Wednesday, 30 December 2009
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனத்துக்கு தடை!
Posted by மௌனமான நேரம் | Wednesday, 30 December 2009 | Category:
செய்தி
|
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனத்துக்கு தடை!
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னை தயாராகி வருகிறது. நட்சத்திர ஓட்டல்களிலும், பண்ணை வீடுகளிலும், பல்வேறு நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று முன் கூட்டியே போலீசார் நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள், நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தி விட்டனர்.
குறிப்பாக பெண்களை, வாலிபர்கள் சில்மிஷம் செய்யும் நடவடிக்கைக்கு வழிவகுக்கும் ஆபாச நடனத்தை நடத்த கூடாது, இரவு 11 மணிக்கு மேல் மதுபார்களை திறந்து மது பரிமாறக்கூடாது, குடி போதையில் வாகனம் ஓட்டி செல்ல அனுமதிக்க கூடாது என்ற உத்தரவுகள் ஏற்க கூடியதல்ல. வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்து விடும் என்று கூறுகின்றனர்.
சென்னையில் போலீசாரின் உத்தரவை மீறி ஆபாச நடனம் நடந்தாலோ, 11 மணிக்கு மேல் மது பரி மாற்றம் நடந்தாலோ அந்த ஓட்டலின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி எச்சரித்துள்ளார்.
சென்னையில் போலீசாரின் உத்தரவை மீறி ஆபாச நடனம் நடந்தாலோ, 11 மணிக்கு மேல் மது பரி மாற்றம் நடந்தாலோ அந்த ஓட்டலின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி எச்சரித்துள்ளார்.
பல்வேறு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் ஊழியர்களை உற்சாகப்படுத்த பிரபல நடிகைகள், கவர்ச்சி நடிகைகள், மாடல் அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.
தொடர்புள்ள இடுகைகள்: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: