மௌனமான நேரம்

 

Saturday 29 August 2009

எப்படியாவது பிரதமர் பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற பேராசை அத்வானிக்கு - ஜஸ்வந்த் சிங்

Posted by மௌனமான நேரம் | Saturday 29 August 2009 | Category: |
"அவுட்லுக்' என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில் ஜஸ்வந்த் சிங்,

"....எப்படியாவது பிரதமர் பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற பேராசை அத்வானிக்கு இருந்தது. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வது என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.

பார்ப்பதற்கே வினோதமாக இருந்த ஒருவர் பையில் கட்டுகட்டாக பணம் எடுத்துவந்தார். அவையெல்லாம் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காகக் கொடுத்தவை என்று கூறப்பட்டது. சுதீந்திர குல்கர்னி அந்த நபருடன் இருந்தார். அந்த நபரைப் பற்றிக் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட அத்வானி, ""இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டுபோய் மக்களவையில் அப்படியே காட்டுங்கள்'' என்று அந்த 3 உறுப்பினர்களிடம் கூறிவிட்டார்.

ஆளும் கூட்டணி அரசைக் கவிழ்ப்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர் அவசரப்பட்டதைப் போலவே தெரிந்தது.

தலைமைப் பதவிக்கு வர நினைப்பவர்களுக்கு இவையெல்லாம் அழகு அல்ல என்பதை அவர் உணரவில்லை. அந்தப் பணம் அப்படியே ஆளும் கூட்டணி தரப்பிலிருந்து தரப்பட்டிருந்தாலும் முதலில் அதை மக்களவைத் தலைவரிடம் கூறி, அவரின் கவனத்துக்குக் கொண்டுவந்துவிட்டு அவர் என்ன கூறுகிறாரோ அதன்படி செயல்பட்டிருக்கலாம்.

மக்களவைத் தலைவர் பாரபட்சமாக நடந்து கொண்டுவிடுவார் என்ற அச்சம் இருந்திருந்தால் அந்தப் பணத்தை அவைக்குக் கொண்டுவந்துவிட்டு, அதைப் பற்றிப்பேசி புகார் தெரிவித்துவிட்டு பிறகு அவையின் தலைவரிடம் ஒப்படைத்திருக்கலாம்.

இதனால் மக்களவையின் மாண்பும் நாட்டின் மரியாதையும் காப்பாற்றப்பட்டிருக்கும். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான என்னிடம் கூட ஆலோசனை கலக்காமலேயே அத்வானி இதைச் செய்தார்.

ராணுவத்தில் தளபதிகளுக்குக் கூறப்படும் இலக்கணமே வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் முன்னணியில் நின்று அதை ஏற்பதுதான். அத்வானிக்கு அந்த குணமே கிடையாது. தவறு நடந்தது என்றால் அந்தப் பழி தன் மீது வந்துவிடக்கூடாது என்று நினைப்பார். நெருக்கடி வந்தால் மௌனம் சாதிப்பார் அல்லது பொறுப்பை யார் மீதாவது சுமத்திவிடுவார்.

ராஜ்நாத் சிங் ஒரு மாநிலத்துக்குத்தான் கட்சித் தலைவராக இருக்கத் தகுதியானவர். அவரை தேசியத் தலைவராக்கியது தவறு.

பாரதிய ஜனதா அரசியல் கட்சியாகவே இல்லை. ஒரு வழிபாட்டுக் கூட்டம், தலைவன் சொல்படி செயல்படும் கும்பல் என்ற அளவுக்குச் சுருங்கிவிட்டது. ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமான சொத்துபோல ஆகிவிட்டது.

நான் வெளிநாடு சென்றிருந்தபோதுதான் பாகிஸ்தானுக்கு இந்திய விமானங்கள் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, எல்லைகளில் நமது துருப்புகள் கொண்டுபோய் நிறுத்தப்பட்டனர். நான் அவ்விரு முடிவுகளையும் ஏற்கவில்லை.

எல்லை பாதுகாப்புப் படையினரை வங்கதேசத்துக்குள் அனுப்புவது என்ற முடிவும் என்னைக் கேட்காமலேயே எடுக்கப்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் இறந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவரை மூங்கிலில் கட்டி தூங்கிவந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு மனம் பதைத்தேன். எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) என்பது உள்துறை அமைச்சகத்தின் கட்டளைப்படிதான் செயல்படும். வங்கதேசத்துக்கு பி.எஸ்.எஃப்-பை அனுப்பியது யார் என்று நான் கேட்டதற்கு எனக்குக் கடைசி வரையில் பதிலே சொல்லவில்லை.." என்றார் ஜஸ்வந்த் சிங்.
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.