மௌனமான நேரம்

 

Thursday 7 October 2010

நண்பனின் மனைவி

Posted by மௌனமான நேரம் | Thursday 7 October 2010 | Category: |

சாயங்காலம் சரியா 4 மணி இருக்கும்... 

"டேய் கணேஷ், அவன் என்னை திட்டிட்டு போயிட்டான்டா மச்சான்"

பக்கத்துக்கு வீட்டு  செல்லதுரை அலறி அடிச்சி, கணேஷ் வீட்டை நோக்கி ஓட,

"எவன்டா மச்சான்"

- இன்னு கணேஷ் மாடி படி குதிச்சு ஓட, தெருவே அமர்களமாகி போச்சு...

கணேஷ், செல்லதுரை இரண்டு பேரும் சின்ன வயசு நண்பர்கள்.....மில்டரி- ல இருந்து செல்லதுரை வந்து கிட்ட தட்ட ரெண்டு வருஷம் ஆச்சு.....

அன்று,

"ஒரே தட்டுல சாப்படுற நாய்களா, இப்படி நான்டுகிட்டு  நிக்குதுங்க..!"

- பெருசு ஒன்னு புலம்பிட்டு  போறது கேட்டு...

"யோவ் பெருசு, என்ன புலம்பிட்டு?"

பக்கத்துக்கு வீட்டு ராமசாமி பொண்டாட்டி கேட்க...

"இல்லம்மா.....இந்த மாடி வீடு செல்லதுரை இல்ல......"

"...நல்லத்தான இருந்தான், என்ன ஆச்சு அவனுக்கு ...."

"அவனுக்கு ஒன்னும் இல்ல புள்ள ....."

"அப்பறம் என்னவாம்?"

"எப்பவும் ரெண்டு நாயும் சேந்து, எவன்கிட்டையாவது  மல்லுக்கு நிக்கும்...இன்னக்கு ஒன்னுக்கு ஒன்னு வேட்டிய மடிச்சுகிட்டு......"

"...."

"புள்ள, என்ன அப்படி பாக்குத....நிசம் புள்ள..."
"சொல்லுத கேளு....."


 "டேய் கணேஷா!!.....கணேஷா!!...."  -   செல்லதுரை கூப்பிட,

"என்னடா மாப்பிள்ளை!..." இன்னு கணேஷ்....

"மச்சான்,  கொஞ்சம் கட்டிங்-டா மச்சான்..வா டவுன் போலாம்....."

"இதோ வாரேண்டா மாப்பிள்ளை!..."

சொன்ன கணேஷ், பட பட இன்னு மாடி படி ஏற,

"என்னெங்க எங்க அவசரமா? ...."

"இதோ டவுன்  வர.."

" என்னெங்க, கொஞ்சம் வீட்டுல இருக்க கூடாதா?"

"இல்லடி  இதோ வந்துடுறேன்..."

" ...ம்ம்"

" நீங்க வீட்லேயே கொஞ்சம் ட்ரிங்க்ஸ் சாப்பிடுங்க ...."

" அப்போ செல்லதுரை ....?"

"...ம்ம், சரி... ஆனா....!!"

"என்னடி ஆனா...?"

"ஆனா....!! லிமிட்டா இருக்கணும்"...

"டேய் கணேஷ் ....இன்னைக்கு நம்ம வீட்டுல பார்ட்டி...."

செல்லதுரை  சொல்ல,கணேஷ்மும் தலைய ஆட்ட ......

பார்ட்டி ஆரம்பம் ....

"......"

"......"

" கொஞ்சம் போதும்டா மச்சான்..."

" இல்லடா மாப்பிள்ளை, இன்னும் ஒரு ரவுண்டு ...."

"... ருக்கு ....ருக்கு .."   கணேஷ் கூப்பிட,

கணேஷ் பொண்டாட்டி,

".. என்னெங்க.."

".. கொஞ்சம் ஊறுகாய் குடு புள்ள ...."

ருக்கு ஊறுகாய் கொண்டு வைக்க, செல்லதுரை ருக்கு கையே பார்த்திட்டு இருந்தான் ...

அடுத்த ரூம்க்கு ருக்கு போயிட்டா...

" என்னடா மச்சான், எப்படி பார்க்கற?"

" இல்லடா , ஒன்னும் இல்ல..."

அடுத்த ரவுண்டுமும் ஓவர் ......


"... ருக்கு ....ருக்கு .." கணேஷ் மறுபடியும் கூப்பிட,

".. என்னெங்க.."
 
".. இன்னும் கொஞ்சம் ஊறுகாய் குடு புள்ள ...."


ருக்கு ஊறுகாய் கொண்டு வைக்க, செல்லதுரை ருக்கு கையே திரும்ப திரும்ப பார்த்திட்டு இருந்தான் .......

திடீருன்னு செல்லதுரை, ருக்கு கையை பிடிச்சு இழுக்க,  அழுதுகிட்டே அடுத்த ரூம்க்கு ருக்கு போயிட்டா...ருக்கு .....

 " வெளிய போடா நாயே!!!" .... கணேஷ் கத்த....

"ஆரம்பிச்ச சண்டை,  ஒன்னுக்கு ஒன்னு வேட்டிய மடிச்சுகிட்டு மல்லுக்கு நிக்குதுக....."  இன்னு பெருசு சொல்லிகிட்டே நடக்க,

"என்ன பொழப்பு .."  இன்னு ராமசாமி பொண்டாட்டி சொன்னது நாம காதுக்கு கேட்டுச்சு....

ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.