Wednesday, 12 August 2009
பன்றி காய்ச்சலை தடுக்க தேவை ரூ 1. 50 மட்டுமே!!
Posted by மௌனமான நேரம் | Wednesday, 12 August 2009 | Category:
செய்தி
|

இந்நோய் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நோய் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளிடம் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் மருத்துவப் பரிசோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், இந்நோய் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்துக்கொள்வதும், அதிலிருந்து நம்மை நாமே வருமுன் காப்பதும் முக்கியம்.

1930-ல் முதன் முறையாக பன்றி இனங்களில் இந்நோய் கண்டறியப்பட்டது என்றாலும், இன்றும் முழுமையான எதிர்ப்பு மருந்துகள் கண்டறியப்பட வில்லை என்பது தான் உண்மை.
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் என்ன? : உடல் சூடாதல், உடல் பலவீனம், வலி, தொண்டைப் புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்.
இந்தியாவில் அதிகம் பாதிக்க பட்ட பகுதி: மும்பை, புனே நகரங்கள் அதிகம் பாதிக்க பட்ட பகுதியாக சொல்ல படுகிறது.
பன்றி காய்ச்சலை இலவசமாக தடுப்பது எப்படி?
* கை குலுக்குவதையும், கட்டி தழுவதுவையும் தவிர்க்கவும்.
* நோய் பாதிப்பு உள்ளவர்களை நேரடியாக தொட்டு பேசக்கூடாது. அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.
* கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
பன்றி காய்ச்சலை ரூ 1. 50 -ல் தடுப்பது எப்படி?
பன்றி காய்ச்சலை தடுக்க தேவை ரூ 1. 50 மட்டுமே என்றால் ஆச்சர்யமா இருக்கா?



தொடர்புள்ள இடுகைகள்: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: