Saturday, 22 August 2009
முத்த சர்ச்சை நாயகி நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் ஒரு முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு முன்பு ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கிரே, பொது மேடையில் ஷில்பாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்போது சாமியார் ஒருவர் கோயிலில் வைத்து ஷில்பாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்த விவகாரம் சர்சைக்குள்ளாகி இருக்கிறது.
மும்பை அருகே உள்ள போவய் பகுதியில் சஹி கோபால் ஆலயத்துக்கு சமீபத்தில் ஷில்பாஷெட்டி சென்றார். சிறப்பு பூஜைகளை செய்த அவர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கோயில் சாமியார் ஷில்பாவுக்கு முத்தம் கொடுத்தார். ஏராளமான பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் சாமியார் இப்படி நடந்து கொண்டது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் ஷில்பாவோ எதுவுமே நடக்காதது போல கோயிலில் இருந்து திரும்பினார்.
இதையடுத்து புனிதமான இடத்தில் சாமியாரை முத்தமிட வைத்து புனிதத்தை கெடுத்து விட்டதாக ஷில்பா ஷெட்டி மீது வழக்கு தொடரவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதுபற்றி ஷில்பா ஷெட்டி கூறுகையில், மகன்களுக்கோ, மகள்களுக்கோ தந்தை முத்தம் கொடுப்பதில்லையா? என்று ஆவேசப்பட்டார்.
தொடர்புள்ள இடுகைகள்: சினிமா


.jpg)


0 பின்னூட்டங்கள்: