மௌனமான நேரம்

 

Monday 22 June 2009

வலி என்னும் போதி மரம்...

Posted by மௌனமான நேரம் | Monday 22 June 2009 | Category: |



வலி... நாம் எல்லோருமே என்றாவது ஒரு நாள் எதாவது ஒரு வலியை அனுபவித்திருப்போம்.. அக வலி... புற வலி.. எதாவது ஒன்று.

தாங்க முடியாத வலி! மரண வலி! நம்மில் பலர் இதை கூட அனுபவித்திருப்போம். அப்பப்பா... அந்த நேரத்தில் அது வரை பெரிதாக , முக்கியமாக பட்ட எல்லாமே மறந்து விடுகிறது.. அந்த நிமிட தேவை 'நிவாரணம்'. இதை தவிர வேறொன்றுமில்லை. அந்தஸ்து.. பணம்.. புகழ்.. பதவி.. எதுவுமே ஞாபகம் வருவதில்லை. வலி என்ற ஒன்றை தவிர வேறு எல்லாமே சூன்யமாகி விடுகிறது.

'தாங்க முடியாத வயிறு வலியால் தற்கொலை'. என்றெல்லாம் பல முறை செய்திகளில் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் தோன்றும். இதை கூட தாங்க முடியாதா என்று. இப்போது தோன்றுகிறது விலை மதிக்க முடியாத உயிரை விட தயாராகி இருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு துடித்திருபான். எனக்கு தற்கொலையில் நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை. ஆனால் அந்த செய்திகளை படிக்கும்போது வந்த கோபம் இப்பொழுது இல்லை. இப்பொழுது புரிகிறது. தெளிவாக புரிகிறது.

காதலுக்காக, உணர்வுகளுக்காக சாபவர்களை நினைத்தாலே கோபம் வருகிறது. எல்லோரும் வாதிடலாம் உணர்வு பூர்வமான தோல்விகள் உடல் சார்ந்த வலிகளை விட பெரிதென்று.. ஆனால் அப்படி சொல்பவர்கள் நிச்சயம் இந்த வலியை அனுபவிக்காதவர்கள் தான். உன் கையில் இருக்கும், உன் கைகெட்டிய தூரத்தில் இருக்கும், உன் பிடியில் இருக்கும் உன் உணர்வுகளை... உன்னால் மாற்றவோ , வளர்க்கவோ, அழிக்கவோ முடிந்த உன் உணர்வுகளை... உன்னால் வெற்றியோ தோல்வியோ பெற வைக்க முடிந்த உன் உணர்வுகளை... தோற்று விட்டது என்று அழுது புரண்டு உயிரை விட்டால்... கொஞ்சம் கூட நம் கட்டுபாட்டில் இல்லாத ஆரோக்கிய தோல்வியை, உடல் வலியை எப்படி தாங்க முடியும்.

உலகில் என்னை விட , உன்னை விட கஷ்ட்படுபவர்கள் பலர் இருகிறார்கள் என்று எனக்கு தெரியும். அவர்களை நினைத்தால் இன்னும் வேதனையாக இருக்கிறது. யாருடைய குற்றமுமே இல்லாமல் கஷ்டபடுகிறவர்கள் ஒருபுறம் இருக்க, அடிதடி, வெட்டு குத்து, கொலை, போர், வறுமை, வறட்சி, கொடுமை, இன்னும் எவ்வளவோ விஷயங்களால் மனிதனுக்கு மனிதனே தரும் வேதனைகள் மறுபுறம்.

நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களுக்காக நாம் வருத்தப்பட்டு பயனில்லை. ஆனால் மேற்கூறிய விஷயங்கள் எல்லாமே நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

சினிமாவில் சித்ரவதை தாங்காமல் நண்பனை, குடும்பத்தை, தேசத்தை காட்டி கொடுப்பவர்களை பார்த்து கோபப்பட்டிருக்கிறேன். என்ன கஷ்டம் வந்தாலும் எப்படி துரோகம் செய்யலாம் என்று எரிச்சல் பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தோன்றுகிறது அவன் எவ்வளவு கஷ்டபட்டிருந்தால் தன்னை மீறி துரோகம் செய்திருப்பான். லஞ்சம் வாங்கி துரோகம் செய்த எத்தனையோ பேர் இருக்க இவர்கள் மேல ஏன் கோபப்பட வேண்டும்.

இப்போது கூட மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், பிரிவுகளின் பெயரால், ஆசையினால், அகம்பாவத்தினால், பொறாமையினால் எவ்வளவு கொடுமைகள். ஒவ்வொரு மனிதனும், அடுத்தவனை காயப்படுத்தும் முன்பு, என்னால் இந்த காயத்தை தாங்க முடியுமா என்று ஒரு வினாடி எண்ணினாலே போதும், கண்டிப்பாக அவனால் யாரையுமே காயப்படுத்த முடியாது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் மனிதர்கள் இதை நினைப்பார்களா?

கடவுளே! உலகில் ஒவ்வொரு உயிருக்கும் வாழும் நாள் வரை ஆரோக்கியம் கொடு, சாகும் போதும் அமைதியை கொடு. ஒருவனை ஒருவன் அடித்துக்கொண்டு சாவதற்கு உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பது சரிதான். ஆனால், யாருக்கும் தீங்கு நினைக்காத குழந்தைகள் போன்றோருகாவது?

வலிதான் போதி மரம்... எல்லா ஞானமும் வர வைக்கும் என்றால்.... எங்களுக்கு புரிந்து விட்டது ..ஆனால் அந்த போதி மரத்திற்கு மட்டும் திருப்பி அனுப்பி விடாதே.
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.