மௌனமான நேரம்

 

Showing posts with label கிசுகிசு. Show all posts
Showing posts with label கிசுகிசு. Show all posts

Saturday, 5 December 2009

தமன்னா!!

Posted by மௌனமான நேரம் | Saturday, 5 December 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
தமன்னா!!

தமிழ் திரையுலகமே தமன்னா பக்கம் சாய்ந்திருக்கிறது. சொல்லிக்கிற மாதிரி அப்படி ஒன்றும் அழகு இல்லை என்று ஆரம்பத்தில் ஓரங்கட்டப்பட்ட தமன்னாவுக்கு இப்போ செம மவுசு.

ஹூரோக்களும், இயக்குநர்களும், புரடியூசர்களும் போட்டி போட்டுக்கொண்டு தமன்னாவை புக் பண்ணுகிறார்கள்.

அதுமட்டுமல்ல சின்ன இடைவெளி கிடைத்தாலும் தமன்னா பற்றி பெரிய புராணம் பாடிவிடுகிறார்கள். படிக்காதவன் பட ஆடியோ வெளியீட்டின் போது சேரனும், அமீரும் மாறி மாறி அவரின் பக்கத்தில் நின்றுகொண்டார்கள்.

"எனக்கு தமன்னாவ ரொம்ப பிடிக்கும். நான் அவரோட அழகுல மயங்குறேன். அதுக்காக நான் அவர காதலிக்கிறேன்னு எழுதிடாதீங்க" என்று ஜெயம்ரவி போட்டுத்தாக்கினார்.

தில்லாலங்கடி பட விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், தமன்னாவின் அழகு சூப்பர் என்றார். இப்போது பையா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஷங்கர், "தமன்னாவின் நடிப்பில் படத்துக்கு படம் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. சீக்கிரமே அவர் சிம்ரன் இடத்தை பிடிப்பார்" என்றார்.

ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க நயன்தாரா மறுப்பு....

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க நயன்தாரா மறுப்பு....

நடிகை நயன்தாரா ஹீரோக்களுடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்டார். முன்பெல்லாம் தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் அநியாயத்துக்கு நெருக்கம் காட்டி வந்த நயன்தாரா பிரபுதேவாவுடனான லவ்வுக்கு பிறகு நெருக்கத்துக்கு நோ சொல்லி விடுகிறாராம். தற்போது ஆர்யா ஜோடியாக நடி்தது வரும் பாஸ்கர் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க முடியாது என்று கறாராக கூறி விட்டாராம்.

Friday, 28 August 2009

பச்சை குத்திய நடிகை, இப்போ?

Posted by மௌனமான நேரம் | Friday, 28 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
இடது கையில், ஆட்டக்காரரின் பெயரை பச்சை குத்திய நடிகை, இப்போது தன் வலது கையில், மந்திர கயிறு கட்டியிருக்கிறார் போல. இது, கேரள மந்திரவாதி மந்திரித்து கட்டிய கயிறாம்.

ஆட்டக்காரர் தன்னை விட்டு பிரிந்து போய் விடக் கூடாது என்பதற்காகவே இந்த வசிய கயிறை கட்டியிருக்கிறாராம் அந்த நயமான நடிகை!



பிரியமான நடிகை!!

Posted by மௌனமான நேரம் | | Category: | 0 பின்னூட்டங்கள்
பிரியமான நடிகையும், பிருதிவி நடிகரும் நெருக்கமாக பழகி வருவது, கோடம்பாக்கம் முழுவதும் அறிந்த சங்கதி.

இந்த நெருக்கமான பழக்கத்துக்கு இரண்டு பேரும் புதுசாக ஒரு காரணம் சொல்கிறார்கள். "எங்கள் இரண்டு பேரின் அம்மாக்களும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அதனால் தான் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்'' என்று!

நட்பு உறவிலும், உறவு விவாகரத்திலும் முடியாதவரை தப்பு இல்லைதான்!


Saturday, 22 August 2009

கத்ரீனா கைப் பெட்ரூமில் சல்மான் கான்?

Posted by மௌனமான நேரம் | Saturday, 22 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
குழந்தைத்தனமான முகத்தால் ரசிகர்களை சுண்டியிழுக்கும் லிவுட்டின் ஹாட் கதாநாயகி கத்ரீனா கைப், அவரது பெட்ரூமில் திரும்பும் பக்கமெல்லாம் சல்மான் கானின் ஸ்டில்ஸ் தான் இருக்கும் என பகிரங்க பேட்டி கொடுத்துள்ளார். "பட்" என்று மனதில் இருக்கும் மணாளன் குறித்து புட்டு புட்டு வைத்த கத்ரீனா, சல்மான் கான் தான் என் காதலர் என்றார். ஆறு வருடங்களாக சல்மான் கானை காதலித்து வருவதாக கூறியுள்ளார் கைப்.


போகும் இடமெல்லாம் சாமி படத்துக்கு பதிலாக ஆசாமி படத்தை எடுத்துச் செல்கிறாராம் கத்ரீனா. பாய் பிரண்ட் பற்றியும், அவர் மீது வைத்துள்ள காதலைப் பற்றியும் சொன்ன கத்ரீனா கல்யாணம் குறித்து மூச்சு விடவில்லை.