மௌனமான நேரம்

 

Friday 21 August 2009

ராஜீவ் காந்தியின் 65-வது பிறந்த நாள்

Posted by மௌனமான நேரம் | Friday 21 August 2009 | Category: |
மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியின் 65-வது பிறந்த நாள் வியாழக்கிழமை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

டெல்லி வீர பூமியில் அமைந்துள்ள ராஜீவ் சமாதியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவரும் ராஜீவ் காந்தி மனைவியுமான சோனியா காந்தி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். மகன் ராகுல், மகள் பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதரா ஆகியோரும் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.



மக்களவைத் தலைவர் மீரா குமார், தில்லி துணைநிலை ஆளுநர் தேஜெந்திர கன்னா, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் மூத்த தலைவர்கள் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.


ராஜீவ் காந்தியின் நினைவிடம் வெள்ளைத் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


ஏழை மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் பிறந்த நாளை கொண்டாடினர்.


கோட்டை வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் கருணாநிதி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.