மௌனமான நேரம்

 

Saturday 18 June 2011

இந்திய சுதந்திர போராட்டம் - தொடர்

Posted by மௌனமான நேரம் | Saturday 18 June 2011 | Category: |
போர்த்துக்கீச மாலுமியான ஸ்கோடகாமாவின் (1498)  வருகைக்குப் பிறகு, கறிமசாலா பொருட்கள் மற்றும் உணவுக்கு சுவை சேர்க்கும் பொருட்களைத் தேடியும் அதன் வணிகத்தில் ஈடுபடவும், ஐரோப்பிய வணிகர்கள், கோழிக்கோடு துறைமுகத்தில் 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினர்.

1757-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப்போருக்குப் பின் இராபர்ட் கிளைவின் கீழிருந்த பிரித்தானிய ராணுவம், வங்காள நவாபைத் தோற்கடித்ததன் மூலம், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி தன்னை இந்தியாவில் நிலை நிறுத்திக்கொண்டது. இந்த நிகழ்வே இந்தியாவில் பிரித்தானியப் பேரரசின் தொடக்கமாக கொள்ளப்படுகிறது.

பக்சர் போருக்குப் பின் 1765-ஆம் ஆண்டில் வங்காளம், பிஹார் மற்றும் ஒரிசா மீதான நிர்வாக உரிமைகளை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி பெற்றது. 1849-ஆம் ஆண்டு மகாராஜா ரஞ்சித் சிங்கின் மறைவுக்குப் பின்னரும், முதல் ஆங்கில-சீக்கியப் போர் மற்றும் இரண்டாம் ஆங்கில-சீக்கியப் போர் ஆகியவற்றிற்குப் பின்னரும் 1849-ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி, பஞ்சாபையும் இணைத்துக்கொண்டது.

இராபர்ட் கிளைவ், பிசிப்போருக்குப் பின் மீர் ஜாபருடன் பிரித்தானிய பாராளுமன்றம் புதிதாக வெற்றி கொள்ளப்பட்ட நிர்வாகங்களை ஆளுவதற்கு ஏதுவாக, 1773-ஆம் ஆண்டில் ஒழுங்குமுறைச் சட்டம், 1784-ஆம் ஆண்டில் இந்தியச்சட்டம் மற்றும் 1813-ஆம் ஆண்டில் தனியுரிமைச் சட்டம் ஆகிய சட்டத் தொடர்களை நிறைவேற்றியது. இவையனைத்தும் பிரித்தானிய அரசாங்க ஆட்சியை வலுப்படுத்த உதவின.

1835- ஆண்டில் ஆங்கிலம் பயிற்சி மொழியாக்கப்பட்டது. மேற்கத்திய கல்வி கற்ற இந்து உயர்குடியினர் தீண்டாமை (ஜாதி), குழந்தை திருமணம் மற்றும் சிதையேறுதல் ஆகிய சர்ச்சைக்குரிய இந்து சமய சமூக பழக்க வழக்கங்களைக் களைந்தெறிய முயற்சி செய்தனர். கல்கத்தா மற்றும் பம்பாயில் (தற்போது மும்பை) தோன்றிய இலக்கிய மற்றும் விவாத இயக்கங்கள், வெளிப்படையான அரசியல் சொற்பொழிவுகளுக்கு அடிகோலியது. இந்த முன்னோடி சீர்திருதாளர்களின் கல்வியறிவு மற்றும் இதழியல் துறையை திறமையாக பயன்படுத்திக்கொண்ட விதம் ஆகியவை, காலனிய இந்தியாவிற்குள்ளாக சீர்திருத்தங்களை பெரிய அளவில் கொண்டுவரக்கூடிய சாத்தியக்கூறுகளை உருவாக்கியது, அச்சீர்த்திருத்தங்கள், இந்தியச் சமூக விழுமியங்கள் மற்றும் இங்குள்ள சமயச் சடங்குகளோடு சமரசம் செய்துகொள்ளாதவாறு உருவாகிற்று. இந்த தற்காலப் போக்குகள் இந்தியச் சமூகத்தின் மீது செல்வாக்கு செலுத்தியபோதிலும், இந்தியர்கள் பிரித்தானிய ஆட்சியை வெறுப்பது அதிகரித்தபடியே இருந்தது. 

கறிமசாலா பொருட்கள் வணிகரான ஃபிராங்க் பிரவுன் வேலைக்காரர்கள் கொடுமைப்படுத்தப்படும் கதைகள் மிகைப்படுதப்படவில்லை எனவும் அதிகாரவர்க்கத்திடம் பிடிபட்டு "வேண்டுமென்றே அடித்துத் துன்புறுத்தப்படும்" மக்களைப்பற்றித் தனக்குத் தெரியும் என்றும் தனது உறவினருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். பிரித்தானியர்கள் இந்தக் கண்டத்தை ஆதிக்கம் செலுத்துவது அதிகரித்துக்கொண்டிருக்கையில் உள்ளூர்வாசிகளின் பழக்கவழக்கங்களைத் தூற்றுவது அதிகரித்துக்கொண்டே சென்றது, எடுத்துக்காட்டாக மசூதிகளில் விருந்துகளை நடத்துவது, தாஜ் மகாலின் மேல்தளத்தில் படையணி இசைக்கு நடனமாடுவது, சந்தடிமிகுந்த கடைத்தெருக்களில் மக்களை சாட்டைகளைக் கொண்டு விளாசி வழியேற்படுத்துவது (ஜெனரல் ஹென்றி பிளேக் விவரித்தபடி) மற்றும் சிப்பாய்களை தவறாக நடத்துவது என்பன. 1849-ஆம் அண்டில் பஞ்சாப் இணைக்கப்பட்டவுடன், சிப்பாய்களுக்கிடையே பல கட்டத்தில் கலகங்கள் வெடித்து அவை படை பலத்தால் அடக்கப்பட்டன.
இந்திய சுதந்திர போராட்டம் தொடரும்....

நன்றி விக்கிபீடியா...
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.