மௌனமான நேரம்

 

Showing posts with label அலசல். Show all posts
Showing posts with label அலசல். Show all posts

Tuesday, 26 July 2011

விமானத்தில் சுயநலம்

Posted by மௌனமான நேரம் | Tuesday, 26 July 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
ண்டனில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லி நோக்கிப் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது.  நானும் பத்தில் ஒன்றாக, ஏறி சன்னல் ஓரமா என் இருக்கையில் இருக்க, விமானம் புறப்படத் தயாரானது.  
"திட்டமிட்டதை விட 10 நிமிடங்கள் முன்னதாகவே டெல்லி சென்று விடுவோம்" என்று விமானி சொல்ல, சீட் பெல்ட் சரியாக இருகிறதா என்று விமான பணிப்பெண்கள் (Air Hostess / Cabin Crew ) எல்லாத்தையும் சரி பார்க்க,

"டேக் ஆப்"  சொன்னார் விமான கேப்டன்.

10 நிமிடங்கள்  ஆனது, 20 நிமிடங்கள்  ஆனது, ஆனால் சீட் பெல்ட்யை எடுக்க சொல்லவே இல்லை.

பலர் விமான பணிப்பெண்களின் உதவி கேட்டு, emergency light யை ON பண்ண, "யாரும் சீட் பெல்ட்யை எடுக்க வேண்டாம்" என்று ஒரு விமான பணிப்பெண் எச்சரிக்கை  பண்ண,  சிறிது நேரத்தில், கடும் மேக மூட்டத்தால், விமானம் ஆட ஆரம்பித்தது. 

சன்னல் ஓரமா இருந்த என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது...விமான கேப்டன் மேலே போவதும், கீழே போவதும், வளைந்து போவதும் கஷ்டப்பட்டு விமானத்தை இயக்குவதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது..

இதில், ஒரு கழுதை (அப்படித்தானே சொல்லணும்), emergency light யை ON பண்ணி, பண்ணி விமான பணிப்பெண்களின் உதவி கேட்டு தெல்லை கொடுக்க,  யாரும் வரவே இல்லை. 

சீட் பெல்ட்யை எடுக்க சொல்லவே இல்லை. "யாரும் சீட் பெல்ட்யை எடுக்க வேண்டாம்" என்று ஒரு விமான பணிப்பெண் எச்சரிக்கையும்  கொடுத்து இருக்க, அந்த கழுதைக்கு புரிய வேண்டும்.

ஒரு வழியாக, விமானம் சீராக செல்ல, சீட் பெல்ட்யை எடுக்க சொன்னார்கள். emergency light யை ON பண்ணின பயணிகளை, விமான பணிப்பெண்கள் உதவ, ஒரு விமான பணிப்பெண் அந்த கழுதைகிட்ட கேட்க, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுற அந்த கழுதை என்ன என்னவோ பேசுது. (அவங்க அப்பன் வீட்டு விமானம்)... நிலைமையை பல முறை எடுத்து சொல்லி கூட புரியவில்லை அதுக்கு...

அதுக்கு என்ன அவசரம் தெரியுமா? அந்த பெரிய கழுதையோட, சின்ன கழுதைக்கு குடிக்க தண்ணி வேணுமாம்.

அட கழுதை, உன்னால 10 நிமிடங்கள் பொறுக்க முடியாது?  

பணம் இருக்கலாம், படிச்சி இருக்கலாம், ஆனா நேரத்துக்கு தகுந்தால் போல், சுய அறிவோடு நடக்க தெரியனும்....
 
இவர்கள் திருந்துவது எப்போதோ?

Wednesday, 6 July 2011

பத்திரிகை சுதந்திரம்

Posted by மௌனமான நேரம் | Wednesday, 6 July 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
இந்திய சுதந்திர போராட்டத்தில், பத்திரிகைகள் பெரும் பங்காற்றின... ஆனால், இப்போது இந்த (சில) பத்திரிகைகள் அரசியல் சாயம் பூசப்பட்டு ஏதாவது ஒரு அரசியல் கட்சியை சார்ந்தே உள்ளன..

இது போதாத குறைக்கு, அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என்று பத்திரிகையும். TV சேனலயும் வைத்து கொண்டு, மக்களை பாடாய் படுத்துகின்றன.

நடு நிலையான , உண்மையான செய்திகளை சொல்லா விட்டாலும் பரவாயில்லை, பொய்யான / தவறான செய்திகளை மக்களிடம் திணிக்க பார்க்கின்றன. இது அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது தனது சேனல் / பத்திரிகையின் விளம்பரத்துக்காகவோ இருக்கலாம். இதனால் மக்களிடேயே உண்மையான செய்தி பற்றிய குழப்பம் ஏற்படுகிறதே தவிர வேறு எந்த பயனும் இல்லையே!...

1947 க்கு முன், மக்களிடேயே ஒற்றுமை ஏற்படுத்தி, இந்திய சுதந்திர போராட்டத்தில் எப்படி பத்திரிகைகள் உதவியதோ , அதே பத்திரிகைகள் 1947 க்கு பின் , தங்களின் நலனுக்காக மக்களிடேயே பிரிவினையையே ஏற்படுத்த முயல்கின்றன என்பதே உண்மை…

Sunday, 1 August 2010

இயற்கையால் நாசமாய் போவீர்கள்!!

Posted by மௌனமான நேரம் | Sunday, 1 August 2010 | Category: | 0 பின்னூட்டங்கள்
இயற்கையால் நாசமாய் போவீர்கள்!!

இன்று இணைய தளங்களை புரட்டி பார்த்துக்கொண்டு இருந்தபோது சில வரிகள் என்னை ரொம்பவும் வேதனை பட வைத்தது.....

முதலாவது,

"எங்களை கொன்றுவிடுங்கள்: ஈழத்தமிழர்கள் கண்ணீர்" - இது செய்தித்தாள் செய்தி.

அந்த வரிகள்......

"கேட்காமல் கொன்றீர்கள் ..இப்பொழுது அவர்களே கேட்கிறர்கள், கொன்று விடுங்கள்.....சிறிலங்காவுக்கு உதவிசெய்த அத்தனை நாடுகளும் இயற்கையால் நாசமாய் போவீர்கள்.....பார்க்கதானே போகிறோம்...."

இரண்டாவது,

இந்த வீடியோ காட்சியை உங்களில் பலர் பார்த்து இருக்கலாம். இது "விஜய் டிவி உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" நிகழ்ச்சியில் பிரேம்கோபாலின் நடனம்....

அதில், பிரேம்கோபாலின் வரிகள் "இந்த முடிவுல சமாதானத்தை வேண்டுறோம். சமாதான புறா ஒன்னு அனுப்புவோம் இன்னு புறா ஒன்னு குடுங்க இன்னு கேட்டேன்.. அப்போ இவங்க சொல்லிட்டாங்க, தர மாட்டோம் இன்னு, அட பாவிகளா! இங்கே மிருகவதைச் சட்டம்...!!! ஆனால், அங்கே உறவுகள்....."

(அவரின் நடனத்தைப் பார்க்க/வரிகளை கேட்க , கீழ்கண்ட லிங்கை கிளிக்கவும்.)







Saturday, 5 December 2009

படிக்கட்டு பயணங்கள்!!

Posted by மௌனமான நேரம் | Saturday, 5 December 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
படிக்கட்டு பயணங்கள்!!!





போலீஸ் பாதுகாப்பில் படிக்கட்டு பயணங்கள்!!

இப்போ என்ன பண்ணுவீங்கோ!!


Sunday, 30 August 2009

மத்திய அரசு 100 நாள் சாதனைகளும் வேதனைகளும்

Posted by மௌனமான நேரம் | Sunday, 30 August 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 2-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று, சனிக்கிழமையோடு 100 நாள் நிறைவு ஆகிறது.

மத்தியில் புதிதாக பதவியேற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, அடுத்த 100 நாட்களில் செயல்படுத்த இருக்கும் 25 அம்ச திட்டங்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வெளியிட்டு இருந்தார்.

அதன் படி, 100 நாள் செயல் திட்டத்தை அனைத்து அமைச்சகங்களும் வகுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த 100 நாள் நிறைவான நிலையில் சில துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், பலவற்றில் கடும் சோதனைகளை மத்திய அரசு சந்தித்து வருகிறது.



சில சாதனைகள்:

1. உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்ற பின் உள்நாட்டுப் பாதுகாப்பு மேம்பட்டிருப்பது

2. நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக இன்போசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பது

3. 14 வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வி மசோதா நிறைவேற்றப்பட்டது

4. பஞ்சாயத்துகளில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது,

இவை எல்லாம் சாதனைகளாக கருத படுகிறது.

சில வேதனைகள்:

1. நாடு முழுவதும் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் சுகாதார அமைச்சகத்துக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தியுள்ளது

2. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு

3. பருவ மழை தவறும் நிலையில், உணவுப் பொருள்களின் உற்பத்தி குறையும். இந்நிலையில், விலைவாசி கட்டுக்குள் கொண்டு வர பெரும்பாடு பட வேண்டும்.

அடுத்த 100 நாட்களில் செயல்படுத்த படும் என்று சொன்ன 25 அம்ச திட்டங்கள் முழுமையாக நிறைவேற்ற படாத நிலையில், மிக அவசியமான திட்டங்களை சீக்கிரமே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.