மௌனமான நேரம்

 

Sunday 13 December 2009

தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி!!

Posted by மௌனமான நேரம் | Sunday 13 December 2009 | Category: |
தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி!!

இந்தியாவின் பலத்தை காட்டிட அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்த வேண்டியுள்ளது. விஞ்ஞான ரீதியாக முன்னேற்றம் காணும் நாடுகளில் நாமும் ஒரு சேர வருகிறோம் என அவ்வப்போது இந்தியா நிரூபித்து வருகிறது. இன்று காலை வங்கக்கடல் பகுதியில் தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறையினர் , கப்பற்படை இணைந்து உருவாக்கிய இந்த தனுஷ் ஏவுகணை ஏறக்குறைய பிரிதிவியின் சற்று முன்னேற்ற வடிவம் ஆகும்.

இது அணு ஆயுதம் சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. இது கடல் மற்றும் கடலோர பகுதியில் 350 கிமீ தூரம் வரையிலான இலக்குகளையும் தாக்கக் கூடிய திறன் பெற்றது.

கடந்த 2000 ல் ஏப்ரல் 11ம் தேதி தனுஷ் ஏவுகணையின் முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது தோல்வியை தழுவியது. சில தொழில்நுட்ப கோளாறுகளால், ஏவுகணையின் பல பகுதிகள் வெடித்து சிதறின. இந்த ஏவுகணையின் சோதனை கடந்த 2007ம் ஆண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.