மௌனமான நேரம்

 

Thursday 18 June 2009

காதல் கவிஞன்! - கதை

Posted by மௌனமான நேரம் | Thursday 18 June 2009 | Category: |

'இன்னக்கி கார்தி்க்கோட 'காதல்' கவிதைதொகுப்பு வெளி வருது . ஆபீஸ் போற வழியில் வாங்கிட்டு போகணும்.' இது வரை அவள் அவன் கவிதை , கதை எல்லாவற்றிலும் முதல் பிரதி வாங்கிவிடுவாள்.


கார்த்திக் ஒரு எழுத்தாளர். குறிப்பாக பெண்களின் பிரச்சனையை மையப்படுத்தி இருக்கும் அவரது கதைகள். நம் தமிழ் சினிமா போலல்லாது கார்த்திக் கதைகளில் எப்போதுமே கதைக்கு நாயகி தன் முன்னிடம். ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒரு ஆண் இவ்வளவு ஆளாக புரிந்து எழுத முடியுமா என்று கவிதா எப்பொழுதுமே ஆச்சரியபடுவாள். அதுவும் அவன் கவிதைகள் காதலில் நனைந்து, ஆசை ஒழுகி கொண்டே இருக்கும். இப்படி ஒருவனை கணவனாக அடைபவள் கொடுத்து வைத்தவள் என நினைப்பாள். அப்படியே அது தானாக இருக்க கூடாதா என்று கூட ஒரு ஆசை உண்டு.


'கவிதா!' அம்மா கூப்பிடும் சத்தம் கேட்டு கனவு கலைந்தாள்.


'மதியம் சீக்கிரம் வந்துடு. மாப்பிளை வீட்டுலே இருந்து வராங்க.'


'இப்போ என்னம்மா எனக்கு கல்யாணத்துக்கு அவசரம். கொஞ்ச நாள் நிம்மதியா சம்பாதிக்கரேனே!'


'ஒன்னும் பேசாதே . சீக்கிரம் வா. மாப்பிள்ளை பிடிக்கலேன்னா அப்பறம் பாக்கலாம்.'


கவிதா முனுமுனுத்து கொண்டே கிளம்பினாள்.


மதியம் கையில் 'காதல்' உடன் வீட்டு உள்ளே நுழைந்தாள். ஒரு நிமிடம் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தன. இது கனவா என்ன? கிள்ளி பார்த்து கொண்டாள்.


அவள் வரும் முன்னே மாப்பிள்ளை வீட்டார வந்து விட்டார்கள். அங்கு மாப்பிளையாய் அமர்ந்திருந்தது சாட்சாத் கார்த்திக் தான். அட!கடவுள் application குடுக்கும் முன்னாலே offer letter குடுதுட்டரே. கண் மூடி திறக்கும் முன்னே சடங்குகள் சம்ப்ரதாயங்கள் முடிந்து கல்யாணம் நடந்து, இப்போது ஒரு வருடம் ஆகி விட்டது.


ஆனால் வாழ்வில் எவ்வளவு மாற்றங்கள். உருகி உருகி காதல் கவிதை எழுதும் கார்த்திக் அவளை அவள் நினைத்த மாதிரி உருகி உருகி காதலிக்க எல்லாம் இல்லை. 'கவிதா என்றொரு கவிதை' என்று பாடுவான் என அவள் நினைக்கும் போதெல்லாம் அவன் சொல்வது 'Be practial'.


இன்று அவள் முடிவு செய்து விட்டாள். இதை பற்றி பேசியே ஆக வேண்டும். சமயம் பார்த்து மெதுவாக, ' என்னங்க உங்க கதை கவிதை எல்லாம் எவ்ளவு ரொமான்டிக்- ஆ இருக்கு. பெண்கள் மனசை எவ்வளவு அழகா புரிஞ்சி எழுதறீங்க. ஆனா ரியல் லைப்ல ஏன் வேற மாதிரி இருக்கீங்க?'


கார்த்திக் புருவம் நெரித்து பார்த்தான். ' don't be silly! அது கதை- கவிதை. இது வாழ்கை. அது வேற இது வேற.'





ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.