மௌனமான நேரம்

 

Tuesday 9 June 2009

என் கேள்விக்கென்ன பதில்?

Posted by மௌனமான நேரம் | Tuesday 9 June 2009 | Category: |
எனக்கு பள்ளிகூடத்தில் படிக்கும் போது நிறையா சந்தேகம் வரும். அதுவும் geographhy லே ரொம்ப நிறையா வரும். அப்போ அப்போ teachers கூட திணருவதுண்டு. ஒரு டீச்சர் கிளாஸ் உள்ள நுழையும் போதே 'இன்னக்கி இந்த chapter கண்டிப்பா முடிக்கணும். No questions please' ன்னு சொல்லிட்டு ஆரம்பிப்பாங்க. ஆனாலும் நமக்கு கேள்விகள் மட்டும் கண்ணு மண்ணு இல்லாம தோணிகிட்டே இருக்கும்.. இத்தனை வருசத்துக்கு அப்பறம் அதுலே பல கேள்விக்கு பதில் கிடைச்சிருக்கு . சிலதுக்கு இன்னும் கிடைக்கலே :(

அந்த லூசுத்தனமான கேள்விகளில் சில இதோ:-

1. உலகம் உருண்டை வடிவமானது. சரி. அப்போ உருண்டையின் மேலே இருப்பவர்கள் நேராக நிற்கும் பொது கீழே இருப்பவர்கள் தலை கீழாக நிற்க மாட்டார்கள? :( புவியீர்ப்பு விசையினால் தான்.

2. உலகில் எல்லா இடத்திலும் ஒரே நேரம் மழையும் வெயிலும் வருவதில்லை. அப்போ ஏதேனும் ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் இடது பக்கம் மழையும் வலது பக்கம் வெயிலும் இருக்குமா? :)

3.உலகம் சுற்றும்போது நில பரப்பும் நீர் பரப்பும் எப்படி இடம் மாறாமல் அப்படியே அதே இடத்தில் இருக்கிறது?

4. உலகில் சில நாடுகளில் , 'நீண்ட இரவு, நீண்ட பகல், குறுகிய இரவு, குறுகிய பகல்' இதெல்லாம் என்ன ?

இப்படி எல்லாம் கேள்வி கேட்டா என்ன பாத்து பயப்பட மாட்டாங்களா என்ன :)
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.