மௌனமான நேரம்

 

Tuesday 25 August 2009

மைக்கேல் ஜாக்சன் சாவுக்கு காரணம் என்ன?

Posted by மௌனமான நேரம் | Tuesday 25 August 2009 | Category: |
உலகப்புகழ் பெற்ற பிரபல பாப் பாடகர் ஜாக்சன் (வயது 50). கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி மரணம் அடைந்தார். சாவுக்கு அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே கொடுத்த மருந்தே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து டாக்டர் முர்ரேயின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மைக்கேல் ஜாக்சன் தூங்க செல்வதற்கு முன்பு மயக்கம் தரக்கூடிய அதிசக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது வழக்கம் என்பது குறித்த ஆவணங்கள் அங்கு கைப்பற்றப்பட்டன.

மைக்கேல் ஜாக்சனின் உடலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தலைமை பிரேத பரிசோதகர் டாக்டர் சத்யவாகீஸ்வரன் பிரேத பரிசோதனை நடத்தினார்.

டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் - ஜாக்சன் உடலில் மருத்துவ தடயவியல் சோதனைகளைச் செய்த டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஆவார்.



அவர், ஜாக்சன் உட்கொண்டிருந்த மருந்து மாத்திரைகளில் உள்ள விஷத்தன்மை குறித்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த அறிக்கையும், டாக்டர் முர்ரேயின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் ஹூஸ்டனில் உள்ள மாவட்ட கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

அதில், அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் என்று லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் அறிக்கை தெரிவித்துள்ளது.


இதன் மூலம் ஜாக்சன் மரண வழக்கை கொலை வழக்காக லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸார் மாற்றவுள்ளனர்.

இதையடுத்து ஜாக்சனின் டாக்டர் கான்ராட் முர்ரேவுக்கு எதிராக கலிபோர்னியா கோர்ட் தேடுதல் வாரண்ட்டை பிறப்பித்துள்ளது. அந்த வாரண்ட் உத்தரவில், லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் அதிகாரி டாக்டர் சத்யவாகீஸ்வரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கு அதிக அளவிலான, அபாயகரமான புரோபபால் மருந்து கொடுக்கப்பட்டதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜாக்சன் மரண வழக்கு கொலை வழக்காக மாறுகிறது. டாக்டர் கான்ராட் முர்ரே கைது செய்யப்படவுள்ளார்.


ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.