மௌனமான நேரம்

 

Tuesday 11 August 2009

அவசர அவசரமா பாலிசி மாற்றம் செய்யும் சாப்ட்வேர் நிறுவனங்கள்!!

Posted by மௌனமான நேரம் | Tuesday 11 August 2009 | Category: |
உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கிடப்பதால், பல நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் வேலையிழப்போர் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும், மாற்றம் தெரிவது போன்ற தோற்றம் இருந்தாலும், இன்னும் நிலைமை சரியாக வில்லை என்பதுதான் உண்மை.

இப்படி வேலை இல்லா திண்டாண்டம் அதிகரித்து கொண்டு இருக்க, இதை எல்லாம் சில சாப்ட்வேர் நிறுவனங்கள் வேறு விதமாக பயன்படுத்த தொடங்கி விட்டன. அது கஷ்டப்பட்டு வேலையை தக்க வைத்திருக்கும் மீதமிருக்கும் ஊழியர்கள் மேல் பாய தொடங்கி இருக்கிறது. இது தான் கொஞ்சம் வேதனை தரும் விஷயம்.




என்ன முழிக்கிறேங்க !!! ஆமாங்க .... அதற்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் எடுத்து இருக்கும் ஆயுதம் தான் Human Resources Policy ("HR Policy") மாற்றம்.


மாற்று வேலைக்கு வாய்ப்புகள் குறைவு என்பதால் அவசர அவசரமாக சில சாப்ட்வேர் நிறுவனங்கள் ஏற்கனவே தீர்மானம் செய்து பிரகடன படுத்த முடியாத பணியாளர் சாதகமில்லாத கிடப்பில் போடப்பட்ட பல திட்டங்களையும் தூசி தட்டி எடுத்து பாலிசி மாற்றம் என்ற பெயரில் தங்களுக்கு மேலும் சாதகமாக்கி செயல் படுத்த தொடங்கி விட்டன. இது ஊழியர்களை மேலும் கவலை அடைய செய்கிறது.

என்ன கொடுமைடா சரவணா ?

அந்த கொடுமைகளில் எனக்கு தெரிந்த, கேள்வி பட்ட சில .....


1) பதவி உயர்வு நிறுத்தி வைப்பு.


2) பதவி உயர்வுக்கு காத்திருக்கும் காலம் நீட்டிப்பு. இதனால் ஏற்கனவே பதவி உயர்வுக்கு காத்திருப்பவர்கள் மேலும் சில காலம் காத்து இருக்க வேண்டும்.


3) ஏற்கனவே அளித்து வந்த பணியாளர் நல (Employee Welfare Benefits) சலுகைகள் குறைப்பு அல்லது சலுகைகள் ஒரேயடியாக நிறுத்தி வைப்பு.


4) சம்பளம் இல்லா கட்டாய விடுப்பு (உதாரணமாக 30 Days in a Year)


5) Organization restructuring என்ற பெயரில் De-promotion policy. (Demotion Policy)


6) உள் கட்டமைப்பு வசதியை ஊபயோகிக்க தன் ஊழியர்களிடம் இருந்தே வாடகை திட்டத்தை அமல்படுத்துவது. (உதாரணமாக Car Parking charges)



பொருளாதாரம் வீழ்வது மாறி, மீள ஆரம்பித்த பின்... HR பாலிசியும் வீழ்வது மாறி மீளுமா?



மீளாது என்பது தான் உண்மை!!!

InformIT (Pearson Education)

ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.