மௌனமான நேரம்

 

Friday 6 November 2009

என்னத்த தான் எழுதறது??

Posted by மௌனமான நேரம் | Friday 6 November 2009 | Category: |

என்னவோ எழுதனும்னு தான் தோணுது.... ஆனா என்ன எழுதறதுன்னு தெரியல்லியே!!!!!!!!!!!!!!..........

தமிழ்நாட்டு அரசியல் பத்தி எழுதலாமா....??

அச்சச்சோ.. அப்பறம் யாராவது அடிக்க வந்துட்டா...

ம்ம்.. அப்போ உலக அரசியல் பத்தி எழுதலாம்...

ஆத்தி...கற்றது கைமண்ணளவு ஆச்சே... நமக்கெதுக்கு வம்பு!!

கோலிவுட்.. பாலிவுட்.. ஹாலிவுட் பத்தி ஏதாவது???...

ஐயோ... வேண்டாம்பா... ஏதாவது ஏடாகூடமா எழுதி.. கேஸ் கீசுன்னு போய்ட்டா..!!!

இயற்கை, அறிவியல், புவியியல், இதுலே எதாவது ஒரு இயல பத்தி எழுதலாமோ???

ஆஹ.... அப்பறம் எழுதி முடிச்சிட்டு நான் மட்டும் தானே உக்காந்து படிக்கணும்.... !!!

குட் ஐடியா... சொந்த அனுபவம்....... ?????

நோ..நோ.. நான் என்ன அப்துல் கலாமா??

சரி சரி... நல்ல நல்ல சிந்தனைகள கொஞ்சம் எழுதுவோமா????

ஆமா நமக்கு நல்ல சிந்தனைன்னு தோன்றது வேற எல்லாருக்கும் சோதனையா தோணிட்டா..!!

ம்ம்.... சமுதாய சீர்திருத்த கருத்துக்கள்?????

stop it.... யாரும் படிக்க வேண்டாமா???????

வாவ்!!! கவிதை எழுதலாமே.... !!!

ம்ம்... எழுதலாம்... ஆனா கவிதைன்னு தலைப்பு போட்டிருந்தியே கவிதையை காணோமே ....எங்கே...எங்கே??? ன்னு எல்லாரும் கேட்டுட்டா???? - 'தேடுங்க.. தேடுங்க... தேடிக்கிட்டே இருங்க....தேடினாலும் கிடைக்காது....' ன்னு சொல்ல வேண்டி வந்துடிச்சின்னா??

ஓகே... கதை தான் கரெக்ட்...

No way... எழுத்தாளர்களும்... மேதைகளும் எழுதற எடத்துலே நாம போய் பேக்கு மாதிரி எதாவது எழுதி கேவலபடனுமா....

முயற்சியே பண்ணலைன்னா எப்படித்தான் முன்னுக்கு வர்றது.... ???

எல்லாம் கேக்க நல்லா தான் இருக்கு... அப்பரம் எல்லாரும் சேர்ந்து கும்மி எடுக்கும் போது வடிவேலு ஸ்டைல் லே.... 'என்ன நல்லவன்னு சொல்லிட்டாய்ங்கன்னு' சிரிச்சிகிட்ட வாங்கிக்கவா முடியும்...'

என்ன இப்படி தூக்கம் கண்ண சொக்குது... யோசிச்சி யோசிச்சி tired ஆகிட்டேனோ.... சரி இப்போ தூங்கிட்டு இனி நாளைக்கு யோசிச்சிக்கலாம்... ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.