மௌனமான நேரம்

 

Wednesday 19 August 2009

பாவிகள்!!!

Posted by மௌனமான நேரம் | Wednesday 19 August 2009 | Category: |
பீகார் மாநிலம் பாட்னா அருகே பிட்டா ரயில் நிலையத்தில், டெல்லி - பாட்னா சிரஞ்சீவி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகளுக்கு மாணவர்கள் சிலர் இன்று தீ வைத்தனர். ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிலருக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரமடைந்த மாணவர்கள், தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் இரண்டு ஏசி ரயில் பெட்டிகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியது.

மாணவர்கள் சிலர் அந்த ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாகவும், அதனை ரயில்வே பாதுகாப்புப் படையினர் தட்டிக்கேட்டபோது, வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய மாணவர்கள், 2 ஏ.சி பெட்டிகளுக்கும் தீ வைத்தனர். இதில் மொத்தம் 4 பெட்டிகள் எரிந்து சாம்பலாயின. பயணிகளின் ஏராளமான உடமைகளும் எரிந்து நாசமாயின.

இந்த மோதலில் ஆர்.பி.எஃப் காவலர்கள் மாணவர்களை அடித்ததில், சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் பாவிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அந்த தண்டனை பொது சொத்துக்கு சேதம் விளைவிக்க எண்ணுவர்க்கும் படமாக இருக்க வேண்டும். என்றைக்கு தான் இந்த பாவிகள் திருந்த போகிறார்களோ!!



ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.