Monday 31 August 2009
சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அத்துமீறல்!!
இப்பிரச்சனை பகுதியில், சீன ஹெலிகாப்டர்கள் தாழ்வாகப் பறந்து காலாவதியான உணவுப் பாக்கெட்களை வீசிச் சென்றுள்ளது.
இந்த அத்துமீறல் உடனடியாக கண்டுபிடிக்க படவில்லை. இத்தகையான அத்துமீறல்களை தடுக்கவும், உடனடியாக கண்டுபிடிக்கவும் இந்தியா தன் இராணுவ திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும்..
வரும் முன் காப்பதே சிறந்தது!!..
Sunday 30 August 2009
மத்திய அரசு 100 நாள் சாதனைகளும் வேதனைகளும்
மத்தியில் புதிதாக பதவியேற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, அடுத்த 100 நாட்களில் செயல்படுத்த இருக்கும் 25 அம்ச திட்டங்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வெளியிட்டு இருந்தார்.
அதன் படி, 100 நாள் செயல் திட்டத்தை அனைத்து அமைச்சகங்களும் வகுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த 100 நாள் நிறைவான நிலையில் சில துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், பலவற்றில் கடும் சோதனைகளை மத்திய அரசு சந்தித்து வருகிறது.
சில சாதனைகள்:
1. உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்ற பின் உள்நாட்டுப் பாதுகாப்பு மேம்பட்டிருப்பது
2. நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக இன்போசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பது
3. 14 வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வி மசோதா நிறைவேற்றப்பட்டது
4. பஞ்சாயத்துகளில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது,
இவை எல்லாம் சாதனைகளாக கருத படுகிறது.
சில வேதனைகள்:
1. நாடு முழுவதும் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் சுகாதார அமைச்சகத்துக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தியுள்ளது
2. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு
3. பருவ மழை தவறும் நிலையில், உணவுப் பொருள்களின் உற்பத்தி குறையும். இந்நிலையில், விலைவாசி கட்டுக்குள் கொண்டு வர பெரும்பாடு பட வேண்டும்.
Saturday 29 August 2009
சோம்நாத் ஒரு ஜென்டில்மேன்!
மக்களவைத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு பெரும்பாலும் கோல்கத்தாவில் இருந்து வரும் சோம்நாத், தில்லி வரும் சமயங்களில் அவர் தங்கியிருக்கும் இடத்தில் பாதுகாவலர்கள் போடப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில், பாதுகாப்பு தருமாறு நான் கோரவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெறவேண்டும் என்று மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டு நலனில் அக்கறையுள்ள சோம்நாத் சாட்டர்ஜி உண்மையில் ஒரு ஜென்டில்மேன் தான்.
எப்படியாவது பிரதமர் பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற பேராசை அத்வானிக்கு - ஜஸ்வந்த் சிங்
"....எப்படியாவது பிரதமர் பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற பேராசை அத்வானிக்கு இருந்தது. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வது என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.
பார்ப்பதற்கே வினோதமாக இருந்த ஒருவர் பையில் கட்டுகட்டாக பணம் எடுத்துவந்தார். அவையெல்லாம் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காகக் கொடுத்தவை என்று கூறப்பட்டது. சுதீந்திர குல்கர்னி அந்த நபருடன் இருந்தார். அந்த நபரைப் பற்றிக் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட அத்வானி, ""இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டுபோய் மக்களவையில் அப்படியே காட்டுங்கள்'' என்று அந்த 3 உறுப்பினர்களிடம் கூறிவிட்டார்.
ஆளும் கூட்டணி அரசைக் கவிழ்ப்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர் அவசரப்பட்டதைப் போலவே தெரிந்தது.
தலைமைப் பதவிக்கு வர நினைப்பவர்களுக்கு இவையெல்லாம் அழகு அல்ல என்பதை அவர் உணரவில்லை. அந்தப் பணம் அப்படியே ஆளும் கூட்டணி தரப்பிலிருந்து தரப்பட்டிருந்தாலும் முதலில் அதை மக்களவைத் தலைவரிடம் கூறி, அவரின் கவனத்துக்குக் கொண்டுவந்துவிட்டு அவர் என்ன கூறுகிறாரோ அதன்படி செயல்பட்டிருக்கலாம்.
மக்களவைத் தலைவர் பாரபட்சமாக நடந்து கொண்டுவிடுவார் என்ற அச்சம் இருந்திருந்தால் அந்தப் பணத்தை அவைக்குக் கொண்டுவந்துவிட்டு, அதைப் பற்றிப்பேசி புகார் தெரிவித்துவிட்டு பிறகு அவையின் தலைவரிடம் ஒப்படைத்திருக்கலாம்.
இதனால் மக்களவையின் மாண்பும் நாட்டின் மரியாதையும் காப்பாற்றப்பட்டிருக்கும். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான என்னிடம் கூட ஆலோசனை கலக்காமலேயே அத்வானி இதைச் செய்தார்.
ராணுவத்தில் தளபதிகளுக்குக் கூறப்படும் இலக்கணமே வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் முன்னணியில் நின்று அதை ஏற்பதுதான். அத்வானிக்கு அந்த குணமே கிடையாது. தவறு நடந்தது என்றால் அந்தப் பழி தன் மீது வந்துவிடக்கூடாது என்று நினைப்பார். நெருக்கடி வந்தால் மௌனம் சாதிப்பார் அல்லது பொறுப்பை யார் மீதாவது சுமத்திவிடுவார்.
ராஜ்நாத் சிங் ஒரு மாநிலத்துக்குத்தான் கட்சித் தலைவராக இருக்கத் தகுதியானவர். அவரை தேசியத் தலைவராக்கியது தவறு.
பாரதிய ஜனதா அரசியல் கட்சியாகவே இல்லை. ஒரு வழிபாட்டுக் கூட்டம், தலைவன் சொல்படி செயல்படும் கும்பல் என்ற அளவுக்குச் சுருங்கிவிட்டது. ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமான சொத்துபோல ஆகிவிட்டது.
நான் வெளிநாடு சென்றிருந்தபோதுதான் பாகிஸ்தானுக்கு இந்திய விமானங்கள் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, எல்லைகளில் நமது துருப்புகள் கொண்டுபோய் நிறுத்தப்பட்டனர். நான் அவ்விரு முடிவுகளையும் ஏற்கவில்லை.
எல்லை பாதுகாப்புப் படையினரை வங்கதேசத்துக்குள் அனுப்புவது என்ற முடிவும் என்னைக் கேட்காமலேயே எடுக்கப்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் இறந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவரை மூங்கிலில் கட்டி தூங்கிவந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு மனம் பதைத்தேன். எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) என்பது உள்துறை அமைச்சகத்தின் கட்டளைப்படிதான் செயல்படும். வங்கதேசத்துக்கு பி.எஸ்.எஃப்-பை அனுப்பியது யார் என்று நான் கேட்டதற்கு எனக்குக் கடைசி வரையில் பதிலே சொல்லவில்லை.." என்றார் ஜஸ்வந்த் சிங்.
பன்றிக் காய்ச்சல் மாத்திரைகள் இனி கடைகளில் கிடைக்கும்!
இந்த மருந்தைத் தயாரிக்கும் அனுமதியை ரன்பாக்ஸி, சிப்ளா, மெட்கோ, ஹெடரோ, ஸ்ட்ரைட்ஸ், ரோச் ஆகிய 6 பெரிய மருந்து நிறுவனங்கள் பெற்றுள்ளன.
Friday 28 August 2009
பச்சை குத்திய நடிகை, இப்போ?
இந்த நெருக்கமான பழக்கத்துக்கு இரண்டு பேரும் புதுசாக ஒரு காரணம் சொல்கிறார்கள். "எங்கள் இரண்டு பேரின் அம்மாக்களும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அதனால் தான் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்'' என்று!
நட்பு உறவிலும், உறவு விவாகரத்திலும் முடியாதவரை தப்பு இல்லைதான்!
மு.க.ஸ்டாலின்-மனைவி துர்கா ஸ்டாலின் உடல் உறுப்புகள் தானம்!
அதை தொடர்ந்து துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினும், தனது உடல் உறுப்பினர்களை தானம் செய்வதாக அறிவித்தார். அதற்கான ஆவணங்களிலும் கையெழுத்திட்டார்.
Wednesday 26 August 2009
வேப்பமரத்தை சுத்தி ஹீரோயினுடன் டூயட் பாடும் விஜயகாந்த்!!
இடைத்தேர்தல் வெற்றி பற்றி கேட்டபோது,
".....எண்பத்தாறு வயதிலும் ஓயாத உழைப்போடும், உறுதியோடும் மக்களுக்காக நல்லாட்சி நடத்தும் தலைவர் கலைஞர் ஒருபக்கம்...
'ஜனநாயகம் செத்துப் போச்சு, அராஜகம் அதிகமாகிப் போச்சு' என்று கூப்பாடு போடும் ஜெயலலிதாவும், அந்தம்மாவுக்கு கைத்தடியா வைகோ, ராமதாஸுன்னு சிலரும் இன்னொரு பக்கம்...
இவங்களுக்கு மத்தியில், வயசான பிறகும் ஹீரோ வேஷம் போட்டுக்கிட்டு வேப்பமரத்தை சுத்தி ஹீரோயினுடன் டூயட் பாடிக்கிட்டிருக்கிற விஜயகாந்த் ஒருபக்கம்... இந்தத் தேர்தலில் தி.மு.க-வை தோற்கடிக்க பலரும் அணி அணியா திரண்டு நின்னாங்க. எல்லாத்தையும் மீறி நடுநிலைமையா நின்னு மக்கள் கொடுத் துட்டாங்களே, தீர்ப்பை..!
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தோளிலேயே மாறி மாறி சவாரி செய்த கம்யூனிஸ்ட்களின் உண்மையான பலமும் இந்தத் தேர்தலில் தெரிந்துவிட்டது. மொத்தத்தில் உண்மை எது, பொய் எதுன்னு மக்கள் பகுத்துப் பார்த்து ஓட்டுப் போட்டிருக்காங்க. இந்த வெற்றி தந்த உற்சாகம், இன்னும் நூறு தேர்தலை சந்திக்கும் தெம்பையும், உற்சாகத்தையும் தந்திருக்கு...''
Tuesday 25 August 2009
ஆசை...ஆசை...ஆசை...ஆசை
மைக்கேல் ஜாக்சன் சாவுக்கு காரணம் என்ன?
இதையடுத்து டாக்டர் முர்ரேயின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மைக்கேல் ஜாக்சன் தூங்க செல்வதற்கு முன்பு மயக்கம் தரக்கூடிய அதிசக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது வழக்கம் என்பது குறித்த ஆவணங்கள் அங்கு கைப்பற்றப்பட்டன.
மைக்கேல் ஜாக்சனின் உடலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தலைமை பிரேத பரிசோதகர் டாக்டர் சத்யவாகீஸ்வரன் பிரேத பரிசோதனை நடத்தினார்.
டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் - ஜாக்சன் உடலில் மருத்துவ தடயவியல் சோதனைகளைச் செய்த டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஆவார்.
அவர், ஜாக்சன் உட்கொண்டிருந்த மருந்து மாத்திரைகளில் உள்ள விஷத்தன்மை குறித்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த அறிக்கையும், டாக்டர் முர்ரேயின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் ஹூஸ்டனில் உள்ள மாவட்ட கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
அதில், அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் என்று லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஜாக்சனின் டாக்டர் கான்ராட் முர்ரேவுக்கு எதிராக கலிபோர்னியா கோர்ட் தேடுதல் வாரண்ட்டை பிறப்பித்துள்ளது. அந்த வாரண்ட் உத்தரவில், லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் அதிகாரி டாக்டர் சத்யவாகீஸ்வரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கு அதிக அளவிலான, அபாயகரமான புரோபபால் மருந்து கொடுக்கப்பட்டதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜாக்சன் மரண வழக்கு கொலை வழக்காக மாறுகிறது. டாக்டர் கான்ராட் முர்ரே கைது செய்யப்படவுள்ளார்.
Monday 24 August 2009
கறுப்பு பூனையை(?) தேடி சுவிட்சர்லாந்து வராதீங்க!!
சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசியமாக பணம் போட்டு வைத்திருக்கும் இந்தியர்களின் கணக்குகளைப் பார்க்க வேண்டும் என்று கூறி யாரும் எங்களை அணுகாதீர்கள் என்று அந்நாட்டு வங்கிகளின் சங்கம் தெளிவுபடக் கூறிவிட்டது.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுவிஸ் வங்கிகளில் ரகசியக் கணக்கு இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகும்.
இப்படி வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் கறுப்புப் பணம் மட்டுமே பல லட்சம் கோடி இருக்கும் என்று சமீபத்தில் நடந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாகக் கூறப்பட்டது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறு நாள்களுக்குள் எல்லா கறுப்புப் பணத்தையும் வெளியே கொண்டுவருவோம் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் சூள் உரைத்தனர்.
இத்தனை ஆண்டுகளாகச் சும்மா இருந்துவிட்டு இப்போது மட்டும் கறுப்புப் பணம் குறித்து ஏன் பேசுகிறீர்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் எரிச்சலுடனே அவர்களைப் பார்த்துக் கேட்டனர். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தங்கள் நாட்டைச் சேர்ந்த சில சமூக விரோதிகள் முறைகேடாக சேர்த்த பணம் பற்றி விசாரிக்க வேண்டியிருப்பதால் அவர்களுடைய வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும் என்று கோரின. அதை சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொண்டன. இதையே முன்னுதாரணமாகக் காட்டி இந்தியாவைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்குகளைத் தருமாறு கேட்போம் என்று அத்வானி உள்ளிட்ட மூத்த பாரதிய ஜனதா தலைவர்கள் கோஷமிட்டனர்.
தேர்தல் முடிந்து இப்போது மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியே ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் கறுப்புப் பணக்காரர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் சமீபத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நிருபர்கள் சந்தித்து இது குறித்து கேட்டபோது, கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதில் தொய்வே கிடையாது; தேவைப்படும் வழக்குகளில் விவரங்களைக் கேட்போம் என்று அறிவித்தார்.
சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆதாரபூர்வமாக நிரூபித்தால் தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் பற்றிய விவரங்களைத் தரத்தயார் என்று சுவிஸ் நாட்டு வங்கிகள் தெரிவித்தன. அத்துடன் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், இதர சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் கணக்காக இருந்தால் உடனே தரத்தயார் என்றும் கூறின.
ஆனால் தில்லிக்கு வந்துள்ள ஸ்விஸ் வங்கிகள் சங்கத்தைச் சேர்ந்தவரான ஜேம்ஸ் நேசனோ, யார் வேண்டுமானாலும் யாரைப்பற்றி வேண்டுமானாலும் தெரிந்து கொண்டு விடலாம் என்ற உரிமையை அரசு அளித்துவிடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இரட்டை வரி விதிப்பைத் தடுக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன. எனவே சுவிட்சர்லாந்து நாட்டில், சட்டவிரோதமாகப் பணத்தை யாராவது வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் வங்கி நிர்வாகிகளே அவர்களுடைய கணக்கைத் திறந்து காட்டுவார்கள்; அப்படி எதுவும் இல்லாமல் வெறும் தகவல் அறியும் உரிமைக்காக யாராவது வங்கியை அணுகினால் ஒரு தகவலையும் பெற்றுவிட முடியாது என்று ஜேம்ஸ் நேசன் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் கறுப்புப்பணத்தை எப்போது, எப்படி கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி யிடம் நிருபர்கள் கருத்து கேட்க முனைந்தனர். அவர் தனது நார்த் பிளாக் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றபோது வழி மறித்த நிருபர்களிடம், "என்னிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்... உரிய முறையில் இந்த விவகாரம் குறித்து ஸ்விஸ் வங்கியுடன் பேசுவோம். ஒரு தேசத்தின் நலனுக்காக இந்த விவரங்களை ஸ்விஸ் வங்கி இந்திய அரசுக்குத் தருவதுதான் சரியானது..." என்றார்.
கறுப்பு பூனை பிடி படுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்!!
Sunday 23 August 2009
சீனாவின் செல்வாக்கை முறியடிக்க இந்தியா திட்டம்
இந்தியாவை சுற்றி வளைக்கும் நோக்கத்துடன் அண்டை நாடுகளில் துறை முகங்களை அமைத்து அதன் மூலம் கடற்படை தளம் அமைக்க சீனா முயற்சிக்கிறது.
இதை அறிந்து கொண்ட இந்தியா தற்போது விழிப்படைந்துள்ளது. எனவே, தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிக்க இந்து மகா சமுத்திரத்தில் கடற்படை தளம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பொதுவாக போதை மருந்து கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் மற்றும் கடற் கொள்ளையர்களின் தாக்குதல்களுக்கு மாலத்தீவு ஆளாகி வருகிறது. அவர் களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்தியாவுடன் சேர்ந்து கடற்படையை பலப்படுத்த மாலத்தீவு விரும்புகிறது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் மாலத்தீவில் உள்ள முன்னாள் விமானப்படை தளத்தை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ஏ.கே. அந்தோணி சமீபத்தில் மாலத்தீவு சென்று வந்தார்.
இந்த தகவலை லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை தெரிவித்துள்ளது.
அவர் வேலை விஷயமாக மொபட்டில் ராசிபுரம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் தினேஷ்குமார் தூக்கி வீசப்பட்டார்.
தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரியானூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு மூளை சாவு ஏற்பட்டு இறந்தார்.
மனதில் ஒருபுறம் வேதனை இருந்தாலும், மகனின் உடல் உறுப்புகளை பிறருக்கு தானம் செய்தால் அவர்கள் மூலம் மகனை காணலாமே என தண்டபாணி கருதினார்.
இதயம் உள்பட அனைத்து உறுப்புகளும் நன்கு செயல்பட்டு கொண்டு இருந்தது. இதை அறிந்த தினேஷ்குமாரின் தந்தை தண்டபாணி மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.
இதுகுறித்து சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். தினேஷ்குமாரின் இருதயம், கண், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். அவரது உடலின் உறுப்புகளை ஆபரேஷன் மூலம் அகற்றி மற்றவர்களுக்கு பொருத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இதற்காக சென்னை வந்துள்ள தினேஷ்குமாரின் தந்தை தண்டபாணியிடம் இன்று காலை கையெழுத்து வாங்கியுள்ளனர்.
ஒரே மகனை இழந்து வாடும் தண்டபாணி கண்ணீர் மல்க கூறியதாவது:-
எனது மகன் தினேஷ்குமார் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும் எனது மனைவியும், நானும் கதறி அழுதோம். அவன் இறந்தது பற்றி என் மனைவியிடம் கூறுவதற்கு எனக்கு தைரியம் வரவில்லை.
இறந்த பின்னர் அவனது உடல் உறுப்புகள், உயிருக்காக போராடும் வேறு ஒருவருக்கு பயன்உள்ளதாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். இதையடுத்து உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தோம். இதன்மூலம் எனது மகன் எங்கோ ஒரு மூலையில் உயிருடன் இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது.
எனது மகனிடம் இருந்து எடுக்கப்படும் உடல் உறுப்புகள் ஏதாவது ஒரு நோயாளிக்கு பயன்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Saturday 22 August 2009
கத்ரீனா கைப் பெட்ரூமில் சல்மான் கான்?
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகரின் மனைவி, செல்போனை கையில் எடுத்தார். `நயமான' நடிகைக்கு போன் செய்தார். 25 நிமிடங்கள் நடிகையை திட்டியும், வசைபாடியும், சாபம் கொடுத்தும் ஆவேசமாக பேசிவிட்டு, போனை `கட்' செய்தார், அந்த பரிதாபத்துக்குரிய குடும்ப தலைவி!
[நன்றி: மாலைமலர்]
ஜீப்ரா க்ராஸிங் (Zebra Crossing)
இப்போது சாமியார் ஒருவர் கோயிலில் வைத்து ஷில்பாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்த விவகாரம் சர்சைக்குள்ளாகி இருக்கிறது.
மும்பை அருகே உள்ள போவய் பகுதியில் சஹி கோபால் ஆலயத்துக்கு சமீபத்தில் ஷில்பாஷெட்டி சென்றார். சிறப்பு பூஜைகளை செய்த அவர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கோயில் சாமியார் ஷில்பாவுக்கு முத்தம் கொடுத்தார். ஏராளமான பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் சாமியார் இப்படி நடந்து கொண்டது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் ஷில்பாவோ எதுவுமே நடக்காதது போல கோயிலில் இருந்து திரும்பினார்.
இதையடுத்து புனிதமான இடத்தில் சாமியாரை முத்தமிட வைத்து புனிதத்தை கெடுத்து விட்டதாக ஷில்பா ஷெட்டி மீது வழக்கு தொடரவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதுபற்றி ஷில்பா ஷெட்டி கூறுகையில், மகன்களுக்கோ, மகள்களுக்கோ தந்தை முத்தம் கொடுப்பதில்லையா? என்று ஆவேசப்பட்டார்.
Friday 21 August 2009
பொக்கிஷம் டிரைலர்...
தீவிர உடற்பயிற்சி:
அருண்குமார் (தே.மு.தி.க.) - 24, 142
பர்கூர் - தி.மு.க. வெற்றி (வாக்கு வித்தியாசம் - 59,103)
கே.ஆர்.கே.நரசிம்மன் (தி.மு.க.) - 89,481
வி.சந்திரன் (தே.மு.தி.க.) - 39, 378
எஸ்.கண்ணு (இந்திய கமயூனிஸ்ட்) - 1,640
கி.அசோகன் (பா.ஜனதா) - 1,482
தொண்டாமுத்தூர் - காங்கிரஸ் வெற்றி (வாக்கு வித்தியாசம் - 71,487)
எம்.என்.கந்தசாமி (காங்கிரஸ்) - 1,12,350
தங்கவேலு (தே.மு.தி.க.) - 40, 863
வே.பெருமாள் (மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட்) - 9,126
சின்னராசு (பா. ஜனதா) - 9,045
இளையான்குடி - தி.மு.க. வெற்றி ((வாக்கு வித்தியாசம் - 41,456 )
சுப.மதியரசன் (தி.மு.க.) - 61, 084
அழகுபாலகிருஷ்ணன் (தே.மு.தி.க.) - 19, 628
ராஜேந்திரன் (பா. ஜனதா) - 1,487
ஸ்ரீவைகுண்டம் - காங்கிரஸ் வெற்றி (வாக்கு வித்தியாசம் : 31,359)
எம்.பி.சுடலையாண்டி (காங்கிரஸ்) - 53,827
எம்.சவுந்திரபாண்டியன் (தே.மு.தி.க.) - 22,468
ஞா.தனலட்சுமி (இந்திய கம்யூனிஸ்ட்) - 3,407
அ.சந்தனகுமார் (பாரதிய ஜனதா கட்சி) - 1,797
டெல்லி வீர பூமியில் அமைந்துள்ள ராஜீவ் சமாதியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவரும் ராஜீவ் காந்தி மனைவியுமான சோனியா காந்தி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். மகன் ராகுல், மகள் பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதரா ஆகியோரும் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் நினைவிடம் வெள்ளைத் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Thursday 20 August 2009
சக்தி வாய்ந்த பெண்கள்
ஒரு நாட்டை ஆளும் அதிகாரத்தை வைத்திருத்தல், மக்களிடையே பிரபலமாக இருத்தல், அரசியலில் தலைமை கொண்டிருத்தல், அதிகார நிலை மற்றும் மிகப் பெரிய நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளில் செல்வாக்குப் பெற்றிருத்தல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்க பட்டுள்ளது.
அதன்படி முதல் மூன்று இடத்தின் விவரம் வருமாறு:
முதலிடம்: ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலோ மார்கல் (தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்)
இரண்டாம் இடம்: ஃபெடரல் டெபாசிட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஷெய்லா பாயிர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 13-வது இடத்திலும், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை அதிகாரி சாந்தா கோச்சார் 20-வது இடத்திலும், பயோகான் நிறுவன தலைவர் கிரண் மசூம்தார் 91-வது இடத்திலும் உள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 28-வது இடமும், அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செலி ஒபாமா 44-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் 42-வது இடத்தில் உள்ளார்.
Wednesday 19 August 2009
இந்த மோதலில் ஆர்.பி.எஃப் காவலர்கள் மாணவர்களை அடித்ததில், சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் பாவிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அந்த தண்டனை பொது சொத்துக்கு சேதம் விளைவிக்க எண்ணுவர்க்கும் படமாக இருக்க வேண்டும். என்றைக்கு தான் இந்த பாவிகள் திருந்த போகிறார்களோ!!