மௌனமான நேரம்

 

Saturday 12 December 2009

உலக அழகி!

Posted by மௌனமான நேரம் | Saturday 12 December 2009 | Category: |

உலக அழகி!

ஜிப்ரால்டரை சேர்ந்த கைனே அல்டோரினோ 2009ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்றார்.

தென்னாப்ரிக்கா, ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த உலக அழகி போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த பூஜா சோப்ரா உட்பட, 112 நாடுகளை ச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதில், ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்த கைனே அல்டோரினோ, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு உலக அழகிக்கான பட்டம் சூட்டப்பட்டது.

இருபத்திரண்டு வயதாகும் கைனே அல்டோரினோ, மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியாற்றி வருகிறார். உலக அழகி பட்டம் வென்ற பின், கண்களில் கண்ணீர் மல்க, "நன்றி தென்னாப்ரிக்கா' என, நெகிழ்ந்தார். இந்தப் போட்டியில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெர்லா பெல்ட்ரான் இரண்டாவது இடத்தையும், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த டட்டும் கேஷ்வர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இந்த ஆண்டுக்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கைனே அல்டோரினோவுக்கு, கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ரஷ்ய அழகியான கெனியாசுகி நோவா, உலக அழகி மகுடத்தை சூட்டினார். இப்போட்டியின் நடுவர்களில் ஒருவராக, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா பங்கேற்றார்.
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.