Wednesday 17 June 2009
மூன்றுக்கு நான்கு வேளை
மூச்சு முட்ட சாப்பிட்டு
பட்டினி பற்றி பகிரங்கமாக
பிரசங்கம் பண்ணும் சிலர்....
அன்பென்றால் என்ன விலை
அரை கிலோ என்று கேட்டு
அண்டத்தில் அன்பில்லை என
ஆவேசப்படும் சிலர்...
என் வீட்டு நாய் குட்டிக்கு
எட்டு நாளாய் அஜீரணம் என்றுவிட்டு
எதிர் வீட்டு மழலை துளி பாலுக்கு அழுவதை
எட்டி நின்று பார்த்து மறக்கும் சிலர்...
அருகிலிருக்கும் மனதின் தேவை
அன்பென்று அறியாமல்
ஆசியா கண்டத்தின்
அமைதியை தேடும் சிலர்....
பல கோடி மாந்தருக்குள்
பல்கி பெருகிய இவர் போல்
வாழ்ந்திருந்த சுவடே இன்றி நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ??
தொடர்புள்ள இடுகைகள்: கவிதை
1 பின்னூட்டங்கள்:
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *
குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...
உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு
அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!
ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்
- வம்பு விஜய்