மௌனமான நேரம்

 

Wednesday 2 September 2009

மான்கறி வைத்தியர்!!

Posted by மௌனமான நேரம் | Wednesday 2 September 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
சென்னை, மைலாப்பூரில் பரம்பரை ராஜவைத்திய சாலை நடத்தி வந்தவர் டாக்டர் விஜயகுமார். மான் கறி மூலம் தயார் செய்யப்படும் மருந்தில் சகல வியாதிகளையும் குணமாக்க முடியும் என்று விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி ஈரோட்டை சேர்ந்த பெண் நடக்க முடியாத தனது மகனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார். அவருக்கு மான்கறி வைத்தியம் செய்வதாக சொல்லி லட்சக்கணக்கில் பணத்தை கறந்தார் விஜயகுமார். ஆனால் நோய் குணமாக வில்லை.

மேலும் ஒரு ராஜவைத்தியம் செய்தால் உன் மகன் நடப்பான். அதற்கு இன்னும் நிறைய செலவாகும் என்று கூறி இருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஏற்கனவே கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

உடனே ஆத்திரம் அடைந்த விஜயகுமார் அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார். இது பற்றி மைலாப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்ததால் வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஜெயிலில் இருந்த விஜயகுமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். துணை கமிஷனர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் மேலும் பல புதிய தகவல்கள் தெரிய வந்தது. சென்னையில் 5 இடங்களில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த ஒரு நோயாளியை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார். தனது ராஜ வைத்தியத்துக்காக மதுரையில் மான் வேட்டையாடி மான்கறியை எடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

எனவே போலீசார் மான்கறி வைத்தியர் மீது சொத்து குவிப்பு, ஆயுத தடுப்பு சட்டம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், விதிகளை மீறி டி.வி.க்களில் விளம்பரம் செய்தது ஆகிய 4 வழக்குகளை புதிதாக தொடர்ந்துள்ளனர்.

[நன்றி: மாலை மலர்]


இந்த மான்கறி வைத்தியர் போல, கீரை வைத்தியம், அரேபிய வைத்தியம் என்று பலவிதமான போலி வைத்தியர் சுதந்திரமாக போலி வைத்தியம் பார்த்து வருகிறார்கள்.

பொதுமக்களாகிய நாம் தான், இது போன்ற விளம்பரங்களை கண்டு ஏமாற கூடாது...

டி.வி நிறுவனங்களும், விளம்பர நிறுவனங்களும் இது போன்ற விளம்பரங்களை ஊக்குவிக்க கூடாது...

இன்னும் புரியாத பெயர சொல்லி வைத்தியம் பார்க்கும் ஆசாமிகளையும் காவல்துறை கைது செய்தால், இன்னும் பொதுமக்கள் ஏமாறாமல் தடுக்கலாம்..