மௌனமான நேரம்

 

Thursday 31 December 2009

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு ஒபாமா கண்டனம்!

Posted by மௌனமான நேரம் | Thursday 31 December 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
நைஜீரிய குற்றவாளியின் தந்தை அந்த நாட்டில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் தன் மகனைப்பற்றி எச்சரித்து இருக்கிறார்.

ஒரு வாரத்துக்கு முன்பு இந்த தகவல் நம் உளவுத்துறைக்கு கிடைத்து உள்ளது. ஆனால் அவர் பெயர் விமானத்தில் பறக்க கூடாத அளவுக்கு பயங்கரமானவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. உளவுத்துறையின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த தவறு பற்றி விசாரித்து 31-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு நைஜீரிய தீவிரவாதி பற்றிய தகவல்கள் தெரியும். ஆனால் அதை மற்ற துறைகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து உஷார் படுத்த தவறியதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்தார்.

புதுமை காண்போம், புதியன படைப்போம்: கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
புதுமை காண்போம், புதியன படைப்போம்: கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து!!

தமிழர் வரலாற்றில் பொன்னேடு பதித்த 2009-ஆம் ஆண்டு விடை பெற்று புதிய 2010-ஆம் ஆண்டு பிறக்கிறது. 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும், தமிழக சட்டப் பேரவைக்கு நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் நமது கூட்டணிக்கு தமிழக மக்கள் பெருவாரியாக வாக்களித்து வெற்றியைத் தந்திருக்கிறார்கள்.

2011-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலுக்கு முந்தைய ஆண்டான இந்த 2010-ல் மக்களுக்கு ஆற்ற வேண்டிய அளப்பரிய பணிகளை ஒருக்கணம் எனக்கு நானே எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன்.

2010 ஆம் ஆண்டில்தான் தமிழக சட்டப் பேரவைக்கான புதிய கட்டிடம் திறக்கப்படவுள்ளது. பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் மிகப்பெரிய அளவிலே கட்டப்பட்டு, அதுவும் திறக்கப்பட உள்ளது.

தமிழ்மொழியின் பெருமையை, தமிழ்ப் பண்பாட்டின் மேன்மையை மேதினியில் மீண்டும் நிலைநாட்டிடும் திருப்பணியாக- கோவை மாநகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திட அரசு ஆயத்தமாகி வருகிறது. ஏழை எளியோர் 3 கோடியே 28 லட்சம் பேருக்கு ரூ.256 கோடி செலவில் இலவச வேட்டி- சேலை வழங்கும் திட்டத்துடன் 2010-ஆம் ஆண்டு மலர்வது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

ஏழை எளிய சாமானிய மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வரும் இந்த அரசு 2006-க்குப்பின் புதிய வரி விதிப்பு, எதுவும் இல்லாமலேயே, வரிச்சலுகைகள் பல வழங்கி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள், விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6000 நிதியுதவி, ஏழை மகளிர் திருமணத்திற்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி, மகளிர் பொருளாதாரம் மேம்பட சுய உதவிக் குழுக்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு தனித்தனி நல வாரியங்கள் போன்ற நலிந்தோர் நலம் காக்கும் திட்டங்களுடன் அவசர கால மருத்துவ ஊர்தி “108” சேவைத் திட்டம், உயிர்க் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட் டம் ஆகியனவும் மக்களால் பாராட்டப்பட்டு வரவேற்கப்படுகின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அரசாணைகள் வாயிலாக 35 புதிய தொழிற்சாலைகள், தமிழமெங்கும் சாலை மேம்பாட்டுப் பணிகள், பாலங்கள், மின் திட்டங்கள், குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடைத் திட்டங்கள் போன்ற பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஆங்காங்கே உருவாக்கப்படுகின்றன.

இந்நாளில் “புதுமை காண்போம், புதியன படைப்போம், புதிய வரலாற்றை உருவாக்குவோம்” என அன்பிற்கினிய தமிழக மக்களை அழைத்து, அனைவருக்கும் எனது உள மார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.

என்.டி.திவாரியின் இன்னொரு செக்ஸ் “வீடியோ டேப்”

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்

என்.டி.திவாரியின் இன்னொரு செக்ஸ் “வீடியோ டேப்”


காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி. திவாரி மீது அடுக்கடுக்காக செக்ஸ் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. 3 பெண்களுடன் அவர் படுக்கையில் இருப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் ஆந்திரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவரிடம் இருந்து ஆந்திர கவர்னர் பதவி பறிக்கப்பட்டது.

86 வயதாகும் என்.டி. திவாரி தன் மீதான செக்ஸ் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னை ஆபாசமாக சித்தரிப்பதாக அவர் கூறினார். என்றாலும் என்.டி. திவாரி பற்றி புதிய செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் வரத் தொடங்கி உள்ளன.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு 1980-களில் என்.டி. திவாரி ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ- டேப் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த காலக்கட்டத்தில் என்.டி.திவாரி மத்திய மந்திரியாக இருந்தார்.

அரசு முறை பயணமாக ஒரு தடவை அவர் ஆந்திரா வந்தார். அவருக்கு தேவையான எல்லா உதவிகளையும் நன்கு செய்யுமாறு அப்போதைய ஆந்திரா முதல்- மந்திரி என்.டி. ராமராவ் உத்தரவிட்டிருந்தார். டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த என்.டி. திவாரி அரசு காரில் கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

அன்றிரவு தனியார் ஒருவரின் சாதாரண காரில் என்.டி.திவாரி ரகசியமாக வெளியில் புறப்பட்டுச் சென்றார். அமீப் பேட் பகுதியில் உள்ள ஒரு பங்களாவுக்கு அவர் சென்றார்.

அவருக்காகவே அங்கு ஒரு இளம்பெண் தயாராக வைக்கப்பட்டிருந்தார். அன்றிரவு முழுவதும் அந்த பெண்ணுடன் பங்களாவில் என்.டி.திவாரி தங்கி இருந்தார். விடிய, விடிய அவர் செக்ஸ் லீலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

என்.டி.திவாரியின் பெண் சபலத்தை அறிந்த உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர், அதை வீடியோவில் பதிவு செய்ய முடிவு செய்தார். என்.டி.திவாரி தங்கிய படுக்கை அறை ஜன்னலில் அவர் ரகசிய வீடியோ காமிராவை பொருத்தி உள்ளே நடந்த செக்ஸ் காட்சிகள் அனைத்தையும் பதிவு செய்தார்.

சுமார் 2 1/2 மணி நேரம் திவாரியின் செக்ஸ் லீலை காட்சிகளை அந்த போலீஸ் அதிகாரி பதிவு செய்தார். அந்த செக்ஸ் காட்சிகளை ஒரு பிரதி எடுத்துக்கொண்டு டேப்பை அவர் உயர் அதிகாரியிடம் கொடுத்துவிட்டார். ஆந்திரா உளவுத்துறை அந்த வீடியோ- டேப்பை தற்போதும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

என்.டி.திவாரி செக்ஸ் லீலைகளை படம் பிடித்த உளவுத்துறை அதிகாரி அது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. போலீஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அந்த வீடியோ- டேப்பை அந்த அதிகாரி வைத்திருந்தார். தற்போது திவாரி பற்றி செக்ஸ் தகவல்கள் வெளி வருவதால் அந்த போலீஸ் அதிகாரி தானாக முன் வந்து இந்த தகவலை வெளியிட்டார்.

என்.டி.திவாரியின் அந்தரங்கத்தை வீடியோவில் பதிவு செய்தது, தங்களது துறை ரீதியிலான கடமைகளில் ஒன்று. இதில் எந்த தவறும் இலலை என்று அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

தற்போதும் அரசியல் தலைவர்களின் ரகசிய பணிகள் உளவுப்துறையால் படம் பிடித்து பதிவு செய்யப்படுவதாக அவர் கூறினார். தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் தகவல்களை தெரிவிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Wednesday 30 December 2009

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனத்துக்கு தடை!

Posted by மௌனமான நேரம் | Wednesday 30 December 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனத்துக்கு தடை!


புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னை தயாராகி வருகிறது. நட்சத்திர ஓட்டல்களிலும், பண்ணை வீடுகளிலும், பல்வேறு நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று முன் கூட்டியே போலீசார் நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள், நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தி விட்டனர்.


குறிப்பாக பெண்களை, வாலிபர்கள் சில்மிஷம் செய்யும் நடவடிக்கைக்கு வழிவகுக்கும் ஆபாச நடனத்தை நடத்த கூடாது, இரவு 11 மணிக்கு மேல் மதுபார்களை திறந்து மது பரிமாறக்கூடாது, குடி போதையில் வாகனம் ஓட்டி செல்ல அனுமதிக்க கூடாது என்ற உத்தரவுகள் ஏற்க கூடியதல்ல. வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்து விடும் என்று கூறுகின்றனர்.

சென்னையில் போலீசாரின் உத்தரவை மீறி ஆபாச நடனம் நடந்தாலோ, 11 மணிக்கு மேல் மது பரி மாற்றம் நடந்தாலோ அந்த ஓட்டலின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி எச்சரித்துள்ளார்.


பல்வேறு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் ஊழியர்களை உற்சாகப்படுத்த பிரபல நடிகைகள், கவர்ச்சி நடிகைகள், மாடல் அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.

ஓடிப்போலாமா!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
ஓடிப்போலாமா!

கல்லூரி மாணவர் பரிமள். படிப்பு ஏறாமல் ஒன்பது பாடங்களில் அரியர் வைத்து நண்பர்களுடன் தான்தோன்றித்தனமாக சுற்றுகிறார். அவர் கண்ணில் சந்தியா பட காதல்...

பழைய வீட்டை காலி செய்து தாய் சுதாவுடன் சந்தியா எதிர் வீட்டில் குடியேறி காதல் கணை வீசுகிறார். ஆனால் சந்தியாவுக்கு பிடிக்கவில்லை. ஒன்பது அரியர் வைத்திருக்கும் நீ எனக்கு தகுதி இல்லை என்கிறார். இதனால் பரிமள் ராப்பகலாக படித்து அனைத்து பாடங்களிலும் தேறுகிறார்.

ஆனாலும் சந்தியா மனம் மாறவில்லை. தனது தந்தை கோட்டா சீனிவாசுக்கும் மாமா மகாதேவனுக்கும் தீராத பகை. இரு குடும்பத்தினரையும் ஒன்று சேர்க்க சந்தியா போராடுகிறார். வீட்டை விட்டு ஓடிவிடு. திரும்பி வரும்போது உன்னை யாரும் கட்டிக்கமாட்டார்கள். வேறு வழியின்றி எனக்கு உன் தந்தை திருமணம் செய்து வைப்பார் பிரிந்த குடும்பம் சேர்ந்து விடும் என்று மாமா மகன் ஆலோசனை சொல்ல அதன்படி வீட்டை விட்டு ஓடுகிறார்.

பரிமளும் வேறு விதமாய் காய் நகர்த்த அதே நாளில் வீட்டை விட்டு ஓடுகிறார். இருவரும் காதலித்து ஓடிவிட்டதாக அபார்ட்மென்ட் அல்லோலப்படுகிறது. ஊட்டிக்கு செல்லும் சந்தியாவை பின் தொடர்ந்து செல்லும் பரிமள் அவரை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார்.

ஒரே வீட்டில் தங்குகின்னர். சந்தியா தன் மீது வைத்துள்ள நம்பிக்கை அவரை மனம்மாறச் செய்கிறது. இருவரும் ஊருக்கு திரும்புகின்றனர். ஓடிப்போன அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் இருவருமே நாங்கள் காதலிக்கவில்லை என்று மறுக்கின்றனர்.

இதையடுத்து முறைப்பையனுடன் சந்தியாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போது தன் மீதுள்ள காதலில் பரிமள் ஊட்டிக்கு வந்ததும் தன் மீது அவர் வைத்துள்ள ஆழமான அன்பும் சந்தியாவுக்கு தெரிகிறது. பரிமள் மேல் காதல் கொள்கிறார். இன்னொரு புறம் சந்தியா முறைப்பையனை திருமணம் செய்ய ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து இருவரும் மணக்கோலத்தில் மணமேடையில் நிறுத்தப்படுகின்றனர். காதல் வென்றதா? என்பது கிளைமாக்ஸ்.

நடிகை சங்கீதாவின் சித்தி மகன் பரிமள் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம். துறுதுறு மாணவனாக வரும் அவர் காதல் வயப்பட்டதும் படிப்பில் சீரியஸ் ஆகி அனைத்து பாடங்களிலும் பாஸ் செய்வதும் காதல் கை கூடாமல் துவண்டு நிற்பதும் பக்குவப்பட்ட நடிப்பு.சந்தியாவை மடக்க அவருக்கு தெரியாமல் பின்னால் ஓடிப்போனதும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. காதலிக்காக குளிரில் நடுங்கி டீ கடையில் உறங்கும்போது பரிதாப பட வைக்கிறார்.

ஆரம்பத்தில் பரிமளை உதாசீனம் செய்யும் சந்தியா தனது செருப்பு, பையை பீரோவில் பாதுகாத்து வரும் பரிமள் காதலை உணர்ந்து தடுமாறுவது ஜீவன்.

காதல் தூது போய் தோட்டா சீனிவாசராவிடம் அடிபடும் சுமன் ஷெட்டி சிரிக்க வைக்கிறார். இமான் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றனர். கலகலப்பான திரைக்கதையில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கண்மணி. வீடு, காம்பவுண்ட் என நகரும் நாடகத்தன காட்சிகள் வேகத்தடை போடுகின்றன.


நன்றி: மாலை மலர்

Sunday 13 December 2009

தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி!!

Posted by மௌனமான நேரம் | Sunday 13 December 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி!!

இந்தியாவின் பலத்தை காட்டிட அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்த வேண்டியுள்ளது. விஞ்ஞான ரீதியாக முன்னேற்றம் காணும் நாடுகளில் நாமும் ஒரு சேர வருகிறோம் என அவ்வப்போது இந்தியா நிரூபித்து வருகிறது. இன்று காலை வங்கக்கடல் பகுதியில் தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறையினர் , கப்பற்படை இணைந்து உருவாக்கிய இந்த தனுஷ் ஏவுகணை ஏறக்குறைய பிரிதிவியின் சற்று முன்னேற்ற வடிவம் ஆகும்.

இது அணு ஆயுதம் சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. இது கடல் மற்றும் கடலோர பகுதியில் 350 கிமீ தூரம் வரையிலான இலக்குகளையும் தாக்கக் கூடிய திறன் பெற்றது.

கடந்த 2000 ல் ஏப்ரல் 11ம் தேதி தனுஷ் ஏவுகணையின் முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது தோல்வியை தழுவியது. சில தொழில்நுட்ப கோளாறுகளால், ஏவுகணையின் பல பகுதிகள் வெடித்து சிதறின. இந்த ஏவுகணையின் சோதனை கடந்த 2007ம் ஆண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

Saturday 12 December 2009

தேர்தல் சிறப்பு அசைவ உணவகம்..வாங்க.. வாங்க!!

Posted by மௌனமான நேரம் | Saturday 12 December 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
தேர்தல் சிறப்பு அசைவ உணவகம்..வாங்க.. வாங்க!!

திருச்செந்தூர் சட்டசபை இடைத்தேர்தலையொட்டி தொகுதிக்குட்பட்ட வடக்கு ஆத்தூரில், "தேர்தல் சிறப்பு அசைவ உணவகம்' கடந்த சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது.

தேர்தல் காலத்தை குறிவைத்து திறக்கப்பட்ட இந்த ஓட்டலில் விதவிதமான அசைவ உணவுகள் கிடைப்பதால், மூன்று வேளையும் கட்சிக்காரர்களின் கூட் டம் அதிகம் காணப்படுகிறது. சாதாரண நாட்களில் அதிக விலை கொடுத்து அசைவ உணவு சாப்பிட பலரும் யோசிப்பர்.

இடைத்தேர்தலையொட்டி, கையில் ஆயிரம், ஐநூறு என தாராளமாக பணம் புரள்வதால், விலையைப்பற்றி கட்சித் தொண்டர்கள் கவலைப்படாமல் விரும்பியதை உண்டு மகிழ்கின்றனர்.

நல்ல ஐடியா!! பிழைக்க தெரிந்தவங்க!!

உலக அழகி!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்

உலக அழகி!

ஜிப்ரால்டரை சேர்ந்த கைனே அல்டோரினோ 2009ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்றார்.

தென்னாப்ரிக்கா, ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த உலக அழகி போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த பூஜா சோப்ரா உட்பட, 112 நாடுகளை ச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதில், ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்த கைனே அல்டோரினோ, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு உலக அழகிக்கான பட்டம் சூட்டப்பட்டது.

இருபத்திரண்டு வயதாகும் கைனே அல்டோரினோ, மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியாற்றி வருகிறார். உலக அழகி பட்டம் வென்ற பின், கண்களில் கண்ணீர் மல்க, "நன்றி தென்னாப்ரிக்கா' என, நெகிழ்ந்தார். இந்தப் போட்டியில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெர்லா பெல்ட்ரான் இரண்டாவது இடத்தையும், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த டட்டும் கேஷ்வர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இந்த ஆண்டுக்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கைனே அல்டோரினோவுக்கு, கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ரஷ்ய அழகியான கெனியாசுகி நோவா, உலக அழகி மகுடத்தை சூட்டினார். இப்போட்டியின் நடுவர்களில் ஒருவராக, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா பங்கேற்றார்.

டிசம்பரில் தீபாவளி!!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
டிசம்பரில் தீபாவளி!!!

மொகாலியில் நடந்த இரண்டாவது "டுவென்டி-20' போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி, இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தனது 28வது பிறந்தநாள் கொண்டாடிய யுவராஜ், "ஆல்-ரவுண்டராக' அசத்தி வெற்றிக்கு பலமாக இருந்தார். இப்போட்டியில் அதிக ரன்களை சேஸ் செய்த இந்திய அணி புதிய வரலாறு படைத்தது. இவ்வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட "டுவென்டி-20' தொடர் சமனானது.

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, சேவக் அதிரடி துவக்கம் தந்தார். இவருடன் இணைந்த காம்பிர் (21) துரதிருஷ்டவசமாக ரன்-அவுட்டானார். அடுத்து வந்த தோனி பொறுப்புடன் ஆடினார். மறுமுனையில் இலங்கை பந்து வீச்சை விளாசித் தள்ளிய சேவக், "டுவென்டி-20' அரங்கில் 2 வது அரைசதம் கடந்தார். இவர் 64 ரன்களுக்கு (7 பவுண்டரி, 3 சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.

பின்னர் களமிறங்கிய யுவராஜ், தோனியுடன் இணைந்து அதிரடியில் மிரட்டினார். 20 பந்தில் அரை சதம் பதிவு செய்தார் யுவராஜ். "டுவென்டி-20' அரங்கில் இவர் அடிக்கும் 5 வது அரைசதம் இது. இந்த ஜோடி 3 விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்த நிலையில், தோனி அவுட்டானார். 46 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்த இவர், அரை சதம் அடிக்கும் வாய்ப்பை 4 ரன்னில் நழுவவிட்டார்.

அடுத்து வந்த ரெய்னா (9) சொதப்பினார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. முதல் பந்தை யுவராஜ் சிக்சருக்கு விரட்ட, 19.1 ஓவரில் 211 ரன்கள் குவித்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. யுவராஜ் 60 (5 சிக்சர், 3 பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 4 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் கைப்பற்றினார்.

நேற்று இலங்கை அணி நிர்ணயித்த 206 ரன்களை "சேஸ்' செய்த இந்திய அணி 211 ரன்கள் குவித்தது. இதன் மூலம் "டுவென்டி-20' அரங்கில் அதிக ரன்களை "சேஸ்' செய்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது. இதற்கு முன் கடந்த 2007 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 205 ரன்களை தென் ஆப்ரிக்க அணி (208 ரன்) "சேஸ்' செய்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

குஷ்பு பேசியும் அழியாத தமிழ்..!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
குஷ்பு பேசியும் அழியாத தமிழ்..!


மாநில அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை குஷ்பு, தமிழ் சொற்களை பிழைகளுடன் உச்சரித்து, பார்வையாளர்களை குரலெழுப்பச் செய்துவிட்டார். அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார், முதலமைச்சர் கருணாநிதி.

2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான மாநில அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை குஷ்பு, 'வள்ளுவர்' என்று சொல்வதற்கு பதிலாக 'வலுவர்' என்றும், 'குத்தகைதாரர்' என்பதற்கு பதிலாக 'குத்துகைகாரர்'' என்றும் கூறினார். 'உளியின் ஓசை' என்பதற்கு 'ஒளியின் ஓசை' என்றார்.


பார்வையாளர்களிடம் இருந்து கூச்சல் எழவே, "இது தமிழுங்க. 30 பேஜ் இருக்கு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க," என்று கெஞ்சினார் குஷ்பு.

இதற்கெல்லாம் மேலாக, "பெரியாரின் கொள்கைகளை" என்று சொல்வதற்கு பதிலாக "பெரியாரின் கொள்ளைகளை" என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது.

அப்போது, சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்காக முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை அறிவிக்கும் நேரத்தில், சற்றே உஷாரான அமைச்சர் பரிதிஇளம்வழுதி, அவசரம் அவசரமாக குஷ்புவின் பேச்சை இடைமறித்து, முதலமைச்சர் பற்றிய முன்னுரையை தானே அறிவித்தார். அப்போது மேடையில் இருந்து குஷ்பு சென்றுவிட்டார். அதன்பிறகு, நிகழ்ச்சியின் இறுதிவரை அமைச்சரே தொகுத்து வழங்கினார்.

இந்த தமிழ் குளறுபடியை தனது உரையில் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் கருணாநிதி, "நான் எழுதிய வசனங்களை வைத்துக் கொண்டே ஒரு கற்பனை நாடகத்தை இங்கே நடத்தினார்கள். அதில் வசந்த சேனைக்கு பதிலாக இப்போது ஆங்கிலம் வந்து அமர்ந்திருப்பதை எடுத்துச் சொல்லி, தமிழைக் காப்பாற்றியே தீருவோம் என்றனர்.

தமிழை யாரும் அழிக்க முடியாது. குஷ்பு தமிழிலே பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழின் அந்த மொழி வல்லமை எத்தகையது என்பதை நாம் உணரலாம். தமிழுக்கு அத்தகைய சக்தி உண்டு. அதனால் தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்ற மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி இருக்கின்றது," என்றார் முதலமைச்சர் கருணாநிதி.

சமத்துவபுரம்!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்

சமத்துவபுரம்!


2001-ம் ஆண்டு தேர்தலில் அச்சிறுப்பாக்கம் தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு வென்ற செல்வராஜ் சில மாதங்களிலேயே இறந்து போனார்.

அப்போது நடந்த அவருடைய படத்திறப்பு விழாவுக்கு வந்த டாக்டர் ராமதாஸ், ''செல்வராஜ் குடும்பத்தினர் குடிசையில் வாழ்வதைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது. சீக்கிரமே ஒரு வீடு கட்டித் தருகிறேன்'' என்று சூளுரைத்தார். அதன் பிறகு ஆண்டுகள் உருண்டோடியதுதான் மிச்சம்; வீடு வரவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தி.மு.க. ஆத்தூரில் தொடங்கப்பட்ட சமத்துவபுரத்தில் செல்வராஜின் குடும்பத்துக்கு முதல் வீட்டை கொடுத்து அசத்திவிட்டார்கள்!

கடவுளும் காதலும்...

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
கடவுளும் காதலும்...

'கடவுளும் காதலும்...' என்ற டைட்டிலில் டைரக்டர் வேலுபிரபாகரன், தன் அடுத்த படத்துக்கான பணியில் இறங்கிவிட்டார். 'கடவுளுக்கும் காதலுக்கும் தோற்றம் எப்படி?' என்ற ஆராய்ச்சியை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை அது என்கிறது இயக்குநர் வட்டாரம்! 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்தில் இருக்கும் சில சம்பவங்களை இதில் விஷவலாக வெளிப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறாராம் வேலுபிரபாகரன்.

ரீலுக்கு ரீல், கிறங்கடிக்கும் கிளாமர் காட்சிகளும் இடம்பெறப் போகும் இந்தப் படத்தின் நாயகிக்கு 'சானியா' என்ற நாமகரணத்தை இவரே சூட்டியுள்ளாராம்! நடத்துங்க, நடத்துங்க!

எப்படி திருத்துவது இவர்களை?

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
எப்படி திருத்துவது இவர்களை?

தனி தெலுங்கான அமைக்க மத்திய அரசு பச்சைக் கொடி காட்டியுள்ள நிலையில், நிர்வாக வசதிகளைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தை இரண்டு மாநிலங்களாக பிரிப்பது நல்லது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று நிருபர்கள் சந்திப்பில், தமிழகத்தை பிரிக்க வேண்டும் என ஒரு சில அமைப்புகள் வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், "சிறியதே அழகானது. பெரிய மாநிலங்களில் இருந்து பிரிக்கப்பட்ட சிறிய மாநிலங்கள் இப்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. எனவே, நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டு மாநிலங்களாகப் பிரிப்பதே நல்லது," என்றார்.

எனினும், தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பன பற்றிய விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போது, பல தரப்பில் இருந்தும் தனக்கு நெருக்கடி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, 'தனி தெலுங்கானா என்பது 60 ஆண்டுகால போராட்டம். இதற்கு, இப்போதிருக்கும் மாநிலங்களை சிறிய மாநிலங்களாக பிரிப்பது என்பது அர்த்தமல்ல. மாநிலங்களை பிரிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஒரு மாநிலம் உருவாவதற்கு பல்வேறு படிநிலைகள் உள்ளன. இப்போது இருப்பது வெறும் அடிப்படை நிலைதான்,' என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருப்பது கவனத்துக்குரியது.


நன்றி: விகடன்


எப்படி திருத்துவது இவர்களை?

கமல் ஜோடி தமன்னா!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்

கமல் ஜோடி தமன்னா!!

நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவிருக்கிறார். உன்னைப்போல் ஒருவன் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், டைரக்டர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி வருகிறாராம்.

தசாவதாரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க உள்ளது. முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக எடுக்கப்படும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thursday 10 December 2009

விபசாரத்தை ஏன் சட்டபூர்வமாக ஆக்கக் கூடாது?

Posted by மௌனமான நேரம் | Thursday 10 December 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
விபசாரத்தை ஏன் சட்டபூர்வமாக ஆக்கக் கூடாது?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

விபசாரத்தை தடுக்க முடியவில்லை என்றால் அதை ஏன் சட்டப்பூர்வமாக ஆக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.


சிறுமிகளும், பெண்களும் கடத்தப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதை மத்திய அரசு தடுக்ககோரி பச்சப்பன் பச்சோ அந்தோலன் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை (09.12.2009) விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், விபசாரத்தை சட்டப்பூர்வமாக தடுப்பது கடினமாக உள்ளது என்று தெரிவித்தார்.


இதனால், நீதிபதிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் இது குறித்து கூறியதாவது, உலகின் புராதன தொழிலான விபசாரத்தை சட்டப்பூர்வமாக தடுப்பது கடினம் என்று சொல்கிறீர்கள். உங்களால் விபசாரத் தொழிலை தடுக்க முடியவில்லை என்றால் அதை ஏன் நீங்கள் (மத்திய அரசு) சட்டப்பூர்வமாக ஆக்கக் கூடாது? அப்படி சட்டப்பூர்வமாக ஆக்கினால், அந்த தொழிலை உங்களால் கண்காணிக்க இயலும். அதில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வளிக்க முடியும். மேலும் அவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் தர இயலும்.

பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுவதை தடுக்க அதை சட்டப்பூர்வமாக ஆக்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும். தண்டனை அளிப்பதன் மூலம் உலகில் எங்குமே விபசாரத் தொழிலை தடுக்க முடியவில்லை.

ஏதாவது ஒரு வகையில் இந்த உலகில் விபசாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை எங்குமே சட்டப்பூர்வமாக தடுக்கமுடியவில்லை. எனவே, நீங்கள் ஏன் அதை சட்டப்பூர்வமாக ஆக்க கூடாது?... என்று நீதிபதிகள் கூறினர்.

இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், இதை கவனத்தில் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும், நீதிபதிகள் இருவரும் கூறுகையில், "நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி பற்றி நாம் பெருமையுடன் பேசுகிறோம். ஆனால், நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தில் இருந்து தற்போது 37 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. 5, 6 குடும்பங்களின் வளர்ச்சியை வைத்து, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்து இருப்பதாக கருதக் கூடாது. ஒழிக்கப்படவேண்டிய வறுமை நிலை காரணமாகத்தான் சிறுமிகள், பெண்கள் கடத்தப்படுவதும், விபசாரத் தொழில் செழிப்பாகவும் நடப்பதற்கு முக்கிய காரணம்'' என்று தெரிவித்தனர்.

Sunday 6 December 2009

இந்தியாவில் புது இரண்டு சக்கர வாகனங்கள்!!

Posted by மௌனமான நேரம் | Sunday 6 December 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
இந்தியாவில் புது இரண்டு சக்கர வாகனங்கள்!!


ஹோண்டா : ஹோண்டா நிறு​வ​னத்தின் 110 சிசி திறன் கொண்ட நியூ ஏவி​யேட்​டர் ஸ்கூட்​டர் சென்​னை​யில் அறி​மு​கப்​ப​டுப்பட்டது. இந்த புதிய வகை ஸ்கூட்டரை அந்நிறு​வ​னத்​தின் துணைத் தலை​வர் அனு​பம் மொஹிண்ட்ரூ அறி​மு​கப்​ப​டுத்​தி​னார். ஏற்​க​னவே அறி​மு​கப்​ப​டுத்​தப்​பட்​டுள்ள ஏவி​யேட்​ட​ரைக் காட்​டி​லும் 15 சத​வீ​தம் கூடு​தல் செயல் திறன் கொண்​டது நியூ ஏவியேட்டர் ஸ்கூட்டர். எரி​பொ​ருளை சிக்​க​னப் படுத்தும் இந்த ஸ்கூட்டரின் விலை முறையே ரூ. 43,938 மற்​றும் ரூ. 48,938 ஆகும். ஐந்து கண்​க​வர் வண்​ணங்​க​ளில் இவை வெளி​வந்​துள்​ளன.​ ​ டெலஸ்​கோப்​பிக் சஸ்​பென்​ஷன்,​ முன்​புற டிஸ்க் பிரேக்,​ 20 லிட்​டர் கொள்​ள​ளவு கொண்ட பெட்டி,​ டஃப் அப் டியூப், கோம்பி-​பிரேக் சிஸ்​டம்,​ பரா​ம​ரிப்பு தேவைப்​ப​டாத பேட்​டரி,​ விஸ்​கோஸ் ஏர் ஃபில்​டர் ஆகி​யன இதில் புதி​தாக சேர்க்​கப்​பட்​டுள்ள சிறப்​பம்​சங்​க​ளா​கும். அ​டுத்த ஆண்டு ஏப்ர​லில் அமல்​ப​டுத்​தப்​பட உள்ள பாரத்-​3 சுற்​றுச் சூழல் விதி​மு​றைக்​கேற்ப சான்​றி​தழ் பெற்ற வாக​ன​மாக இது வெளி​வந்​துள்​ளது.


டி.வி.எஸ்: டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் புதிய வகை பைக் மற்றும் ஸ்கூட்டர் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. புதிய பைக் மற்​றும் ஸ்கூட்​டரின் தனித்துவம் என்னவென்றால், கிளெட்ச் இல்​லா​மல் தானாக இயங்​கும் கியர்​கள் கொண்டு இருப்பதே ஆகும். டிவி​எஸ் ஜைவ்...டிவி​எஸ் ஜைவ் மோட்​டார் சைக்​கிள் கிளெட்ச் இல்​லா​மல் தானாக இயங்​கும் வகை​யில் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது. பைக் எந்த கிய​ரில் சென்று கொண்​டி​ருந்​தா​லும் உட​ன​டி​யாக நியூட்​ர​லுக்​குக் கொண்டு வர முடி​யும்.

கியரை படிப்​ப​டி​யா​கக் குறைத்து நியூட்​ர​லுக்கு வர வேண்​டிய அவ​சி​யம் இல்லை. பைக்கை எந்த கிய​ரில் நிறுத்​தி​னா​லும்,​ அதே கிய​ரில் வண்​டியை தொடர்ந்து இயக்க முடி​யும். ​ 110 சிசி என்​ஜின்,​ 12 லிட்​டர் கொள்​ள​ளவு உள்ள பெட்​ரோல் டேங்க் ஆகி​ய​வற்​று​டன் கூடு​த​லாக பைக் இருக்​கை​யின் அடி​யில் பொருள்​களை வைத்​துக் கொள்ள இட வசதி உள்​ளது. இதில் ஒரு குடை,​ தண்​ணீர் பாட்​டில்,​ ஃபைல் ஆகி​ய​வை​களை வைத்​துக் கொள்​ள​லாம். இதன் விலை ரூ. 41 ஆயி​ர​மா​கும்.டிவி​எஸ் வீகோ 110 சிசி என்​ஜின்,​​ 12 அங்​குல அள​வுள்ள அலாய் வீல்​கள் பொருத்​தப்​பட்​டுள்ள இந்த ஸ்கூட்​டர் குடும்​பத்​தில் உள்ள அனை​வ​ரும் எளி​தில் ஓட்​டக் கூடிய விதத்​தில் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. ஸ்கூட்​ட​ரின் பின்​பு​றத்​தில் பெட்​ரோல் டேங்க் அமைக்​கப்​பட்​டுள்​ளது. ஐந்து லிட்​டர் கொள்​ள​ளவு பெட்​ரோல் டேங்க்,​செல்​போனை சார்ஜ் செய்​யும் வசதி உள்​ளிட்​டவை இதில் உள்​ளன. கருப்பு,​ கரு​நீ​லம்,​ கேப்​பச்​சீனோ ப்ரெüன்,​ சில்​வர் உள்​ளிட்ட ஐந்து நிறங்​கள் கொண்ட இதன் விலை ரூ. 42 ஆயி​ரம் ஆகும்.

என்பீல்டு: டில்லியில் கிளாசிக் 350 ராயல் என்பீல்டு பைக் அறிமுகப் படுத்தப் பட்டது. எஜ்சர் குரூப் எம்.டி., மற்றும் சி.இ.ஓ., சித்தார்த் லால் மற்றும் பைக் வடிவமைப்பாளர் சிக்கா ஆகியோர் பைக்கை அறிமுகப் படுத்தினர்.

பஜாஜ்: பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஜப்பானின் கவாஸாக்கி நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் பல சொகுசு பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், கவாஸாக்கி பஜாஜ் சார்பில், நின்ஜா 250 ஆர் என்ற பெயரில் புதிய பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், இந்த பைக்கின் விலை ரூ.2.69 லட்சமாக இருக்கும். ஐரோப்பிய நடைமுறைகளுக்கு ஏற்றவாறு இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபியூல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பம் கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 42 கி.மீ., மைலேஜ் தரக் கூடியது. இந்தியாவில் ஏற்கனவே, யமஹா மற்றும் சுசூகி நிறுவனங்கள் சார்பில் சொகுசு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு போட்டியாக தற்போது, நின்ஜா 250 ஆர் பைக் களத்தில் குதித்து உள்ளது. டெலஸ்கோபிக ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் யுனி டிரக் சஸ்பென்ஷன் ஆகியவை இந்த பைக்கின் முன்பக்க மற்றும் பின் பக்க பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக், கவாஸாக்கி நிறுவனத்தின் தாய்லாந்து தொழிற்சாலையில் இருந்து உதிரி பாகங்களாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் ஒன்றாக இணைக்கப்படும். வெளிநாட்டில் இருந்து முழுமையான பைக்காக இறக்குமதி செய்தால், 100 சதவீத வரி செலுத்த வேண்டும். இதை தவிர்ப்பதற்காகவே, உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு முழு மைக்காக உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக 11 சதவீத வரி தான் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் தான், நின்ஜா 250 ஆர் பைக்கின் விலை ரூ.2.69 லட்சம் என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது.

இந்தியா நம்பர்- 1, கிரிக்கெட் டெஸ்ட் அரங்கில் 77 ஆண்டு வரலாற்றில் முதல் சாதனை!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
இந்தியா நம்பர்- 1, கிரிக்கெட் டெஸ்ட் அரங்கில் 77 ஆண்டு வரலாற்றில் முதல் சாதனை!!

டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. மும்பை டெஸ்டில் அபாரமாக ஆடிய இந்திய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. டெஸ்ட் போட்டி தரத்தில் இந்தியா உலக சாதனை படைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார்.


இன்று ( 6ம் தேதி ) இந்தியா, இலங்கை அணிகள் மோதிய 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 393 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 726 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் ‌ஆட்ட துவக்கம் முதலே சரிய துவங்கின.


இறுதியாக இலங்கை தனது 2வது இன்னிங்சில் 309 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை ‌பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சங்ககரா 137 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்த டெஸ்ட்டில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்று, தொடரை வென்று சாதனை புரிந்துள்ளது.

ஆட்ட நாயகனாக சேவாக் : அதிகமாக ரன்குவித்த சேவாக் ( 293 ரன்கள் ) ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முத்தையா முரளிதரனுக்கு பந்துவீச்சாளர் விருது வழங்கப்பட்டது. குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்த ஜோடியாக சேவாக்-டிராவிட் ஜோடி தேர்வு செய்யப்பட்டது.

Saturday 5 December 2009

தமன்னா!!

Posted by மௌனமான நேரம் | Saturday 5 December 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
தமன்னா!!

தமிழ் திரையுலகமே தமன்னா பக்கம் சாய்ந்திருக்கிறது. சொல்லிக்கிற மாதிரி அப்படி ஒன்றும் அழகு இல்லை என்று ஆரம்பத்தில் ஓரங்கட்டப்பட்ட தமன்னாவுக்கு இப்போ செம மவுசு.

ஹூரோக்களும், இயக்குநர்களும், புரடியூசர்களும் போட்டி போட்டுக்கொண்டு தமன்னாவை புக் பண்ணுகிறார்கள்.

அதுமட்டுமல்ல சின்ன இடைவெளி கிடைத்தாலும் தமன்னா பற்றி பெரிய புராணம் பாடிவிடுகிறார்கள். படிக்காதவன் பட ஆடியோ வெளியீட்டின் போது சேரனும், அமீரும் மாறி மாறி அவரின் பக்கத்தில் நின்றுகொண்டார்கள்.

"எனக்கு தமன்னாவ ரொம்ப பிடிக்கும். நான் அவரோட அழகுல மயங்குறேன். அதுக்காக நான் அவர காதலிக்கிறேன்னு எழுதிடாதீங்க" என்று ஜெயம்ரவி போட்டுத்தாக்கினார்.

தில்லாலங்கடி பட விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், தமன்னாவின் அழகு சூப்பர் என்றார். இப்போது பையா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஷங்கர், "தமன்னாவின் நடிப்பில் படத்துக்கு படம் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. சீக்கிரமே அவர் சிம்ரன் இடத்தை பிடிப்பார்" என்றார்.

படிக்கட்டு பயணங்கள்!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
படிக்கட்டு பயணங்கள்!!!





போலீஸ் பாதுகாப்பில் படிக்கட்டு பயணங்கள்!!

இப்போ என்ன பண்ணுவீங்கோ!!


ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க நயன்தாரா மறுப்பு....

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க நயன்தாரா மறுப்பு....

நடிகை நயன்தாரா ஹீரோக்களுடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்டார். முன்பெல்லாம் தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் அநியாயத்துக்கு நெருக்கம் காட்டி வந்த நயன்தாரா பிரபுதேவாவுடனான லவ்வுக்கு பிறகு நெருக்கத்துக்கு நோ சொல்லி விடுகிறாராம். தற்போது ஆர்யா ஜோடியாக நடி்தது வரும் பாஸ்கர் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க முடியாது என்று கறாராக கூறி விட்டாராம்.

காபி வித் அனு சீசன் 3ல் நயன்தாரா!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
காபி வித் அனு சீசன் 3ல் நயன்தாரா

புது நிகழ்ச்சிகளில் வழங்குவதில் புதுமை படைத்து வரும் விஜய் டி.வியில், "காபி வித் அனு சீசன் 3' மீண்டும் இடம் பெற துவங்கி உள்ளது. "அணு அள​வும் பய​மில்லை' சீசன் ஒன்றை முடித்​து​விட்டு,​ மீண்​டும் இந்​நி​கழ்ச்​சிக்​குப் பொறுப்​பேற்​கி​றார் அனு​ஹா​சன். முதல் வார சிறப்பு விருந்​தி​னர் நயன்​தா​ரா​வாம். "கலை' முதல் "காதல்' வரை மனம் விட்டு பேச தயாராகி வருகிறாராம் நயன்தாரா. விரைவில் விஜய் டி.வி.,யில் நயன்தாராவை எதிர்பார்க்கலாம்.

சந்தையில் புதுசு - இந்தியாவில் புதிய ரக கார்கள் அறிமுகம்

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
சந்தையில் புதுசு - இந்தியாவில் புதிய ரக கார்கள் அறிமுகம்

சென்னையில் நியூ மெர்சிடிஸ் பென்ஸ் ஈ350 சி.டி.ஐ., ப்ளூ எபியன்சி கார் அறிமுகப் படுத்தப் பட்டது. குறைந்த எரி பொருள் செலவில், புதிய இ350 கார் அறிமுகப் படுத்தப் பட்டது. டீசலில் இயங்க கூடிய இந்த காரை பிரபல சொகுசு கார் நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஜ் அறிமுகப் படுத்தி உள்ளது. இதன் மதிப்பு 45 லட்ச ரூபாயாகும். இதனை, மெர்சிடிஸ்-பென்ஜ் இந்தியா தலைமை செயல் அதிகாரி வில்பிரைட் ஆல்பர் அறிமுகப் படுத்தினார். இந்நிறுவனம், ஏற்கனவே அறிமுகப்படுத்திய இதே ரக கார்களை விட, இ350 ரக காருக்கு 13 விழுக்காடு எரிபொருள் குறைவாக செலவழியும். இதன் மற்றொரு சிறப்பம்சம் சுற்றுச் சூழல் மாசுபடுத்தாத தன்மையாகும்.


கோல்கட்டாவில் புதிய இன்டிகா மான்ஷா கார் அறிமுகப் படுத்தப் பட்டது. இதனை டாடா மோட்டார்ஸ் தலைவர் ( கார் உற்பத்தி குழு) நிதின்செத், மாடல்களுடன் அறிமுகம் செய்து வைத்தார்.



மும்பையில் பிரிமியர் ரியோ கார் அறிமுகப் படுத்தப் பட்டது. முதல் காம்பாக்ட் டீசல் மினி-எஸ்.யு.வி.,வை அறிமுகப் படுத்தி வைப்பவர் பிரீமியர் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மைதிரியா தோஷி.

எஸ்.எம்.எஸ் - ஒரு காசு: ரிலையன்ஸ் அதிரடி!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
எஸ்.எம்.எஸ் - ஒரு காசு: ரிலையன்ஸ் அதிரடி!

ஒரு எஸ்.எம்.எஸ்., ஒரு காசு என்ற கட்டணத்தில் புதிய திட்டத்தை ரிலையன்ஸ் இன்று முதல் அறிமுகம் செய்கிறது.


நிறுவனத்தின் தமிழகம்,கேரள தலைவர் வி.ஜி.சோமசேகர் நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: ரிலையன்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 'சிம்ப்ளி ரிலையன்ஸ்' திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப திட்டங்களை அறிவிக்கிறோம். எங்களிடம் மறைமுக கட்டணம் இல்லை. எஸ்.எம்.எஸ்., உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு எஸ்.எம்.எஸ்., ஒரு காசு திட்டத்தை இன்று முதல் அறிமுகம் செய்கிறோம்.


சி.டி.எம்.ஏ., - ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தை, மாதம் 11 ரூபாய் செலுத்தி பெறலாம். உள்ளூர், ரோமிங் என எந்த நெட்வொர்க்கிற்கு மெசேஜ் அனுப்பினாலும் இதே கட்டணம் தான். ரிலையன்சிற்கு நாடு முழுவதும் சொந்தமாக டவர், கேபிள் இருப்பதால் எந்த போட்டியையும் சமாளிப்போம், என்றார்.


நன்றி: தினமலர்

இந்தியாவில் தங்கம் விலை திடீர் வீழ்ச்சி!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
இந்தியாவில் தங்கம் விலை திடீர் வீழ்ச்சி!

வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.1707 ஆக இருந்தது. நேற்று அது ரூ.1687 ஆக குறைந்தது. இன்று (சனி) தங்கம் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. சென்னையில் இன்று காலை நிலரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1638 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஒரு பவுன் ஆபரண தங்கம் இன்று காலை ரூ.13,104 ஆக விற்பனை செய்யப்பட்டது. இது நேற்றைய விலையை விட ரூ.392 குறைவாகும்.

ஒரு கிராமிற்கு 49 ரூபாய் சரிவு ஏற்பட்டதால் இன்று நகை வாங்க சென்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2 நாட்களில் ஒரு பவுன் தங்கம் விலை 624 ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.