மௌனமான நேரம்

 

Wednesday 26 August 2009

வேப்பமரத்தை சுத்தி ஹீரோயினுடன் டூயட் பாடும் விஜயகாந்த்!!

Posted by மௌனமான நேரம் | Wednesday 26 August 2009 | Category: |
தென்மண்டலத்தில் கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் வெற்றிக் கனியை பறித்து, மீண்டும் ஒருமுறை இடைத்தேர்தல் நாயகனாகியிருக்கிறார் மத்திய அமைச்சரும், தி.மு.க-வின் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி.


இடைத்தேர்தல் வெற்றி பற்றி கேட்டபோது,

".....எண்பத்தாறு வயதிலும் ஓயாத உழைப்போடும், உறுதியோடும் மக்களுக்காக நல்லாட்சி நடத்தும் தலைவர் கலைஞர் ஒருபக்கம்...



'ஜனநாயகம் செத்துப் போச்சு, அராஜகம் அதிகமாகிப் போச்சு' என்று கூப்பாடு போடும் ஜெயலலிதாவும், அந்தம்மாவுக்கு கைத்தடியா வைகோ, ராமதாஸுன்னு சிலரும் இன்னொரு பக்கம்...

இவங்களுக்கு மத்தியில், வயசான பிறகும் ஹீரோ வேஷம் போட்டுக்கிட்டு வேப்பமரத்தை சுத்தி ஹீரோயினுடன் டூயட் பாடிக்கிட்டிருக்கிற விஜயகாந்த் ஒருபக்கம்... இந்தத் தேர்தலில் தி.மு.க-வை தோற்கடிக்க பலரும் அணி அணியா திரண்டு நின்னாங்க. எல்லாத்தையும் மீறி நடுநிலைமையா நின்னு மக்கள் கொடுத் துட்டாங்களே, தீர்ப்பை..!



தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தோளிலேயே மாறி மாறி சவாரி செய்த கம்யூனிஸ்ட்களின் உண்மையான பலமும் இந்தத் தேர்தலில் தெரிந்துவிட்டது. மொத்தத்தில் உண்மை எது, பொய் எதுன்னு மக்கள் பகுத்துப் பார்த்து ஓட்டுப் போட்டிருக்காங்க. இந்த வெற்றி தந்த உற்சாகம், இன்னும் நூறு தேர்தலை சந்திக்கும் தெம்பையும், உற்சாகத்தையும் தந்திருக்கு...''


ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.