Friday, 19 June 2009
நமக்கு தான் இப்பவும் சரி அப்பவும் சரி எக்ஸாம் நா நாலு நாளிக்கு முன்னாலேயே உதறல் எடுக்க ஆரம்பிச்சிடும்.. என்ன தான் விழுந்து புரண்டு படிச்சாலும் எக்ஸ்ம் ஹால் உள்ள நுழைய போகும் போது தான் எதுவுமே படிக்காத மாதிரி ஒரு பயம். அப்படியே அடிச்சி பிடிச்சி படிச்சா கொஞ்சூண்டும் மறந்து போன மாதிரி வேற இருக்கும்.
காலையிலே எக்ஸாம் எழுத போற முன்னாடி எங்க கிளாஸ்-எ எறும்பு கூட்டம் மாதிரி ஒரே சுருசுருசுருசுருசுருப்பு..
கணபதி எக்ஸாம் லே நல்ல மார்க் வாங்கினா விநாயகருக்கு தேங்காய் உடைக்கறதா வேண்டிக்குவான். நம்ம காசுலேயா வாங்க போறோம்.. அப்பாக்கள் பாவம் நமக்கு ஸ்கூல் பீஸ், எக்ஸாம் பீஸ் எல்லாம் கட்டி தேங்காய்க்கும் வேற sponsor பண்ணனும்..
அதே விநாயகருக்கு நூறு தோப்புகரணம் போடறதா வேண்டிக்கறது விஜயா.. ஆனா அவ ஒரு தடவை கூட குடுத்த வாக்க காப்பதினாளான்னு தெரியலே... நான் கேட்டதும் இல்ல அவ தோப்பு கரணத்தே எண்ணினதும் இல்ல.. ஒரு வேளை 'நான் ஒரு தடவை தோப்பு காரணம் போட்டா நூறு தடவை போட்ட மாதிரின்னு' அவ விநாயகர்கிட்ட சொல்லிட்டாளோ என்னவோ.. நல்ல வேளை இது வரைக்கும் அவகிட்ட விநாயகர் 'நான் ஒரு மார்க் குடுத்தா நூறு மார்க் குடுத்த மாதிரின்னு சொல்லவே இல்லை.' அவ எப்போவுமே நல்ல மார்க் வாங்கிடுவா.
ரோஸ் . அவள் பரீட்சை எழுதும் முன்னால் எங்கள் கான்வென்ட் அருகில் உள்ள சர்ச் க்கு போய் இயேசு வுக்கு லெட்டர் எழுதி உண்டியலில் போட்டுட்டு வருவா. அவள் அதோடு பலரோட லெட்டர் உம கூட சேர்த்து போஸ்ட் செய்ததுண்டு . என்னிடம் கூட லெட்டர் இருக்கான்னு கேட்பாள். இதுலே நிறைய பேருக்கு டௌட் கூட வரும். மாதா முன்னாடி இருக்க உண்டியல் லே போடணும்னா இல்ல இயேசு முன்னாடி இருக்க உண்டியல்லே போடனுமான்னு..
சாய் தாயத்து கட்டிக்குவான் எக்ஸாம் ஆரம்பிக்கற முதல் நாள். தன் மேல் இல்லாத நம்பிக்கை தாயத்து மேல்.
இதுலே மொட்டை அடிக்கறேன். நடந்தே கோவிலுக்கு வர்றேன்... இப்படி எல்லாம் கூட நிறைய வேண்டுதல் உண்டு.
முதல் எக்ஸாம் நல்லா எழுதின அன்னக்கி போட்டிருக்க டிரஸ், பேனா, எல்லாம் கடைசி எக்ஸாம் வரை மாத்தாத காலம் கூட உண்டு ..அது ராசியான டிரஸ், பேனான்னு . ஒரு வேளை அம்மா ரொம்ப வற்புறுத்தி பிடிக்காத டிரஸ் போட்டு அன்னக்கி எக்ஸாம் நல்ல எழுதிட்டா அத தான் கடைசி நாள் வரை அழுதிட்டே போட வேண்டி வேற வரும்..
அதென்னவோ.. என்ன தான் படிச்சாலும் இப்படி சின்ன சின்ன விஷயத்துலே ஒரு நம்பிக்கை... இப்போ நினைச்சா காமெடி யா இருந்தாலும்.. அப்போ அத அவ்ளோ சிரத்தையா நம்பி பத்தாததுக்கு பக்கத்துலே இருக்கவங்களுக்கு வேற lecture அடிச்சத நினச்ச சிரிப்பு தான் வருது....
உண்மைய சொல்லனும்னா இப்போ கூட நாலு கழுதை வயசான பிறகும் (இது சும்மா எழுத்துக்கு தான் ;) அந்த நம்பிக்கைகள் கொஞ்சம் எட்டி பாக்கத்தான் செய்யுது.. என்ன அந்த வயசுலே கள்ளம் கபடம் இல்லாம எல்லார்கிட்டயும் சொன்னோம்.. இப்போ சொன்னா சிரிப்பாய்ங்கன்னு அடக்கி வாசிக்கரோம்லே...
![ulavu.com](http://ulavu.com/ulavu.com.gif)
![valaipookkal.com Tamil Blogs](http://www.valaipookkal.com/images/valaipookkal1.jpg)
தொடர்புள்ள இடுகைகள்: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: