Tuesday 18 August 2009
இயற்கைக்கு எதிராக செயற்கையின் சா(சோ)தனை!!
Posted by மௌனமான நேரம் | Tuesday 18 August 2009 | Category:
செய்தி
|
செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மூலம் அவர் 12 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இதில், 6 ஆண் குழந்தைகள், 6 பெண் குழந்தைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே பிரசவத்தில் 12 குழந்தைகள் பிறக்கவுள்ள மகிழ்ச்சியில் அந்தத் தம்பதியினர் உள்ளனர். எனினும், அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் செயல் பொறுப்பற்றதாக உள்ளது என்று ஏனைய செயற்கைக் கருவூட்டல் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அந்த பெண்ணிற்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுளளனர்.
இதே கருத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் சைமன் பிஃஷர் கூறியுள்ளார்.
தனது மனைவி சுகப்பிரசவம் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்வார் என்று அவரது கணவர் கூறியுள்ளார். எனினும், இது சாத்தியமில்லாதது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
12 குழந்தைகளையும் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிரசவிக்க கடுமையாக முயற்சித்து வருகின்றனர் அந்த பொறுப்பற்ற(?) டாக்டர்கள்.
இது குறித்து பிரசவ நிபுணர் டாக்டர் மேன்னி ஆல்வரெஸ் கூறுகையில்,கருவில் பல குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அனைத்தையும் காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகமே. பொதுவாக ஒரு கருவில் ஐந்து குழந்தைகளுக்கு மேல் இருப்பது மிகவும் ஆபத்தானது. கருவில் இருக்கும் குழந்தைகளை பெரும்பான்மையானவற்றை அவர் பெற்றெடுத்தாலே அவரது உடல்நிலை கவலைக்கிடமாகி விடும்.சில காலத்துக்கு மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இவரை போன்ற பெண்மணிகளுக்கு குறைபிரசவம் உண்டாகும் வாய்ப்பும் அதிகம் என்றார்.
இது இயற்கைக்கு எதிராக செயற்கையின் சா(சோ)தனையாக இருக்குமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்..
தொடர்புள்ள இடுகைகள்: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: