Thursday, 20 August 2009

ஒரு நாட்டை ஆளும் அதிகாரத்தை வைத்திருத்தல், மக்களிடையே பிரபலமாக இருத்தல், அரசியலில் தலைமை கொண்டிருத்தல், அதிகார நிலை மற்றும் மிகப் பெரிய நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளில் செல்வாக்குப் பெற்றிருத்தல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்க பட்டுள்ளது.
அதன்படி முதல் மூன்று இடத்தின் விவரம் வருமாறு:
முதலிடம்: ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலோ மார்கல் (தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்)
இரண்டாம் இடம்: ஃபெடரல் டெபாசிட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஷெய்லா பாயிர்.
மூன்றாவது இடம்: அமெரிக்கா வாழ் இந்தியரும், பெப்சிகோ நிறுவன தலைமை அதிகாரியுமான இந்திரா நூயி.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 28-வது இடமும், அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செலி ஒபாமா 44-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் 42-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 3 பெண்கள் இம்முறை இப்பபட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.


தொடர்புள்ள இடுகைகள்: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: