மௌனமான நேரம்

 

Friday 19 June 2009

தாய்மார்களே தந்தைமார்களே!

Posted by மௌனமான நேரம் | Friday 19 June 2009 | Category: |
தாய் தந்தைகளாகிய என் பெண் ,ஆண் நண்பர்கள் பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்.

குழந்தை மேல் பாச மழை பொழிந்து, பொத்தி பொத்தி, கொஞ்சி வளர்க்கும் தாய்மார்கள் கூட தான் தன் குழந்தையை இன்னும் ந்ன்றாக பேண வேண்டுமோ, வளர்க்க வேண்டுமோ, நான் சரியாக வளர்பதில்லயோ, வேறு ஒருவராக இருந்தால் நன்றாக பார்ப்பார்களோ என்றெல்லாம் புலம்புவார்கள். அது ஏன் என்றே தெரியவில்லை. தான் எது செய்தாலும் போதவில்லை என்றே அவர்களுக்கு தோன்றுகிறது.

காலை எழுந்து குழந்தையை கவனித்து, வீட்டு வேலை செய்து, கணவரை வழியனுப்பி..... அப்பப்பா மூச்சி விடாமல் உழன்று பின் தன் அலுவலகம் சென்று அங்கும் வேலை செய்து...ஏசும் பேசும் வாங்கி... பின் வீட்டுக்கு வந்து மீண்டும் குழந்தை , கணவன், வீட்டு வேலை . இதற்கிடையில் குழந்தைக்கு அது தேவை இது தேவை என்று பார்த்து பார்த்து வாங்குவார்கள். இவ்வளவு செய்தாலும். இதெல்லாம் பத்தாதே .. நான் செய்யறது போதாதே ..என்று புலம்பல் வேறு..

ஆனால் எந்த தந்தையும் இப்படி புலம்பி நான் கேட்டதில்லை. குழந்தைக்காக 5 நிமிடம் செலவு செய்தாலும், தான் தான் உலகிலேயே சிறந்த தந்தை என்று அவர்கள் நினைப்பு. ஏன் இப்படி?

சில நேரங்களில் கோபம் வருவதாலேயோ, கோபத்தில் கத்துவதாலேயோ, கொஞ்சம் களைப்பாக இருப்பதாலேயோ, சிற்சில விஷயங்கள் கவனிக்க முடியாததாலேயோ நீங்கள் குறைந்தவர்கள் ஆகிவிட மாட்டீர்கள். இந்த தடைகளை பார்க்காமல், கடக்காமல் வந்தால் நீங்களும் நானும் மனிதர்களே அல்ல... தெய்வங்களாகி விடுவோம். இவை எல்லாம் தடைகள் தானே தவிர தவறுகள் அல்ல.

இன்னும் இன்னும் செய்யணும் என்று நினைக்கும் தாய்மார்களே... இதுவே போதும் என்று நினைக்கும் தந்தை மார்களே... உங்களை விட உங்கள் குழந்தையை வேறு யாருமே நன்றாக பார்த்து கொள்ள முடியாது. உங்களை விட சிறந்த தாய் தந்தை உலகில் வேறு கிடையாது....

அதனால், உங்களை நீங்களே குறைத்து மதிபிடுவதை விடுங்கள்...

'You are the Best! You know it! Just accept it!'

. ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.