மௌனமான நேரம்

 

Saturday 27 June 2009

தாய் அன்பு

Posted by மௌனமான நேரம் | Saturday 27 June 2009 | Category: |
அழகான குடும்பம்.... கண்மணி போல ஒரே ஒரு அழகான பெண் குழந்தை.. அழகான பெயர் கூட ... மாலா...


பெற்றோர் என்றால் மாலா - க்கு கொள்ளை பிரியம்... ஆனால் அவள் பெற்றோர்க்கோ அதை விட....


அந்த குழந்தைக்கு பாசத்தையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அந்த பெற்றோர், அருமையான இன்ஜினியரிங் பட்டத்தையும் வாங்கி குடுத்தாங்க.

கல்லூரி நாட்களில் அப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் அவளுக்கு...

இப்படியாக இருக்கும் போது, வேலை தேடி பட்டணம் சென்றாள் மாலா.. சின்னதாய் ஒரு வேலையும் வாங்கினாள்.

நாட்கள் கடந்தன........


ஒரு நாள், துடியா துடித்து போனாள் அந்த செய்தி கேட்டு ... எதோ எல்லாம் இழந்ததை போல் நினைத்தாள்...


விதவை தாயை தன்னுடன் வந்து இருக்கும் படி அழைத்தாள் மாலா...


அப்போது தான் மாலா- க்கு பெரிய வேலையும் தேடி வந்தது.. மாதம் 25,000 ரூபாய் ஊதியம்... மாதம் தோறும் ஒரு காரணம் சொல்லி, ஊதியம் முழுவதும் கிடைக்க வில்லை என்பாள் மாலா...

மாலா- க்கு வரன் தேடி அலைந்தாள் அந்த அருமை விதவை தாய்... வந்த எல்லாத்தையும், எதோ காரணம் சொல்லி தட்டி கழித்தாள் மாலா. பல காரணம் சொல்லி அந்த தாய் மனதை புண் படுத்தினாள் மாலா.

முதுமை காலத்தை நிம்மதியாக கடத்த விரும்பிய தாயை, தன்னுடன் அழைக்க மறுத்தாள் மாலா. காரணம் தெரியாமல் தவித்தாள், காரணம் தெரிய துடித்தாள் அந்த தாய்.

தன் வீட்டு போன் ஒலிக்க, ஓடி போய் கேட்ட சேதி , இடி போல இருக்க, உடனே பட்டணம் கிளம்பினாள் அந்த தாய்.

பதட்டத்துடன் வீட்டுக்குள் போன தாய், மண கோலத்துல மாலா... தன் ஆசை காதலனுடன்....

தரைல விழுந்த தாய், இப்போ தன் அருமை கணவனுடன் விண்ணுலகில்.....

ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.