Friday, 8 October 2010
அனுஷ்கா ரசிகன்....
உங்களை விட அனுஷ்கா உயரமாச்சே? என்ற கேள்விக்கு "வேணும்னா பக்கத்துல போய் நிக்குறேன். அளந்துக்கங்க" என்றார் சிம்பு. ஆரம்பத்தில் ஜோதிகாவின் ரசிகன் நான் என்று சொல்லி வந்த சிம்பு, இப்போது அனுஷ்காவின் தீவிர ரசிகன் ஆகி விட்டாராம். அருந்ததி படம் பார்த்ததில் இருந்து அனுஷ்கா ரசிகராகி விட்டேன் என்று சொன்ன சிம்பு, அந்த படத்தில் அனுஷ்காவின் பர்பாமென்ஸ் பக்காவா இருந்துச்சி, என்று கூறி பாராட்டினார்.
வானம் படத்தில் அனுஷ்காவுடன் சேர்ந்து ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடுகிறாராம் சிம்பு.
Sunday, 31 January 2010
தூங்கா நகரம்!!
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தயாரிக்கும் 2வது படம் தூங்கா நகரம். இப்படத்தின் சூட்டிங்கை மதுரையில் அழகிரி தொடங்கி வைத்தார். விழாவில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு துரை தயாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன் பின்னர் அவர் தூங்கா நகரம் படம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். வாரணம் ஆயிரம் படத்தை வெளியிட எனக்கு வாய்ப்பு கிடைத்ததால்தான் நான் தொடர்ந்து சினிமாத்துறையில் ஈடுபட்டு வருகிறேன். தூங்கா நகரம் படத்தில் 4 கதாநாயகர்கள். பசங்க படத்தில் நடித்த விமல், ரேனிகுண்டா நிஷாந்த், நாடோடிகள் பரணி, படத்தை இயக்கும் கவுரவ் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த படம் வெளியூரில் இருந்து மதுரை வந்து வாழ்க்கை நடத்தும் வாலிபர்களின் கதை. மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். மே மாதத்தில் தூங்கா நகரம் திரைக்கு வரும், என்று துரை தயாநிதி கூறினார்.Saturday, 12 December 2009
கடவுளும் காதலும்...
Saturday, 22 August 2009
ஆஸ்திரியாவில் த்ரிஷா!
வெங்கடேஷ் ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. கதைப்படி பாதி படம் ஆஸ்திரியாவில் நடக்கின்றன. இதனால் தொடர்ச்சியாக 40 நாள்கள் ஆஸ்திரியாவில் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக வெங்கடேஷ் த்ரிஷா மற்றும் படக்குழுவினர் ஆஸ்திரியா சென்று விட்டனர். ஒரே கட்டத்தில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சென்னை திரும்புகிறார் த்ரிஷா.
முத்த சர்ச்சை நாயகி நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் ஒரு முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு முன்பு ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கிரே, பொது மேடையில் ஷில்பாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்போது சாமியார் ஒருவர் கோயிலில் வைத்து ஷில்பாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்த விவகாரம் சர்சைக்குள்ளாகி இருக்கிறது.
மும்பை அருகே உள்ள போவய் பகுதியில் சஹி கோபால் ஆலயத்துக்கு சமீபத்தில் ஷில்பாஷெட்டி சென்றார். சிறப்பு பூஜைகளை செய்த அவர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கோயில் சாமியார் ஷில்பாவுக்கு முத்தம் கொடுத்தார். ஏராளமான பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் சாமியார் இப்படி நடந்து கொண்டது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் ஷில்பாவோ எதுவுமே நடக்காதது போல கோயிலில் இருந்து திரும்பினார்.
இதையடுத்து புனிதமான இடத்தில் சாமியாரை முத்தமிட வைத்து புனிதத்தை கெடுத்து விட்டதாக ஷில்பா ஷெட்டி மீது வழக்கு தொடரவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதுபற்றி ஷில்பா ஷெட்டி கூறுகையில், மகன்களுக்கோ, மகள்களுக்கோ தந்தை முத்தம் கொடுப்பதில்லையா? என்று ஆவேசப்பட்டார்.

