஓர இருக்கை. அருகில் உள்ள இருக்கையில்...... வினிதா.... இதை அவன் எதிர்பார்கவே இல்லை..

'சரவணன்??'
'எஸ்! வினிதா??'
'எப்படி இருக்கீங்க?? சர்ப்ரைஸ்.. '...வாடா போடா என்று நிமிஷத்துக்கு நூறு முறை சொல்லும் வினி..
'டூஇங் கிரேட்!! நீங்க??' ..வினி.. வினி.. என்று உருகும் சரவணன்..
'நல்லா இருக்கேன்..'

அவள் கணவன் குழந்தை பற்றி சுருக்கமாக சொன்னாள்.
அவனும் மனைவி குழந்தை பற்றி சொன்னான்...

அதன் பிறகு அவன் கண்ணயர்ந்தான்.. அவன் எதோ படம் பார்த்து கொண்டிருந்தாள்..

அவன் மனதில் ஒரு சின்ன சலனம் கூட இல்லை. அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.. தான் யாருக்காக இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்தோமோ அவள் அருகில் இருக்கிறாள்.. கோபம்.. விரோதம்... ஆசை.. அழுகை... எதுவுமே இல்லை... சொல்ல போனால் மனம் தெளிந்த நீரோடை போல ரொம்பவுமே அமைதியாக இருந்தது... அவளிடம் பேச வேண்டும் என்று கூட தோன்றவில்லை... இப்போது அவள் அவனுக்கு தோழியா... காதலியா.. தெரியவில்லை... பத்து வருடம் செய்த வைத்தியமா இது?? காலம் இப்படி ஒரு மருந்தா??? அன்று தான் பைத்தியம் போல் அலைந்ததை நினைத்தால் கொஞ்சம் வியப்பாக கூட இருந்தது...

'உயிர்... அதை எவ்வளவு சாதாரணமாக நினைத்துவிட்டேன்.. ஒரு வேளை அப்போது செத்திருந்தால்.... வாழ்வில் எவ்வளவோ இழந்திருப்பேன்... '

'நேற்று தேவை என்றது இன்று தேவை இல்லை...
நேற்று வாழ்கை என்றது இன்று வாழ்கை இல்லை..
நேற்று உயிர் என்றது இன்று உயிர் இல்லை.....'

அந்த ஒரு நிமிடத்தில் புரியாதது அதை கடந்து வந்த உடன் புரிகிறது..

விமான நிலையத்தில் சரசு வும் லட்சுமியும் காத்திருந்தார்கள்.... தன்னை அறியாமல் அவன் மனதில் மகிழ்ச்சி புகுந்தது..

'ஒரு வாரம் ஆச்சி பாத்து... ' குழந்தை ஓடி வந்து கட்டி கொண்டாள். மனைவி 'ரொம்ப டயெர்ட் எ இருக்கீங்க'....

'இவர்களை பிரிந்து எப்படி ஒரு வாரம் இருந்தேன்....'

Tuesday, 30 June 2009

முத்தம்...

Posted by மௌனமான நேரம் | Tuesday, 30 June 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்


எனக்கு கோவம் கோவமா வருது.. ஏன் அவ இப்படி பண்ணினா?


அவளுக்கு நல்லா தெரியும் என்னை பாக்கும்போதும் பிரியும் போதும் முத்தம் குடுக்காம இருந்தா நான் ரொம்ப வருத்த படுவேன் என்று. மறந்துட்டா... அதெப்படி மறக்கலாம்...


இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இன்னக்கி ஒரு நாள் தானே மறந்தா அப்படின்னு அறிவு சொனாலும் மனசு கேக்கவே மாட்டேங்குது.. எப்போவும் ட்ரொப் பண்ணும் போது எந்த இடமா இருந்தாலும் சரி.. எத்தனை பேர் இருந்தாலும் சரி... கட்டி பிடிச்சி முத்தம் குடுத்துட்டு தான் போவா.. ஒரு சில நேரம் எனக்கே 'என்ன இவ்ளோ முத்தமான்னு' தோணும்.. ஆனாலும் ரொம்ப பெருமையா இருக்கும்.


மனசு ஆறவே மாட்டேங்குது.. சாயங்காலம் பிக் பண்ணும்போது கவனிச்சிக்கறேன். இன்னக்கி சண்டை தான் போட போறேன்.


என்ன தான் ட்ரை பண்ணினாலும் வேலையில் மனசே ஒட்ட மாட்டேங்குது. மனசெல்லாம் 'அவ எப்படி மறக்கலாம்' னு மட்டும் தான் தோணிட்டு இருக்கு. எப்படியோ சாயங்காலம் பிக் பண்ணற நேரம் வரை கஷ்ட பட்டு நேரத்தை தள்ளிட்டேன்.


இப்போ அவள பிக் பண்ண போறேன்...


அவள் எனக்காக காத்திருக்கிறாள்.


நான் கொஞ்சம் கோவமாவே அவளை நோக்கி போனேன். அவ என்ன பாத்ததும் ஓடி வந்தாள்.


முன்னாடி இருந்தா கோவம் கொஞ்சம் கொறஞ்சிருக்கு தான். இருந்தாலும் கொஞ்சம் கோவம் இருக்கு.,


ஓடி வந்த அவ என்ன கட்டி புடிச்சி ரெண்டு கன்னத்திலேயும் மாறி மாறி முத்தம் கொடுத்தா.. 'மோர்னிங் மறந்துட்டேன் சாரி '.. என்றாள் என் ஐந்து வயது செல்ல மகள்...

Saturday, 27 June 2009

தாய் அன்பு

Posted by மௌனமான நேரம் | Saturday, 27 June 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
அழகான குடும்பம்.... கண்மணி போல ஒரே ஒரு அழகான பெண் குழந்தை.. அழகான பெயர் கூட ... மாலா...


பெற்றோர் என்றால் மாலா - க்கு கொள்ளை பிரியம்... ஆனால் அவள் பெற்றோர்க்கோ அதை விட....


அந்த குழந்தைக்கு பாசத்தையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அந்த பெற்றோர், அருமையான இன்ஜினியரிங் பட்டத்தையும் வாங்கி குடுத்தாங்க.

கல்லூரி நாட்களில் அப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் அவளுக்கு...

இப்படியாக இருக்கும் போது, வேலை தேடி பட்டணம் சென்றாள் மாலா.. சின்னதாய் ஒரு வேலையும் வாங்கினாள்.

நாட்கள் கடந்தன........


ஒரு நாள், துடியா துடித்து போனாள் அந்த செய்தி கேட்டு ... எதோ எல்லாம் இழந்ததை போல் நினைத்தாள்...


விதவை தாயை தன்னுடன் வந்து இருக்கும் படி அழைத்தாள் மாலா...


அப்போது தான் மாலா- க்கு பெரிய வேலையும் தேடி வந்தது.. மாதம் 25,000 ரூபாய் ஊதியம்... மாதம் தோறும் ஒரு காரணம் சொல்லி, ஊதியம் முழுவதும் கிடைக்க வில்லை என்பாள் மாலா...

மாலா- க்கு வரன் தேடி அலைந்தாள் அந்த அருமை விதவை தாய்... வந்த எல்லாத்தையும், எதோ காரணம் சொல்லி தட்டி கழித்தாள் மாலா. பல காரணம் சொல்லி அந்த தாய் மனதை புண் படுத்தினாள் மாலா.

முதுமை காலத்தை நிம்மதியாக கடத்த விரும்பிய தாயை, தன்னுடன் அழைக்க மறுத்தாள் மாலா. காரணம் தெரியாமல் தவித்தாள், காரணம் தெரிய துடித்தாள் அந்த தாய்.

தன் வீட்டு போன் ஒலிக்க, ஓடி போய் கேட்ட சேதி , இடி போல இருக்க, உடனே பட்டணம் கிளம்பினாள் அந்த தாய்.

பதட்டத்துடன் வீட்டுக்குள் போன தாய், மண கோலத்துல மாலா... தன் ஆசை காதலனுடன்....

தரைல விழுந்த தாய், இப்போ தன் அருமை கணவனுடன் விண்ணுலகில்.....

Wednesday, 24 June 2009

மஞ்ச பை - கதை

Posted by மௌனமான நேரம் | Wednesday, 24 June 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
பக்கத்து சீட் காலியாக இருந்தது. 'நல்ல டீசென்டான ஆளா வந்தா சரி. இந்த தடவை flight லேயும் டிக்கெட் கிடைக்கவில்லை. முதல் வகுப்பு ஏசி யிலும் கிடைக்கவில்லை. சரி சாதா ஸ்லீப்பர் லேயாவது கிடைதிருந்தால் பரவாயில்லை என்றால் , அதுவும் கிடைக்கவில்லை. இந்த பஸ் லே தான் கிடைத்தது. கடைசி நேரத்தில் டிக்கெட் வேண்டுமென்றால் என்ன செய்வது.

இன் பண்ணின டி-ஷர்ட் உம சூட்கேஸுமாக ஒரு இளைஞன் வந்தான். ம்ம்.. இவன் கூட பரவாயில்லை.

அவன் என்னை தாண்டி அடுத்த சீட்டுக்கு போய்விட்டான்.

அடுத்தது ஒரு நாகரீக யுவதி ஜீன்ஸ் இல் வந்தாள். ம்ம்.. இவள் கூட பரவாயில்லை.

அவளும் அடுத்த சீட்டில் போய் அமர்ந்தாள்.

அடுத்தது, அழுக்கு வேஷ்டியும், மஞ்சள் பையும் வைத்திருந்த ஒரு நடுத்தர வயதுகாரர்.

அட ஆண்டவா இந்த ஆளா.... வேண்டாமே...

என் கெட்ட நேரம் அந்த ஆள் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். இது போதாதென்று என்னை பார்த்து புன்னகை வேறு.

அங்க போய் சேருற வரை இத தாங்கணுமா. கடவுளே....

அந்த ஆள் மேல் படாமல் கொஞ்சம் விலகி உட்கார்ந்தேன்.

போய் சேர்ந்த உடனே குளிக்கணும்...

'உங்க டிக்கெட் காட்டுங்க'. சத்தம் கேட்டு நிமிர்ந்தேன். கண்டக்டர். பாகெட்டில் கை விட்டு டிக்கெட் எடுக்க நினைக்கும்போது தான்... 'ஷிட்.. டேபிள் லே இருந்து டிக்கெட் எடுத்து வைக்கனும்னு நினச்சேன் மறந்துட்டேனே.... ' தட்ஸ் ஆல்ரைட் ... பே பண்ணிடலாம்.

கண்டக்டர்.. நான் டிக்கெட் வீட்டுலே மறந்து விட்டுட்டேன்... எவ்வளவு பே பண்ணனும்னு சொல்லுங்க பண்ணிடறேன்...

450 ரூபாய் ங்க...

ஆங்.. என் கெட்ட நேரம்... காஷ் இல்லையே..

கண்டக்டர்.. என்கிட்டே கிரெடிட் கார்டு தான் இருக்கு.......

ஒரு நிமிடம் ஒட்டு மொத உலகமும் என் தலையில் சுற்றுவது போல இருந்தது... இப்படி பணம் இல்லாமல் இந்த மாதிரி ஒரு இடத்தில் இப்படி ஒரு நிலைமை எனக்கு வந்ததே இல்லை. ஐந்நூறு ரூபாயை நான் பெரிதாக நினைத்து கூடஇல்லைநிமிடம் வரை .

பணம் இருந்தா குடுங்க. இல்லன்னா இறங்கிடுங்க. பஸ் கிளம்பற நேரமாச்சி.

என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு முக்கியமான விஷயமாக அவசரமாக போகிறேன். இந்த பஸ் இல் போனால் தான் போய் சேர சரியாக இருக்கும். அடுத்த பஸ் இல் போனால் மிகவும் லேட் ஆகி விடும்.

அந்த தி-ஷர்ட் இளைஞன் 'சீக்கிரம் முடிவு பண்ணுங்க . எங்களுக்கு லேட் ஆகுது.'

எல்லோரும் 'ஆள் பாக்க டீசென்ட் ஏ இருக்க மாதிரி இருக்கு.' என்று முனுமுனுப்பது கேட்டது.

கண்டக்டர்.. இதுலே ஐந்நூறு ரூபாய் இருக்கு.. டிக்கெட் குடுத்துட்டு மீதி குடுங்க ....சொன்னது மஞ்சள் பைகாரர்.

சார்.. அங்க போனதும் atm லே வித்ட்ராவ் பண்ணி தந்துடறேன். ரொம்ப தேங்க்ஸ்.

இதுக்கு என்னங்க தேங்க்ஸ்... மனுஷனுக்கு மனுஷன் இது கூட பண்ணலேன்னா எப்படி?

இப்போது விலகி உட்காரவில்லை நான்.

Thursday, 18 June 2009

காதல் கவிஞன்! - கதை

Posted by மௌனமான நேரம் | Thursday, 18 June 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்

'இன்னக்கி கார்தி்க்கோட 'காதல்' கவிதைதொகுப்பு வெளி வருது . ஆபீஸ் போற வழியில் வாங்கிட்டு போகணும்.' இது வரை அவள் அவன் கவிதை , கதை எல்லாவற்றிலும் முதல் பிரதி வாங்கிவிடுவாள்.


கார்த்திக் ஒரு எழுத்தாளர். குறிப்பாக பெண்களின் பிரச்சனையை மையப்படுத்தி இருக்கும் அவரது கதைகள். நம் தமிழ் சினிமா போலல்லாது கார்த்திக் கதைகளில் எப்போதுமே கதைக்கு நாயகி தன் முன்னிடம். ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒரு ஆண் இவ்வளவு ஆளாக புரிந்து எழுத முடியுமா என்று கவிதா எப்பொழுதுமே ஆச்சரியபடுவாள். அதுவும் அவன் கவிதைகள் காதலில் நனைந்து, ஆசை ஒழுகி கொண்டே இருக்கும். இப்படி ஒருவனை கணவனாக அடைபவள் கொடுத்து வைத்தவள் என நினைப்பாள். அப்படியே அது தானாக இருக்க கூடாதா என்று கூட ஒரு ஆசை உண்டு.


'கவிதா!' அம்மா கூப்பிடும் சத்தம் கேட்டு கனவு கலைந்தாள்.


'மதியம் சீக்கிரம் வந்துடு. மாப்பிளை வீட்டுலே இருந்து வராங்க.'


'இப்போ என்னம்மா எனக்கு கல்யாணத்துக்கு அவசரம். கொஞ்ச நாள் நிம்மதியா சம்பாதிக்கரேனே!'


'ஒன்னும் பேசாதே . சீக்கிரம் வா. மாப்பிள்ளை பிடிக்கலேன்னா அப்பறம் பாக்கலாம்.'


கவிதா முனுமுனுத்து கொண்டே கிளம்பினாள்.


மதியம் கையில் 'காதல்' உடன் வீட்டு உள்ளே நுழைந்தாள். ஒரு நிமிடம் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தன. இது கனவா என்ன? கிள்ளி பார்த்து கொண்டாள்.


அவள் வரும் முன்னே மாப்பிள்ளை வீட்டார வந்து விட்டார்கள். அங்கு மாப்பிளையாய் அமர்ந்திருந்தது சாட்சாத் கார்த்திக் தான். அட!கடவுள் application குடுக்கும் முன்னாலே offer letter குடுதுட்டரே. கண் மூடி திறக்கும் முன்னே சடங்குகள் சம்ப்ரதாயங்கள் முடிந்து கல்யாணம் நடந்து, இப்போது ஒரு வருடம் ஆகி விட்டது.


ஆனால் வாழ்வில் எவ்வளவு மாற்றங்கள். உருகி உருகி காதல் கவிதை எழுதும் கார்த்திக் அவளை அவள் நினைத்த மாதிரி உருகி உருகி காதலிக்க எல்லாம் இல்லை. 'கவிதா என்றொரு கவிதை' என்று பாடுவான் என அவள் நினைக்கும் போதெல்லாம் அவன் சொல்வது 'Be practial'.


இன்று அவள் முடிவு செய்து விட்டாள். இதை பற்றி பேசியே ஆக வேண்டும். சமயம் பார்த்து மெதுவாக, ' என்னங்க உங்க கதை கவிதை எல்லாம் எவ்ளவு ரொமான்டிக்- ஆ இருக்கு. பெண்கள் மனசை எவ்வளவு அழகா புரிஞ்சி எழுதறீங்க. ஆனா ரியல் லைப்ல ஏன் வேற மாதிரி இருக்கீங்க?'


கார்த்திக் புருவம் நெரித்து பார்த்தான். ' don't be silly! அது கதை- கவிதை. இது வாழ்கை. அது வேற இது வேற.'





Wednesday, 10 June 2009

மனம்! -கதை

Posted by மௌனமான நேரம் | Wednesday, 10 June 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்
தினேஷ்! சீக்கிரம் வாடா ஸ்கூல் க்கு லேட் ஆச்சி.

இருடா.. நீ ஒட்டகசிவிங்கி மாதிரி இருக்கே ஓடிபோயிடுவே,, நான் யானை அசைஞ்சி தானே வரணும்! :)


தினேஷ்! homework பண்ணலியா. stand upon the bench!


சார் பெஞ்ச் லே நிக்கறது என்னகு ஒன்னும் problem இல்ல. ஆனா அப்பறம் பெஞ்ச் உடஞ்சிடிச்சின்னா என்ன ஒன்னும் கேக்க கூடாது! :)


டேய் தினேஷ்!நெக்ஸ்ட் வீக் உனக்கு பர்த்டே தானே டிரஸ் வாங்கிட்டியாடா.


உனக்கு டிரஸ் வாங்க எந்த கடைக்கு வேணும்னாலும் போகலாம். என்னக்கு வாங்கனும்ன நான் ஒரு கடையே வாங்கணுமே :)


தினேஷ்! இன்னும் 2 இட்லி சாப்டுடா. வளர்ற பையன் 1 இட்லி சாப்பிட்டா போதுமா. உனக்கு பிடிக்கும்னு தானே சாம்பாரும் தேங்காய் சட்னியும் வச்சேன்.


நீ வேறம்மா ஒன்னு சாப்பிட்டே இப்படி இருக்கேன்.. இன்னும் ரெண்டு சாப்பிட்டா நம்ம வீட்டு கதவ பெருசு தான் பண்ணனும்.


தினேஷ்! நானும் பாத்துட்டே இருக்கேன். எல்லார்கிட்டேயும் நீயே உன்ன குண்டு குண்டு ன்னு சொல்லி இன்சுல்ட் பண்ணிகறியே. நீ ஸ்மார்ட் அ அழகா தானே இருக்கே. உனக்கு என்ன கொறச்சல். சரியா சாப்பிட கூட மாட்டேங்கறே.


இல்லம்மா. வேற யாரவது நான் குண்டுன்னு சொல்லறதுக்குள்ள நானே சொல்லிகறேன். அப்போ என்னக்கு மன கஷ்டம் கொறயுமேன்னு தான்!


Wednesday, 27 May 2009

கஜினி ?? -கதை

Posted by மௌனமான நேரம் | Wednesday, 27 May 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்

ஆதவனுக்கு மனது பட பட வென்று அடித்து கொண்டது. இது மூன்றாவது முறை.
முதல் முறை மூன்று வருடங்களுக்கு முன்னால் நடந்தது!

பொன்னி அவன் மாமன் மகள். அவன் கண்ணுக்கு ஒரு பேரழகி. நிறைய கனவு கண்டு, டூயட் பாடி, மறைந்திருந்து பார்த்து, சொல்ல போய் மறந்து, கடைசியில் ஒரு வழியாக சொல்லி விட்டான். பொன்னி சொன்னாள் ' நான் இன்னும் நிறைய படிக்கணும் ஆதவா! '


இரண்டாம் முறை 2 வருடங்களுக்கு முன் நடந்தது!


செல்வி அவனுடன் படித்தவள். அவன் கண்ணுக்கு உலக அழகி. தத்தி தடுமாறி அப்படி இப்படியென்று கடைசியில் சொல்லி விட்டான். செல்வி சொன்னாள், 'சாரி ஆதவா! நான் என் அத்தை பையனை லவ் பண்ணறேன்.'


ஷாலினி யை 5 மாதங்களாக அவனுக்கு தெரியும். நல்ல நண்பர்கள். அவனுடைய பழைய காதல் பற்றி கூட சொல்லியிருக்கிறான்.நல்ல வேலை பொன்னியும் செல்வியும் அழகு என்று ஏமாந்து போகவில்லை என்று கூட கிண்டல் பண்ணியிருக்கிறான். உண்மை தான் இப்போஅவர்கள் எல்லாம் அவனுக்கு அழகாக தோன்ற வில்லை.


அது போகட்டும். பழக பழக ஷாலினியை பிடித்து போனதும், அவள் இல்லாமல் வாழ முடியாது என்பதையும் அவளிடம் சொல்லி விட வேண்டும்


ஷாலினி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் முகமெல்லாம் சந்தோசம்.


ஆதவன்: ஷாலினி! உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.


ஷாலினி: சொல்லேன்.


ஆ: நான்... ம்ம்ம் வந்து... நான்...


ஷா:நீ ஏற்கனவே வந்துட்டியே!


ஆ: அதில்லை .. நான் சொல்லணும்.


ஷா: சொல்லணும்ங்கரத தவிர வேற எதாவது சொல்லணுமா :)


ஆ: அது.. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன்..


ஷா: (அமைதியாக பார்த்து..) இப்போ தான் அப்பா போன் பண்ணினாங்க. கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டாங்களாம் .என் இஷ்டப்படியே சதிஷ் கூட கல்யாணம்.


ஆ: ஒ.. ஆல் தி பெஸ்ட்! பை !


ஆதவன் பயணம் தொடரும்....

Tuesday, 5 May 2009

ஒரு நாள்... - கதை

Posted by மௌனமான நேரம் | Tuesday, 5 May 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்

அலாரம் அடித்தது! மணி ஆறு!


நந்தினி அலாரத்தை அணைத்துவிட்டு எழுந்தாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் உலகத்தையே புரட்டி போடவேண்டும் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு. அவசரம் அவசரமாக பல் துலக்கிவிட்டு சமையல் அறைக்கு சென்றாள். காலையில் என்னென்ன சமைக்க வேண்டும் என்று இரவே முடிவு செய்துவிட்டாள். இன்று எலுமிச்சை சாதமும் உருளை கிழங்கு பொரியலும் மதிய உணவுக்கும்,சிற்றுண்டிக்கு தோசையும் சட்னியும் செய்ய தொடங்கினாள்.


இடை இடையே கண்கள் கடிகாரத்தை பார்த்து கொண்டே இருந்தன. மணி ஏழு அடிக்கும்போது ஏறத்தாழ எல்லாம் முடிந்து விட்டிருந்தது. இனி கிருஷ்ணா வுக்கும் அவளுக்கும் மத்திய உணவு எடுத்து வைக்கவேண்டும். அதற்குள் கிருஷ்ணா, சுமியையும் எழுப்பி விட வேண்டும். இப்போது எழுப்ப ஆரம்பித்தால் தான் அவள் மற்ற வேலைகளை முடிக்கும்போது எழும்புவார்கள். கிருஷ்ணா அவள் கணவன். சாப்ட்வேர் engineer ஆக பணிபுரிகிறான். சுமி அவனை மொத்தமாக உரித்து வைத்து பிறந்த அவள் ஒரே செல்ல குழந்தை. ஐந்து வயதாகிறது. கிருஷ்ணா காலையில் சுமியை பள்ளியில் விட்டுவிட்டு, நந்தினியை பஸ் நிறுத்தத்தில் விட்டு விட்டு ஆபீஸ் க்கு சென்றுவிடுவான்.


சுமி குட்டி... சுமி குட்டி... நேரம் ஆச்சி எழுந்திருடா... கிருஷ்ணா காலிலே சீக்கிரம் மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்களே எழுந்திருங்க.. சொல்லிக்கொண்டே சமையல் அறையில் மீதமுள்ள வேளையில் மும்மரமானாள். பாதி பாத்திரம் துலக்கி கொண்டிருக்கும் சுமி.. கிருஷ்ணா எழுந்திருங்க ..இனி கூப்பிட மாட்டேன்... சொல்லி கொண்டே மீதி பாத்திரம் தேய்த்து கழுவி முடித்தாள். கிருஷ்ணா பாத்ரூம் பக்கம் போகும் சத்தம் கேட்டது.


கிருஷ்ணா சுமியை குளிக்க வசி அனுப்புங்களேன்.. நான் அதுக்குள் தோசை வார்த்துடுவேன் .. ப்ளீஸ்..


கிருஷ்ணா சுமியை குளிக்க வைத்து அனுப்ப, நந்தினி அவளுக்கு உடை அணிவித்து தோசை ஊட்டி விட்டு கொண்டிருக்கும்போது கிருஷ்ணா கிளம்பி வந்தான். தோசை டேபிள் லே வச்சிருக்கேன் எடுத்துகோங்க என்றாள். ம்ம்.... சொல்லிக்கொண்டே இரண்டு தோசையில் ஒரு தோசை சாப்பிட்டிவிட்டு ஒற்றை டேபிள் இல் விட்டு சென்றான்.


கிருஷ்ணா தோசை சரியா வரலியா ஏன் சரியா சாப்பிடலை? நந்தினி வருத்தமாய் கேட்டாள். .. கிருஷ்ணா பதில் சொல்லவில்லை. படுக்கை அறையில் அவன் நிற்பதை பார்த்துவிட்டு மீண்டும் கேட்டாள்... தோசை நல்லா இல்லையா.. சுமிக்கு கூட பிடிச்சிதே.. சொல்லுங்க பிடிக்கலியா... கிருஷ்ணா திரும்பாமல் சொன்னான்... ஓகே.. .. நந்தினிக்கு கோபம் வந்தது... இவ்வளவு கேக்கறேன் சரியா பதில் கூட சொல்ல மாட்டேன் என்கிறாரே.. ஓகே ன்னா நல்ல இருக்குன்னு அர்த்தம்மா இல்லைன்னு அர்த்தமா... என்றாள்..


ம்ம்.. ஓகே... ன்னா ஓகே தான் கிருஷ்ணா கிளம்புவதில் மும்மரமானான்.. நந்தினி அவனுக்கு பிடிக்குமென்று பார்த்து பார்த்து தான் முறுகலாக தோசை செய்தாள்


நந்தினி அவசரம் அவசரமாக கிளம்பி அவர்கள் மத்திய உணவை சரி பார்த்து எடுத்து வைத்து சுமியையும் கூட்டி வந்து காரில் உட்கார வைத்து அவளும் அமர்ந்தாள்.. கொஞ்சம் அயர்ச்சியாகத் தான் இருந்தது. கிருஷ்ணா வும் வந்து அமர்ந்தான்.


கிருஷ்ணா என் டிரஸ் நல்லா இருக்கா? .. கல்யாணம் ஆன புதுசில வாங்கினது.. கிருஷ்ணா திரும்பவே இல்லை.. .ம்ம்... என்றான்.


சுமி ய இனி சீக்கிரம் எழும்ப பழக்கணும் அப்போதான் காலைலே படிக்கற பழக்கம் வளர்க்க முடியும்.. கிருஷ்ணா ம்ம்.. என்றான்.


இன்னைக்கி கார் சர்வீஸ் விடணும்னு சொன்னீங்களே இப்போவே விட்டுடுவீங்களா??? கிருஷ்ணா..ம்ம்... என்றான்...


நந்தினிக்கு ம்ம்.. தவிர எதையாவது கேட்டால் தேவலாம் போல இருந்தது...


சுமி.. டாடி .. யாரவது நம்கிட்ட பேசினா நம்ம பதில் பேசனும்னு மிஸ் சொல்லியிருக்காங்க... என்றாள்..


கிருஷ்ணா... ம்ம்ம்.. என்றான்...


சரி.. கிருஷ்ணாவுக்கு எதோ டென்ஷன் போல எண்ணிகொண்டாள்...


சுமி குட்டி மிஸ் குடுக்கற லஞ்ச் ஒழுங்கா சாப்பிடணும்..சமர்த்தா இருக்கணும்.. அம்மாவும் அப்பாவும் ஈவ்னிங் வர்றோம் சரியாடா.... டாட்டா... சொல்லி கொண்டே கொண்டே குழந்தையை அனுப்பி விட்டு வந்தாள்..


அடுத்த அவள் பஸ் ஸ்டாப் வந்தது.. கிருஷ்ணா நான் கிளம்பறேன்... கிருஷ்ணா ம்ம்.. என்றான்...


அன்று அலுவலகத்தில் நிறைய வேலை... அவளும் சாப்ட்வேர் என்ஜினியர் தான்.. மத்திய உணவு நேரம் தாண்டியதை வேலை மும்மரத்தில் கவனிக்கவில்லை.. இப்போதுதான் பசி தெரிந்தது. தோழி ராணி அவளை தேடி அவள் இடத்திற்கே வந்து விட்டாள். சாப்பிட போலாமா.. இன்னக்கி என்ன ஸ்பெஷல்???


சிம்பிள்- ஆ லெமன் ரைஸ் பொட்டேடோ சைடு டிஷ் தான் பண்ணினேன். இது சிம்பிள்-அ? சிரித்தால் ராணி.. நான் ஆனந்த பாவன் லே லஞ்ச் ஆர்டர் பண்ணிட்டு வந்திருக்கேன் சொன்னால். சாப்பிட ஆரம்பித்தவுடன் லெமன் ரைஸ் சாப்பிட்டு பார்த்தவள்.. நந்தினி நான் மட்டும் இப்படி சமச்சேன்னா என் ஆதுக்கறார் என்ன சுத்தி சுத்தி வருவார்... தினமும் பொலம்புவார்.. ப்ளீஸ் இன்னக்கு எதாவது ட்ரை பண்ணு நல்லா இல்லன்ன கூட நான் அட்ஜஸ்ட் பண்ணிகறேன்னு.. என்னகு தான் சமைக்க இன்ட்ரெஸ்ட் எ இல்ல... நந்தினி சிரித்தாள்...


அன்றைய நாள் எல்லா நாள்களை போல விரைவாக சென்று விட்டது... வேலை பழு நடுவில் மூன்று முறை கிருஷ்ணாவிற்கு போன் செய்தாள்.. போன் எடுக்கும் போதெல்லாம் பிஸி...அப்பறம் பேசறேன்.. என்றான்.... சரி என்று சொனாள்.


சாயங்காலம் வீடு வரும் வழியிலே இரவு உணவுக்கு என்ன செய்வது என்று யோசித்து வைத்திருந்தாள்.


சுமியை குளிக்க வைத்து இரவு உடை மாற்றி உணவு கொடுத்து படுக்க வைத்து விட்டு வந்து, கிருஷ்ணாவுக்கு உணவு எடுத்து வைத்து கொண்டிருந்தாள். கிருஷ்ணா பேப்பர் படித்துவிட்டு டிவி இல நியூஸ் பார்த்து கொண்டிருந்தான். அவனது தொலைபேசி சிணுங்கியது .அலுவலக நண்பன். இருவரும் அரட்டை ஆரம்பித்தால் அது பாட்டுக்கு போய் கொண்டே இருக்கும்..


நந்தினி குரல் கொடுத்தாள். கிருஷ்ணா ரொம்ப ஆறுது...சீக்கிரம் வாங்களேன் சாப்பிட. கிருஷ்ணா... ம்ம். என்றான்...


ஒரு முக்கால் மணி நேரம் சிரிப்பும் கிண்டலும்மாக பேசிய பிறகு கிருஷ்ணா வந்தான். இருவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்..


இதையா சமைச்சே....?? இது கிருஷ்ணா..


நல்லா வந்திருக்குங்க.. உங்களுக்கு பிடிக்கலியா .. ஒரு வாய் சாப்பிட்டுட்டு சொல்லுங்களேன் .. இது நந்தினி...


கிருஷ்ணா இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு அப்படியே எழுந்து விட்டான்..


என்னங்க ரொம்ப ஆசையா பண்ணினேன்.. சுவை கூட நல்லா தாங்க இருக்கு! இப்படி வேஸ்ட் பண்ணிட்டீங்களே.. எவ்வளவு டைம் ஆச்சி தெரியுமா இத செய்யறதுக்கு.. கிருஷ்ணா பதில் சொல்லவில்லை..


நந்தினிக்கு கிருஷ்ணா வைத்த மீதத்தை குப்பையில் கொட்ட மனசு வரவில்லை... அதையும் சாப்பிட முடியாமல் சாப்பிட்டாள்.. இப்படி சாப்பிட்டா நான் என்ன ஆகறது... நினைத்து கொண்டாள்...


சமையற்கட்டு வேலை எல்லாம் முடித்து கொண்டு வரும்போது கிருஷ்ணா லேப்டாப் இல் அலுவலக வேலையாக இருந்தான்... லஞ்ச் எப்படி இருந்துது.. ராணி ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னா ... உங்களுக்கு பிடிசிதா ... ம்ம் என்றான்...பிடிகலையா??? நந்தினி கேட்டாள்.. ஓகே என்றான் கிருஷ்ணா... என்னங்க இப்படி சொல்லறீங்க... லஞ்ச் லே என் கூட சாப்பிட்டவங்க எல்லாம் நல்லா இருக்குன்னு தானே சொன்னாங்க...


அவங்க முன்ன பின்ன நல்லா சாப்பாடு சாப்பிட்டிருக்க மாட்டங்க... சொல்லிவிட்டு அவன் வேலையில் மூழ்கினான்...


நந்தினி நயன்தாரா, த்ரிஷா பற்றி பேசினாள்.. அடுத்த நாள் சமையல் பற்றி பேசினாள்.. அவன் தினத்தை பற்றி கேட்டாள்.. ஈழ தமிழர்கள் பற்றி பேசினாள்.. கிருஷ்ணாவின் பதில் என்னவோ ம்ம்...ம்ம்...ம்ம்.. தான்...



நந்திக்கு கோபம் வந்தது.. இவ்வளவு நேரம் உங்க நண்பன் கிட்ட அப்படி அரட்டை அடிச்சிட்டு இருந்தீங்க... இப்ப்போ என்னக்கு மட்டும் எல்லாத்துக்கும் ம்ம்.. சொல்லறீங்க... நான் எவ்வளவு நேரமா பேசறேன்.... கொஞ்ச நேரம் கத்தி பார்த்தாள்... கிருஷ்ணா பொறுமையாக திரும்பினான்... என்னக்கு வேலை இருக்கிறது டிச்டுர்ப் பண்ணதே...


நந்தினிக்கு அழுகையாக வந்தது... எல்லோரும் என்னை தைரியசாலின்னு சொல்லுவாங்க... நான் என் இப்படி அழறேன்.... போய் படுத்தால் தூக்கம் வரவில்லை.. மனது பாரமாக இருந்தது.... ரொம்ப நேரம் கழித்து கிருஷ்ணா வந்து படுத்தான்...


தான் மன வேதனை படுவதை கிருஷ்ணா விற்கு புரிய வைக்க வேண்டும்... சும்மா சண்டை போட்டுட்டு இருக்க முடியுமா???


கிருஷ்ணா...


ம்ம்..


எனக்கு கொஞ்சம் பேசணும்..


ம்ம்..


நீங்க என் எனக்கு சரியா பதில் சொல்ல மாட்டேங்கறீங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.நான் வேற யார்கிட்ட போய் பேசுவேன்... நீங்க இப்படி பண்றது என்னாலே வேற எதுலேயும் கவனம் செலுத்த முடியலே.. நான் ஏதாவது தப்பு செஞ்சா சொல்லுங்க நான் திருத்திக்கறேன்.. நான் உங்களுக்கு இந்த டாபிக் பிடிகலேன்னு அந்த டாபிக்..அந்த டாபிக் பிடிக்கலேன்னு இந்த டாபிக் மாத்தி மாத்தி பேசி பாக்றேன்... உங்க டீம் லே எல்லார்கிட்டயும் நல்லா தன் பேசறீங்க.. நண்பர்கள்கிட்ட நல்லா தன் பேசறீங்க... என்ன உங்களுக்கு பிடிக்கலியா... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு....அழுது கொண்டே திரும்பினால்... கிருஷ்ணா அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான்.....


அழுகை வரத்தான் செய்தது.. ஆற்றாமை தாளவில்லை... ஆனால் என்ன செய்ய.... எழுப்பி பார்க்கலாமா? பார்க்கலாம் ...


கிருஷ்ணா.. நான் பேசிட்டே இருக்கேன் நீங்க தூங்கிடீங்க .. நான் பேசறது கேக்கலியா?


என்னை தொந்தரவு பண்ணாதே ? நிம்மதியா தூங்க கூட விட மாட்டியா??? நாளைக்கி மோர்னிங் மீட்டிங் இருக்கு தூங்கலாம்னு பார்த்தா ... எப்போவும் நிம்மதியா கெடுக்கறதே வேலை...


இன்றைக்கு கிருஷ்ணா பேசிய நீளமான வாக்கியம் இதுதான்....


அழுதுகொண்டே தூங்கி விட்டாள் நந்தினி... அடுத்த நாளும் ஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டுமே..!