மௌனமான நேரம்

 

Friday 8 May 2009

கடவுளுக்கு ஒரு கடிதம்! - 1

Posted by மௌனமான நேரம் | Friday 8 May 2009 | Category: |

அன்புள்ள கடவுளுக்கு!

நான் இங்கு நலமில்லை. நீ அங்கு நலமாக இருப்பாய் என்று நினைக்கிறேன்.

இங்கு உன் பெயரில் ஒரு பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. சிலர் நீ இந்து என்றும் , சிலர் நீ முஸ்லீம் என்றும், வேறு சிலர் நீ கிறிஸ்தவன் என்றும், மற்றும் பலர் நீ வேறு பிற மதத்தை சேர்ந்தவன் என்றும் சொல்கிறார்கள். இதனால் பல வாதங்களும், குழப்பங்களும், பிரச்சனைகளும், வெட்டு குத்து என்று கொலைகளும், கொடுமைகளும் கூட நடக்கின்றன.

ஒவ்வொருவரும் நீ தன் மதத்தை சேர்ந்தவன் என்று நிரூபிப்பதற்காக நீ வேறு மதக்காரன் என்று நம்புவனை அழிக்க பார்கிறார். அவர்கள் ஆக்கியதையும் அழிக்க பார்கிறார். நீ ஒரே ஒரு முறை வந்து நீ எந்த மதம் என்று சொல்லி விட்டால், இந்த பிரச்சனை தீர்ந்து விடும். அதனால் உன்னை வர சொல்வதற்க்காக தான் இந்த கடிதத்தை எழுதினேன்.


RedStamp.com- Stylish Correspondence, Fine Paper

ஆனால், இப்போது தோன்றுகிறது, நீ ஒரு வேளை வந்தால், உன்னை இன்னொரு மதக்காரனாக்கி அந்த மதக்காரர்கள் இந்த மதகாரர்களுடன் சண்டை போட ஆரம்பித்து விடுவார்கள். அதனால் தயவு செய்து இப்போது நீ இங்கு வருவதாக எதாவது எண்ணம் இருந்தால் மாற்றி கொள்ளவும்.

இங்கு இப்போது இருக்கும் நிலைமையில் உன்னை, கடவுள் என்று தன்னை சொல்லி கொள்ளும் பலருள் ஒருவன் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. அதனால் இப்பொது வராமலிருப்பதே உனக்கு நல்லது!

பி.கு. இன்னும் நினைக்க முடியாத பல கொடுமைகள் இங்கு நடக்கிறது. நீ பத்திரமாக இரு. மற்ற விவரம் அடுத்த மடலில்.
ulavu.com valaipookkal.com Tamil Blogs

2 பின்னூட்டங்கள்:

  1. மிகவும் நன்றி சுரேஷ்! நான் வலை உலகிற்கு புதிது. என் பதிவுகளை படித்து குறைநிறைகளையும் கண்டிப்பாக சொல்ல வேண்டும்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.