மௌனமான நேரம்

 

Saturday 27 June 2009

எனக்காக!

Posted by மௌனமான நேரம் | Saturday 27 June 2009 | Category: |

நான் நினைப்பதை நான் நினைக்குமுன்

நீ நினைத்துவிட்டாய்... எனக்காக!

நான் ரசிப்பதை நான் ரசிக்குமுன்

நீ ரசித்து வைத்தாய்.. எனக்காக!

நான் கலங்குமுன் என் விழிகளில்

நீ நீர் துடைத்தாய்... எனக்காக!

நான் அழுகையில் உன் மடியினில்

நீ சேர்த்தணைத்தாய் ....எனக்காக!

நான் உறங்கையில் என் கனவினில்

நீ இடம் பிடித்தாய்... எனக்காக!

நான் சிரிக்கையில் என் சிரிப்புக்கு

நீ விதை விதைத்தாய் ... எனக்காக!

நான் நினைக்கையில் என் கனவுக்கு

நீ உரு கொடுத்தாய்... எனக்காக!

நான் மறக்கையில் என் உணர்வுகள்

நீ புரிந்திருந்தாய் ...எனக்காக!

நான் பேசையில் என் பேசினில்

நீ மயங்கி நின்றாய்.. எனக்காக!

என் உணர்வினில் என் உயிரினில்

நீ கலந்திருந்தாய்... எனக்காக!

என் மூச்சிருக்கும் வரை நேசித்து

வாழ்ந்திருப்பேன் நான்... உனக்காக!
ulavu.com valaipookkal.com Tamil Blogs

1 பின்னூட்டங்கள்:

  1. அருமையான கவிதை நடை!
    தெடர்ந்து படிக்கிறேன்...
    நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.