மௌனமான நேரம்

 

Monday 20 June 2011

அவன் இவன் - நச் கமெண்ட்ஸ்

Posted by மௌனமான நேரம் | Monday 20 June 2011 | Category: |
அவன் இவன் படம் பற்றிய வாசகர்கள் சொன்ன / எழுதிய கமெண்ட்ஸ் எல்லாம் பொறுக்கி எடுத்தது.
"விமர்சிக்க தெரிந்தவர்கள் மட்டும் விமர்சிக்கவும். இது இந்த வருடத்தின் சிறந்த படம். நன்றி பாலா. "

"பாலா இது தேவையா உங்களுக்கு? நிச்சயம் உங்களுக்கு செருக்கு,ஆணவம் ,திமிர் உண்டு. அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் அதை எங்கள் மேல் தினிக்காதீர்கள். உங்கள் கேரக்டர் இதில் தெரிகிறது.. நிச்சயம் பாலா ரசிகனை ஏமாற்றி விட்டார். உங்களது பழைய படங்கள் நிச்சயம் நல்ல படங்கள்.உங்களது மிக மோசமான படம் அவன் இவன்."

"கேவலமான படம். விஷால்,ஆர்யா நடிப்பு அருமை ஆனால் வீண்.. விழலுக்கு இரைத்த நீர் போல.. டைரக்டர் பாலா இப்படி கீழ்த்தரமாக படம் எடுப்பார் என்று நினைக்கவில்லை.. கதை என்பது இல்லை.. "

"பாலா படம் இப்படி இருக்கும்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல என்ன சொல்ல வர்றார் இன்னு ஒன்னும் வெளங்கல பாலா மாதிரி ஒரு நல்ல இயக்குனர் எவ்வளவு நல்ல கதை சொல்லலாம் ஆனா ஒரு பிட் படம் மாதிரி எடுத்துட்டார் நல்ல நடிகர்களின் உழைப்பை வீண் பண்ணிட்டார் அவருக்கு தலைகனம் அதிகம் ஆயிடுச்சு போல தான் எத எடுத்தாலும் எல்லாம் கொண்ட்டுவேன்னு நினைதுடர் இன்னு நினைகேறேன்,இந்த படம் மத்தவங்களுக்கு புரியாம,இருக்கலாம் ஆனா பாருங்க பாலாவுக்கு தமிழ் ரசிகர்கள் நெறைய பாடம் கத்து தருவாங்க,அடுத்த படம் நல்ல எடுப்பார்,மொத்ததுல பாலா ஏமாத்திட்டார். "

"ஐயோ கடவுளே.. நான் என்ன தவறு செய்தேன்.. இந்த படத்தை பார்க்க வைத்து விட்டாயே.. பாலா நிச்சயம் ஒரு மனோதத்துவ டாக்டரை பார்க்க வேண்டும்.. கொடுமையான படம். விஷால் நடிப்பை பார்த்து என் குழந்தை பயந்து போய் தூங்க வில்லை.. ரொம்ப கீழ்த்தரமான படம். இந்த கண்ராவியை பார்க்க நூறு மைல் பயணம் செய்து இருபது பவுண்டு செலவு செய்து மண்டை காய்ந்து நொந்து போய் இருக்கிறேன்.. "
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.